Sidebar

16
Tue, Apr
4 New Articles

202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா?

இவ்வசனத்தில் (86:1) தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்றால் என்ன என்று அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது.

அனைவரும் அன்றாடம் பார்க்கக் கூடிய, அனைவரும் அறிந்து வைத்திருக்கக் கூடியதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. தாரிக் என்பதற்கு வேறு அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதற்காகவே அது ஒளிவீசும் நட்சத்திரம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வசனத்துக்கு நவீன காலத்துக்கு ஏற்ப விளக்கம் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு சிலர் புது விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது சப்தமிடக் கூடியது என்பது இதன் பொருள் என்றும், நட்சத்திரங்களில் சப்தமிடக் கூடியவை இரண்டு லட்சத்துக்கு மேல் உள்ளதாகவும், அதைத் தான் இவ்வசனம் கூறுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

திருக்குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இவ்வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் அறிவியல் விளக்கம் ஏற்புடையதல்ல. தாரிக் என்பது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. சப்தமிடும் இரண்டு லட்சம் நட்சத்திரங்களைக் குறிப்பிடுவதாகச் சொல்வது வலிந்து திணிக்கப்பட்ட கற்பனையாகவே தெரிகிறது.

மேலும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, மக்களின் கண்களுக்குத் தென்படாத நட்சத்திரங்களை இச்சொல் குறிக்கவில்லை. மக்கள் பார்க்கும் வகையில் ஒளி வீசும் விடி வெள்ளியையே இது குறிக்கிறது. இதை அடுத்த வசனம் தெளிவாகச் சொல்கிறது.

எனவே தான் சப்தமிடும் நட்சத்திரம் என்று நாம் பொருள் கொள்ளவில்லை. தாரிக் என்பதற்கு கதவைத் தட்டுதல், சம்மட்டியால் தட்டுதல் என்ற பொருள் இருப்பது போல் திடீரென்று தோன்றுதல், எதிர்பாராமல் வருதல், யாருக்கும் தெரியாமல் வருதல் என்று பல அர்த்தங்கள் உள்ளன. ஆனால் இந்த இடத்தில் சப்தமிடும் நட்சத்திரம் என்பது பொருந்தாது.

மேலும் சப்தமிடுதல் என்ற தன்மை காற்று மண்டலம் இருந்தால் தான் வெளிப்படும். சூரியனிலோ, இன்னபிற நட்சத்திரங்களிலோ காற்று இல்லை. எனவே அவை சபதம் போட முடியாது; அதைப் பதிவு செய்யவும் முடியாது.

சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் வெடித்துக் கிளம்பும் தீக்குளம்புகள் சப்பதமிட்டுவதாக இருந்தால் அந்தச் சப்தம் எப்படி இருக்கும் என்று கற்பணையாக நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி அதை வெளியிட்டுள்ளனர். இந்த சப்தம் மெய்யான சப்தம் அல்ல. காற்று இருந்தால் அந்த சப்ததத்தின் அளவு எப்படி இருக்கும் என்று கற்பனையாக உருவாக்கப்பட்டதாகும்.

எனவே நட்சத்திரங்களில் சப்தம் இல்லை எனும் போது சப்தமிடும் நட்சத்திரம் என்று மொழி பெயர்த்து விஞ்ஞான முலாம் பூசுவது தவறாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account