310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு
இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனிவர்க்கமும் முளைக்காத பாலை வனப் பெருவெளியாக இருந்தது. இன்றும் அப்படித் தான் இருக்கிறது.
இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் என இவ்வசனம் (28:57) முன்னறிவிப்புச் செய்கிறது. இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காண முடியும்.
உலகத்தில் உள்ள எல்லா விதமான கனிவகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நவீன உலகில் உலகம் சுருங்கிய இந்தக் காலத்தில் மட்டுமின்றி ஒரு பகுதியில் உற்பத்தியாகும் பொருள் உலகமெல்லாம் கிடைக்க முடியாத காலத்திலும் இந்த அற்புதம் நடக்கிறது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக இது நடந்து வருகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் இறைவேதம் என்பதை நிரூபிக்கும் சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.
310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode