▶️போதுமான வருமானம் இருக்கும்போது மார்க்க கல்வி கற்றுக்கொடுக்க காசு வாங்கலாமா?
போதுமான வருமானம் இருக்கும்போது மார்க்க கல்வி கற்றுக்கொடுக்க காசு வாங்கலாமா?
போதுமான வருமானம் இருக்கும்போது மார்க்க கல்வி கற்றுக்கொடுக்க காசு வாங்கலாமா?
பேச்சாளார் பயிற்ச்சி
அதிக மதிப்பெண் போதை
2013 ஆம் ஆண்டு பீஜே எழுதியது
கேள்வி
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது?
பதில்
இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில ஆசைகளும், தேவைகளும் உள்ளன.
உடலை வலுவாக வைத்திருக்க துணைபுரியும் விளையாட்டுக்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குதல், போதுமான தூக்கம், தேவையான ஓய்வு, குறித்த நேரத்தில் சாப்பாடு என்று அனைத்தையும் வழக்கம்போல் செய்து கொண்டு படிக்கவும் வேண்டும். ஆடல், பாடல், சினிமா போன்ற பயனற்றவைகளைத் தவிர்க்கலாமே தவிர எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கப் பழக்கப்படுத்தக் கூடாது.
பிள்ளைப் பருவத்தின் சந்தோஷங்களைக் கெடுத்து முதல் மதிப்பெண் தான் லட்சியம் என்று போதிக்கப்படுவதாலும், அனைவரும் இதை ஊக்குவிப்பதாலும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இதை அவமானமாகக் கருதி தற்கொலையும் செய்கிறார்கள்.
சில பெற்றோர்கள் அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால், நடப்பதே வேறு என்று எச்சரித்து பயம் காட்டுவதாலும், மதிப்பெண் குறைவாகப் பெறும்போது, தற்கொலை செய்ய மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதுபோல் வெறியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
படிப்பில் ஆர்வமூட்டி அவனது நினைவாற்றலுக்கு ஏற்ப எடுக்கும் மதிப்பெண்களைப் பெற்றோரும் பொருந்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் பொருந்திக் கொள்வார்கள் என்பதை அந்த மாணவனுக்கு உணர்த்த வேண்டும்.
அதிக மதிப்பெண் குறித்த இன்னும் சில உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மறைந்துள்ள மர்மங்களை அறிந்து கொண்டால் அதிக மதிப்பெண் என்ற வெறிபிடித்து அலைவது ஒழிந்துவிடும்.
நமது நாட்டில் உள்ள கல்வி முறையில் திறமைக்கோ, சிந்திக்கும் திறனுக்கோ மதிப்பெண்கள் போடுவதில்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குத் தான் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. புரியாமல் மனப்பாடம் செய்திருந்தால் கூட அதை எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும்.
இதன் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க இந்த மனப்பாடமும் அதனால் கிடைத்த மதிப்பெண்களும் உதவாது.
மொழியறிவும், சிந்திக்கும் திறனும் உடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆனவர் தான்.
கடந்த 20 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டிப் பாருங்கள். அவர்கள் அனைவருமே நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த எஞ்சீனியராக, சிறந்த பேராசிரியராக இருக்கிறார்களா? ஓரிருவர் அப்படி இருப்பார்களே தவிர, மற்றவர்களால் பிரகாசிக்க இயலவில்லை என்பதை அறியலாம்.
அதே நேரத்தில் முதல் நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களிடம் நீங்கள் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவரா என்று விசாரித்துப் பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் சராசரியான மதிப்பெண் பெற்றவராகவே இருப்பார்கள்.
எனவே மதிப்பெண்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமே திறமைக்கும், அறிவுக்கும் ஒரே அடையாளம் அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மனப் பாடத்திற்காகத்தான் மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பது கூட முழுமையான உண்மை அல்ல. அது ஓரளவுக்குத்தான் உண்மை.
100 கேள்விகளிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் என்பதற்காக 100 கேள்விகளுக்கான விடைகளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள்.
அதில் ஒரு மாணவன் 95 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்துவிட்டான். ஆனால் கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் எட்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்ததாகவும், இரண்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்யாத ஐந்து கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டால் அவனுக்கு 80 சதவிகித மதிப்பெண்தான் கிடைக்கும்.
இன்னொரு மாணவனோ 70 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்தான். கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த 70க்குள் அடங்கியிருந்தால் அவன் 100 சதவிகித மதிப்பெண் பெறுவான்.
அதாவது 95 சதவிகிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 80 மதிப்பெண்களும், 70 சதகிவிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 100 மதிப்பெண்களும் கிடைக்கிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சில நேரங்களில் இந்தத் தரத்திலும் இருப்பார்கள்.
இதில் திறமை மட்டுமின்றி, மனப்பாடத் திறனும் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. நாம் மனப்பாடம் செய்ததில் கேள்விகள் அமைவதைப் பொருத்துத்தான் இது முடிவு செய்யப்படுகிறது.
அதாவது வாய்ப்புக்கள் தான் இதைத் தீர்மானிக்கின்றன. தினசரி வகுப்புகளிலும், டெஸ்டுகளிலும் முதலிடத்தில் வந்த சில மாணவர்களின் மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் முந்திவிடும் அவலத்திற்கும் இதுதான் காரணம்.
இது போக மதிப்பெண்கள் போடக்கூடியவர்களின் குணநலன்களும் இதைத் தீர்மானிக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதியவனின் விடைத்தாள் கஞ்சத்தனம் செய்யும் ஆசிரியரின் கைக்குக் கிடைத்தால், அவனுக்கு கிடைக்க வேண்டியதை விடக் குறைவான மதிப்பெண்ணே கிடைத்திருக்கும். சுமாராக எழுதியவனின் விடைத்தாள் தாராள சிந்தனை கொண்டவர்களிடம் போனால், அவன் எதிர்பார்த்ததை விட கூடுதல் மதிப்பெண்ணுடன் முதலாமவனை இவன் முந்திவிடுகிறான்.
விடைத்தாள்களை யார் திருத்துகிறார்கள் என்பதும் இதைத் தீர்மானிப்பதால் திறமைக்கும் மனப்பாடத்திற்குமான அடையாளமாக மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.
என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசித்து நேரத்தை வீணாக்க விரும்பாத ஆசிரியர்கள் அதிக வரிகளுக்கு அதிக மதிப்பெண்களும், குறைந்த வரிகளுக்கு குறைந்த மதிப்பெண்களும் போட்டு கடமையை நிறைவேற்றுவதும் உண்டு.
முன்னாள் முதல்வரின் கைங்கரியத்தால், கண்பார்வை குறைந்த, ஊனமானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்படுகின்றனர். கண்ணுக்கு அருகில் வைத்தால் கூட எழுத்தைச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள், தேர்வுத்தாளைத் திருத்தினால், அவரது மனநிலையைப் பொருத்து, கீழே உள்ளவன் மேலே வருவான். மேலே வர வேண்டியவன் கீழே போய் விடுவான். இப்படியும் மதிப்பெண்கள் போடப்படுகின்றன.
இது தவிர சில தனியார் பள்ளிகள் தங்கள் பெயரைத் தக்க வைப்பதற்காக, கேள்வித்தாளுடன் விடைகளையும் கொடுத்து, விடை எழுத ஆசிரியர்கள் துணை செய்வதும், மேற்பார்வையாளர்களுக்குப் பெருந்தொகை கொடுத்து சரிக்கட்டுவதும் நடப்பது உண்டு.
எப்போதுமே நாமக்கல் மாவட்டத்தினரைச் சேர்ந்தவர்களே முதல் இடங்களைப் பிடித்து வருகின்றனர். இது ஏன் என்று ஆய்வு செய்த போது நாமக்கல்லில் இந்த மோசடி நடப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த ஆண்டு (2013) சிறப்புப் பறக்கும் படை அமைத்து மாணவர்கள் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்து பள்ளிக்கூட அனுமதியையும் ரத்து செய்தன. சில பள்ளிகள் அப்படியும் தப்பித்து விட்டன. முதல் இடங்களைப் பிடிக்கும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க சில பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர்.
எனவே கோடி கோடியாகக் கொள்ளையடிக்க உதவும் என்பதால், ஆசிரியர்களே தில்லுமுல்லு செய்து சராசரி மாணவனை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள். இவ்வளவும் சில நேரங்களில் முதல் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கின்றன.
மனப்பாடம் செய்தால் நிச்சயம் சிறந்த மதிப்பெண் என்பதற்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, இடம் பெறும் கேள்விகளும், திருத்தக்கூடிய ஆசிரியர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் தான் இதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டால் மதிப்பெண்ணுக்காக அளவற்ற தியாகங்களைச் செய்ய மாட்டார்கள்.
மாணவர்கள் உண்ணாமலும், உறங்காமலும், சிறுபிள்ளைத் தனங்களைச் செய்யாமலும் எந்திரத் தன்மையுடன் வளர்க்கப்படுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது. எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டு உயர் கல்வி கற்பதற்கான மதிப்பெண்களை எடுக்கும் அளவுக்கு பாடுபடுங்கள் என்று ஆர்வம் ஊட்டுவதே போதுமானது.
முதல் 10 இடம் என்பதெல்லாம் லட்சியம் இல்லை. எல்லா உயர்கல்வி இடங்களும் முதல் 10 இடத்திற்கு வந்தவர்களைக் கொண்டு மட்டும் நிரப்பப்படுவதில்லை. அந்தப் பத்துப் பேருக்கு ஒதுக்கியது போக எஞ்சிய இடங்கள் அடுத்தடுத்த மதிப்பெண் எடுத்தவர்களைக் கொண்டுதான் நிரப்பப்படும். இதை அனைவரும் உணர்வது நல்லது.
11.06.2013. 1:58 AM
குர்ஆனின் அர்த்தத்துக்கு ஏற்ப சைகை செய்து கற்பிக்கலாமா
15/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்
எப்போது இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்
உணர்வில் ஏன் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் போடுவதில்லை?
- அபூ ஜாஹீர், பத்தா, ரியாத்
இன்ஷா அல்லாஹ் என்பதை எப்போது சொல்ல வேண்டும் என்பதில் மக்கள் மத்தியில் அறியாமை நிலவுகிறது. பொருத்தமில்லாத இடங்களில் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்துவதுடன் மற்றவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எந்த இடங்களில் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடங்களில் நாம் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்தியே வருகிறோம்.
அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 18:24,25
நான் இதைக் கட்டாயம் செய்வேன் என்று கூறும் போது தான் இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும். மேலும் நாம் பேசும் விஷயம் எதிர்காலம் பற்றியதாக இருக்க வேண்டும். இந்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு மார்க்கத்தில் வழிகாட்டுதல் இல்லை என்பதை மேற்கண்ட வசனங்களில் இருந்து அறியலாம்.
மனிதன் மரணித்தே தீருவான் என்றோ அப்துல்லா மரணித்தே தீருவார் என்றோ கூறினால் அதற்கு இன்ஷா அல்லாஹ் கூறக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் நாட்டம் இதில் நமக்கு சொல்லப்பட்டு விட்டது.
நாளை வருவதாக அப்துல்லா சொன்னார் என்பதில் இன்ஷா அல்லாஹ் கூறுவது அர்த்தமற்றது. ஒருவர் சொன்னதை நாம் எடுத்துக் காட்டுகிறோமே தவிர நமது செயலைப் பற்றி கூறவில்லை.
வெள்ளிக்கிழமை பெருநாள், சனிக்கிழமை நோன்பு என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதைக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூறுவதும் பொருளற்றது. வெள்ளிக்கிழமை நான் பெருநாள் கொண்டாடுவேன் எனக் கூறினால் அதற்கு இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும்.
நேற்று கூட்டம் நடந்தது. இப்போது கூட்டம் நடக்கிறது என்று சென்ற கால அல்லது நிகழ்கால வினையாகப் பயன்படுத்தினால் அதற்கும் இன்ஷா அல்லாஹ் கூறக் கூடாது. ஏனெனில் இது இறைவன் நாட்டப்படி நடந்து விட்டது அல்லது நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிவதால் அல்லாஹ் நாடினால் என்று கூறக்கூடாது. இது எதிர்காலம் பற்றியது அல்ல.
வெள்ளிக்கிழமை பிறை பார்த்ததால் ஞாயிற்றுக் கிழமை பெருநாள் என்று உணர்வில் அறிவிப்பதில் இன்ஷா அல்லாஹ் போட மாட்டோம். இறைவன் நாட்டப்படி முதல் பிறை தென்பட்டதால் தான் ஞாயிறு பெருநாள் என்கிறோம்.
அது போல் தெளிவான சட்ட திட்டங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் கூறக் கூடாது. லுஹருக்கு இன்ஷா அல்லாஹ் நாலு ரக் அத் எனக் கூறகூடாது. திருடினால் இன்ஷா அல்லாஹ் கையை வெட்ட வேண்டும் என்று கூறக்கூடாது
இப்படி எங்கே இன்ஷா அல்லாஹ் போட வேண்டுமோ அங்கெல்லாம் போட்டுத்தான் வருகிறோம். அப்படி விடுபட்டால் குறிப்பாக சுட்டிக் காட்டுங்கள். விடுபட்டிருந்தால் திருத்திக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
16.12.2011. 9:11 AM
பாலியல் கல்வி தேவையா?
கேள்வி: 'பாலியல் கல்வி' தேவைதானா....?
நம் மார்க்கம் அது பற்றி என்ன சொல்கிறது?
- பருத்தி இக்பால், மேலப்பாளையம்
எல்லாவற்றையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரும் கற்றுக் கொடுக்காமலே மனிதன் தானாகக் கற்றுக் கொள்ளும் விஷயங்களில் பாலியல் முதலிடத்தில் உள்ளது.
மேலும் இது அனைவருக்கும் ஒரே வயதில் தேவைப்படாது. அவர்களின் உடற்கூறையும் ஆசைகளையும் பொருத்து இது ஆளுக்கு ஆள் வேறுபடும்.
ஒரு பெண்ணுக்கு 13 வயதில் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் வருவதால் அனைத்து பெண்களுக்கும் அதையே நிர்ணயிக்க இயலாது.
அவரவருக்கு எப்போது தேவைப்படுமோ அப்போது அவர்களின் வயது அதைக் கற்றுக் கொடுத்து விடும்.
மேலும் பாலியல் கல்வி என்று வரும் போது ஆண் ஆசிரியர், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் போது மாணவிகளை தங்களின் ஆசைக்கு வீழ்த்தும் நிலை ஏற்படும்.
பெண் ஆசிரியைகள் ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். கோ எஜுகேசன் அமுலில் உள்ள நிலையில் இது பல விபரீதங்களை ஏற்படுத்தும்.
மிருகங்கள் கூட யாரும் கற்றுக் கொடுக்காமல் அறிந்து கொள்ளும் விஷயம் இது. இதற்கு எந்தக் கற்பித்தலும் தேவை இல்லை.
உணர்வு 16:16
29.12.2011. 4:56 AM