Sidebar

29
Wed, Jul

அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குவானா? கமாலுத்தீன் மதனியின் மடமை வாதம்

உரை:பி.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 15/11/21

 

இது குறித்து முழுமையாக அறிய

அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்குகிறானா தொகுப்பு

ஜாக்கின் சந்தர்ப்பவாதம்!

பீ.ஜைனுல் ஆபிதீன்

பீஜேயாகிய நான் எனது தவறான கொள்கையில் இருந்து விலகி ஜாக்கில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுமேடையில் ஜாக் இயக்கத்தின் சார்பில் அழைப்பு கொடுத்தார்கள்.

ஜாக் கொள்கை சரியானது என்பதற்காக என்னை அழைப்பதாக இருந்தால் ஜாக் கொள்கை தான் சரியானது என்று என் முன்னால் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதால் கண்ணியமான முறையில் விவாதம் செய்ய ஜாக் இயக்கத்துக்கு நான் அழைப்பு கொடுத்தேன்.

இதை ஏற்க மறுத்து ஜாக் வெளியிட்ட அறிக்கை பொய்களை உள்ளடக்கியதாகவும், அறிவீனமாகவும் உள்ளதை சகோதார்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

தான் உருவாக்கிய அமைப்பு உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும்தனிமைப்படுத்தப்பட்டு சிறுமைப்பட்டு பெயரையும் அடையாளத்தையும் இழந்து நிற்கும் சகோதரர்பிஜெ வை பொதுத்தளத்திற்கு அழைத்து வந்து அவரின் வழிகெட்ட கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை ஜம்யிய்யா நடத்தி வரும் தவ்ஹீதால் ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சி வழங்கும் என்று அவர் எண்ணினால் அது தவறு.

அவர் மார்க்கதை படிக்க விரும்பினால் ஜம்யிய்யாவின் மூத்த அறிஞர்களை தொடர்பு கொண்டு கல்வி கற்கலாமே தவிரஅல்லாஹ் கூறும் அழகிய விவாதத்திற்கான தகுதி மானக்கேடான குற்றத்தை சுமந்து நிற்கும் அவருக்கு இருப்பதாக நாம் கருதவில்லை.

ஜாக் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. மேடையில் விட்ட அழைப்புக்கும், இதற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். இவர்களின் புரட்டு வாதம் தெரியும்.

விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் பீஜே மக்களிடம் சிறுமைப்பட்டு நிற்கிறார் என்பதுவும் ஒன்று என்கிறது இந்த அறிக்கை. இது உண்மையா?

நான் விவாதம் செய்ய அழைப்பு விடுக்காமல் அவர்களின் அழைப்பை ஏற்று எனது கொள்கைகள் தவறு என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது இவர்களுடன் தாராளமாக இணைந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விட்டார்களே அப்போது மக்களிடம் சிறுமைப்பட்டு நிற்பவனை அங்கீகரிக்கும் நிலை ஏற்படாதா? இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் சிறுமை நீங்கிவிடுமா?

விவாதம் செய்யாமல் அப்படியே இவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டால் நான் சிறுமைப்பட்டு இருந்தாலும் என்னை அங்கீகரிப்பார்களாம்! விவாதம் செய்ய அழைப்பு கொடுத்தால் மட்டும் சிறுமைப்பட்டு நிற்பது ஞாபகத்துக்கு வருமாம்!

இது புரட்டு வாதமல்லவா?

உண்மை என்ன?

இவர்களின் கொள்கை வழிகெட்ட கொள்கை. அதை ஒருக்காலும் இவர்களால் மெய் என்று ஆய்வாளர்கள் முன்னால் நிரூபிக்க முடியாது. இதைச் சொல்ல வெட்கப்பட்டு பீஜே சிறுமைப்பட்டு நிற்கிறார் என்று சொல்லி பின் வாங்கியுள்ளனர்.

இவர்களின் கொள்கை வழிகேடு என்பது விவாதம் செய்யாமலே நிரூபணம் ஆகிவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்

மானக்கேடான குற்றத்தைச் சுமந்து நிற்கும் பீஜேக்கு தகுதி இல்லை என்ற இவரின் வாதம் குறித்தும் நான் சில செய்திகளைச் சொல்ல வேண்டும்.

என் மீதான மானக்கேடான குற்றச்சாட்டு பொய்யானது என்று நான் திட்டவட்டமாக மறுத்துள்ளேன். பொதுவிசாரணையைச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளேன். இது தெரிந்து இருந்தும் குற்றச்சாட்டு உண்மை என்பது போல் சித்தரித்து விவாதம் செய்யாமல் ஓடி ஒளிய காரணம் கற்பிக்கின்றனர்.

மானக்கேடான செயல்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட ஜாக் முக்கிய நிர்வாகிகள் சிலர் நீண்ட காலம் பெரிய பொறுப்பில் இருந்தார்களே? மீண்டும் மீண்டும், மீண்டும் குற்றச்சாட்டு வந்து இறுதியாகத் தான் நீக்கப்பட்டார்கள். இந்த வரலாறு நூர் முஹம்மதுக்குத் தெரியாதா? அப்போது தகுதி நினைவுக்கு வராமல் போனது ஏன்?

சில மாவட்ட நிர்வாகிகள் மீது பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்த ஜாக் இதைப் பற்றிப் பேசலாமா?

பொருளாதார மோசடி, பிறரை ஏமாற்றுதல் போன்றவற்றைச் செய்த பல ஜாக் நிர்வாகிகள் தலைமையால் காப்பாற்றப்பட்ட பழைய வரலாறுகளை நூர்முஹம்மது அறிவது நல்லது.

இன்னும் சொல்லப் போனால் சிலை திறப்பு உள்ளிட்ட ஷிர்கான காரியம் செய்தவர்களையும் அங்கீகரித்த நீங்கள் இப்படி சொல்வது வியப்பாக உள்ளது. நாங்கள் மறந்த அந்த வரலாறுகளை நினைவூட்டும் நிலைக்குத் தள்ள வேண்டாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பலர் உங்கள் ஜமாஅத்தில் மாநில பொறுப்பிலும் பிரச்சாரப் பொறுப்பிலும் இருக்கலாம். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் விவாதம் செய்யக் கூட தகுதியற்றவராகி விட்டாரா?

இது போல் கீழ்த்தரமான பதில்கள் அளிக்காமல் விவாதம் செய்ய தயாரில்லை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளுங்கள்!

அடுத்து விவாதம் செய்யத் தயார் இல்லை என்பதற்கு ஜாக் சொல்லும் காரணங்களைப் பாருங்கள்!

வழிகேடுகளுக்கெதிராக நம்முடைய வீரியமான பிரச்சாரம் நடைபெறும் போதெல்லாம் நம்மை நோக்கி விவாத அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.  விவாத அழைப்புகளைப் பொறுத்த வரையில் அதில் நாம் தெளிவான ஒரு நிலைபாட்டில் இருந்து வருகிறோம்.

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள்அல்லாஹ் கூறும் அழகிய விவாதங்களாக இல்லைவிவாத மேடைகள் தனி மனித தாக்குதலுக்கான களங்களாக மாறிவிட்டனஒவ்வொரு விவாதங்கள் முடியும் போதும்நிராகரிக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் மிச்சம்

விவாதங்களின் போது தங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டால் அதற்காகவே ஏற்பாடு செய்திருக்கும் கதாபாத்திரங்களின் மூலம் நாகரீகமின்றி தனி மனித தாக்குதலை நடத்தி விவாதக் களங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழ்ச்சிகளையும் காண முடிகிறது

அல்லாஹ் குறிப்பிடும் அழகிய விவாதங்கள்மக்கள் நேரான பாதையை அடைய உதவி செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடப்பது என்னஇணைவைப்பிற்கெதிராக விவாதம் செய்கிறேன் என்று புறப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு புதிய முகவரியை தேடிக்கொடுத்ததைத் தவிர விவாதங்கள் சாதித்தவை என்ன 

இன்று வரை ஏதாவது ஒரு விவாதம் வெற்றி தோல்வியில் முடிவடைந்திருக்கிறதாமாறாக, “நாங்கள் தான் வென்றோம்” என்று இரு தரப்பினரும் விவாதத்தின் முடிவில் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர் எனவேதான்இது போன்ற பயனற்ற விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். நீண்டகாலமாக ஜம்யிய்யாவின் நிலைபாடும் இதுதான்.

இந்த அறிக்கை வெளியிட்டவர் ஜாக் பல மர்கஸ்கள் அமைந்து வசதிகள் பெருகிய பின்னர் ஜாக்கில் நுழைந்தவர் என்பதால் வரலாறு தெரியாமல் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளாக ஜாக்கின் நிலைபாடு என்ன்ன என்பது கூட இவருக்குத் தெரியவில்லை.

1980 களில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்த போது இப்படி ஒரு கொள்கை இருக்கிறது என்பது கூட மக்களுக்குத் தெரியவில்லை. மிகச் சில ஊர்களில் மட்டும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்தோம்.

இந்த நேரத்தில் தான் குமரி மாவட்டம் கோட்டாரில் கேரளாவின் மிகப்பெரிய சுன்னத் ஜமாஅத் ஆலிமான ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்டவர்களுடன் பொது விவாதம் செய்தோம். அந்த முனாளராவுக்குப் பின்னர் தான் கோட்டாரில் மட்டும் இருந்த தவ்ஹீத் குமரி மாவட்டத்தின் எல்லா ஊர்களையும் சென்றடைந்தது. அந்த விவாதம் வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை. ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த ஆடியோக்கள் தான் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டு தவ்ஹீத் கொள்கை படர காரணமாக அமைந்தது.

தாமதமாக ஜாக்குக்கு வந்த நூர் முஹம்மத் அந்த ஆடியோவை கமாலுத்தீன் மதனியிடம் வாங்கிக் கேட்டுப் பார்க்கவும்.

அதன் பின்னர் கடையநல்லூரிலும் விவாதம் நடத்தப்பட்டது. அதனாலும் கொள்கை வளர்ச்சி ஏற்பட்டது.

காதியானிகள் கோவையில் வீரியமாக மக்களைக் குழப்பிய போது, ஜாக்கில் பயணித்தவர்களே காதியானிகளாக மாறிய போது ஜாக் சார்பில் ஒன்பது நாட்கள் விவாதம் நடத்தியது. அதன் பின்னர் காதியானிகள் பக்கம் செல்வது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது நூர் முஹம்மத் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை.

ஜெபமணி என்பவர் இஸ்லாத்தைக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த போது அவருடன் மதுரையில் ஜாக் சார்பில் நான்கு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் தான் கிறித்தவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரச்சாரகர்கள் உருவானார்கள். பல கிறித்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இந்த வரலாறு நூர் முஹம்மதுக்குத் தெரியாது.

இலங்கையில் ஏகத்துவம் வளர்ச்சி அடைய அங்கே நடந்த விவாதங்களில் ஜாக் சார்பில் பங்கேற்றது காரணமாக அமைந்தது.

ஜாக்கில் இருந்து பிரிந்த பின்னர் தவ்ஹீத் பிரச்சாரக்குழுவுடன் ஜாக் மதுரையில் ஒரு விவாதம், நெல்லை ஏர்வாடியில் ஒரு விவாதம் நடத்தியது.

இது போன்ற விவாதங்களால் மக்களுக்கு ஜாக் இயக்கம்அறிமுகமாகி கூட்டம் சேர்ந்து அதைக் காட்டி அரபு நாடுகளில் உதவி பெற்று பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. அதன் பின்னர் அடி உதைகள் வாங்கி பிரச்சாரம் செய்வதை விடுத்து மர்கஸ்களிலும் எப்போதாவது நடத்தும் மாநாடுகளிலும் மட்டும் தாவா செய்யும் ஒயிட் காலர் தவ்ஹீத் பிரச்சாரமாக மாறியது.

இதன் பின்னர் தான் விவாதம் செய்து இருக்கின்ற மக்களை இழக்க வேண்டாம் என்பதற்காக விவாதம் செய்யக் கூடாது என்ற நிலைபாட்டை ஜாக் எடுத்தார்கள்.

இந்த உண்மைகளை மறைத்து விவாதத்தால் பயனில்லை என்று சொல்வது தங்களின் வழிகெட்ட கொள்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

சூனியம், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஜாக்கின் வழிகெட்ட கொள்கைகளை அதன் உறுப்பினர்கள் ஆய்வு செய்யுமாறும் ஜாக்கின் வாதங்களுக்கு எதிராக மற்றவர்கள் அவிக்கும் வாதங்களையும் அறிந்து உண்மையை உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

ஜாக் இயக்கத்துக்கு நான் விவாத அழைப்பு கொடுத்து அவர்கள் மறுத்த பின்னர் சில தனி நபர்கள் என்னோடு விவாதம் செய்யத் தயாரா என்று முக நூல் மூலம் அழைப்பு விடுக்கிறார்கள். பொதுவாக விவாதம் செய்ய நான் ஆரம்பம் முதல் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு நபரும் விவாத அழைப்பு கொடுக்கும் போதெல்லாம் அதை ஏற்பதில்லை. அப்படியானால் தினமும் ஒருவருடன் நான் விவாதம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அவனுடன் விவாதம் செய்து விட்டீர்கள்; என்னுடன் விவாதிக்கத் தயாரா? என்று ஆளாளுக்குக் கிளம்புகின்றனர்.

எனது கொள்கைக்கும், கருத்துக்கும் எதிராக மாற்றுக் கருத்தை ஒருவர் முன் வைத்து அது மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவருடன் நான் விவாதம் செய்வதில்லை. அதற்குத் தேவையில்லை. யாராலும் கண்டு கொள்ளப்படாத, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நபர்களுடன் விவாதம் செய்வதில்லை.

ஒருவரோ, சிலரோ எனக்கு எதிராக ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அது நம் கொள்கைச் சகோதரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விவாதம் நடத்தாவிட்டால் நம் சகோதர்ர்களே கூட கொள்கையில் சந்தேகம் கொள்வார்கள் என்ற அளவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றால் அத்தகையவர்களிடம் நான் விவாதம் செய்வேன். இதற்குத் தேவை இருக்கிறது.

அது போல் இஸ்லாத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவக் குழுக்கள் இஸ்லாத்துக்கு எதிரான அவதூறைப் பரப்பி பிரச்சாரம் செய்தால் அவர்களுக்குப் பதில் அளிக்கும் அவசியம் உள்ளது என்று வெகுஜன் அபிப்பிராயம் இருந்தால் அவ்ர்களை நான் விவாதக் களத்தில் சந்திப்பேன்

ஜாக் இயக்கம் என்னை அழைத்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதியதால் தான் அவர்களுக்கு விவாத அழைப்பு கொடுத்தேன்.

இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

"பி.ஜைனுல் ஆபிதீன்"

ஜாக்குக்கு பகிரங்க அறைகூவல்

மரியாதைக்குரிய ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்தின் தலைவருக்கும், உலமாக்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீப காலமாக உங்கள் இயக்கம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஜைனுல் ஆபிதீனாகிய நான் எனது கொள்கையில் இருந்து விலகி விடுமாறு அழைப்பு விட்டு வருவது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் நேர்வழி என்று நினைக்கும் பாதைக்கு மற்றவர்களை அழைக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நமக்கிடையே நீண்ட நெடுங்காலமாக அடிப்படைக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்து வருவது முஸ்லிம் சமுதாயம் அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.

இரு வேறு கருத்துக் கொண்டவர்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரை தமது வழியின் பால் எப்போது அழைக்கலாம்? இரு தரப்பும் கருத்து வேறுபாடுள்ள விஷயங்களைக் குறித்து விவாதம் செய்து ஒரு தரப்பின் கருத்து தான் சரியானது என்பது தெளிவானால் தான் வென்ற தரப்பு தோற்ற தரப்பை தனது கொள்கையின் பால் அழைக்க நியாயம் உள்ளது.

அப்படி எதுவும் நிகழவில்லை. நான் நீண்ட காலமாக விவாதிக்க அழைப்பு விட்டும் அதை ஏற்க மறுக்கும் நீங்கள் என்னை உங்கள் வழிகெட்ட கொள்கையின் பால் அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

எனவே நேர்வழியில் இருக்கின்ற நான் தான் உங்களைச் சரியான வழியின்பால் அழைக்க நியாயம் உண்டு என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

உங்களிடம் நான் வேறுபடும் கொள்கைகளில் நான் நேர்வழியில் இருப்பதாக நன்கு ஆராய்ந்து உறுதியான முடிவில் இருக்கிறேன்.

வஹீ மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரம். நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தும், செயலும் மார்க்க ஆதாரமாகாது என்பது எனது கொள்கை.

நபித்தோழர்கள் இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் என்பதில் நானும், நீங்களும் ஒத்த கருத்தில் இருந்தாலும் நபித்தோழர்களும் பாவத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களிடம் பாவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிலர் நீடித்தும் உள்ளனர். மார்க்கம் என்று கருதி மார்க்கத்தில் இல்லாததை உருவாக்கியவர்களும் நபித்தோழர்களில் இருந்துள்ளனர். இதைக் கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்று நான் கருதுகிறேன். இதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

சூனியத்துக்கு எந்தத் தாக்கமும் இல்லை என்றும், அதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகவும் ஆகும் என்றும் நான் கூறுவதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருதப்படும் ஹதீஸ்கள் திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணில்லா விட்டால் அவற்றை ஏற்றுச் செயல்பட வேண்டும்; திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணாக அமைந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியானதாகக் கருதப்பட்டாலும் அவை ஹதீஸ்கள் அல்ல என்று நான் கூறுவதில் நீங்கள் முரண்படுகிறீர்கள்.

மேலும் திருக்குர்ஆன் விளக்கத்தில் நான் தவறான நச்சுக்கருத்துக்களைப் புகுத்தி உள்ளதாக பகிரங்கமாக கூறி அழைப்பு விட்டுள்ளீர்கள்.  அவை என்ன என்பதையும் பட்டியலிட்டு அவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவை குறித்து நாம் ஒத்த கருத்துக்கு வந்து விட்டால் நாம் ஒத்த கொள்கையில் பயணிக்கலாம்.

எனவே நான் குறிப்பிட்ட இந்த விஷயங்களில் நீங்கள் வழிகேட்டில் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

இது குறித்து கன்னியமான முறையில் நட்பு அடிப்படையிலான விவாதத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.

அந்த விவாதத்தில் நீங்கள் கொண்ட கொள்கை தான் சரியானது என்று நிரூபித்தால் அதை ஏற்று பகிரங்கமாக அறிவிக்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் கொண்ட கொள்கை தவறானது என்று நான் நிரூபித்தால் நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி நிகழ்ந்தால் ஒரே கொள்கையில் நாம் பயணிக்கும் நிலை ஏற்படும்.

பொது மேடைகளில் நீங்கள் விடுக்கும் அழைப்புக்கு எனது பதில் இதுதான்.

இதற்கான பதிலை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கிறேன்.

விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு நீங்கள் பதில் தந்த பின் நம் இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் விவாதம் செய்வதற்கான ஒழுங்குகள், விதிகள்,  விவாதம்  நடக்கும் காலம் ஆகியவற்றைப் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு: சென்னை மண்ணடியில் அன்பான அழைப்பு விடுக்கும் மேடையில் உங்களிடமிருந்து வெளிப்பட்ட கர்வத்தையும், ஆணவத்தையும் நான் அலட்சியம் செய்கிறேன்.

பெரிய மேடையில் பேசிய பீஜே இன்று அறைக்குள் லைவ் போடுவது பரிதாபமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இயக்க பலம் இல்லாமல் போய்விட்டான் என்பதால் தான் நீங்கள் எனக்கு அழைப்பு விடுகிறீர்கள் என்றால் இதை விட அறிவீனம் எதுவுமில்லை.

எனக்கு இயக்க பலம் இல்லை என்பது தான் இந்த அழைப்புக்குக் காரணம் என்று கருதும் அளவுக்கு உங்கள் நிலை அமைந்துள்ளதை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

நான் தனி ஒருவனாக இருந்தாலும் கொள்கையை எடை போட அது அளவு கோல் அல்ல என்பதை முதலில் உணருங்கள்.

ஆனால் அது கூட உண்மை இல்லை. நீங்கள் பெரிய முயற்சி எடுத்து தலை நகரில் கூட்டிய கூட்டத்தை விட அதிகமான மக்கள் முன்னிலையில் அதிராம்பட்டிணத்தில் பொது நிகழ்வில் நான் சில நாட்களுக்கு முன்னர் தான் உரையாற்றியுள்ளேன். உங்கள் இந்தப் பரிதாபம் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மட்டுமே தனித்து விடப்பட்டாலும் கொள்கை தவறு என்பதை உரிய முறையில் நிரூபித்தால் மட்டுமே நான் மாற்றிக் கொள்வேன்.

பீஜே என்று மக்கள் அழைத்த போது நான் சரியாக இருந்ததாகவும் அண்ணன் என்று அழைக்கப்பட்ட பின் நான் மாறிவிட்டதாகவும் நீங்கள் பொதுமேடையில் பேசியதைக் காணும் போது இந்த அளவுக்கு உங்கள் சிந்தனை வரண்டு விட்டதா என்று நான் பரிதாபப்படுகிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் சகோதரன் என்ற குர்ஆன் வசனத்தையே நீங்கள் மறுப்பதாக இது அமைந்துள்ளது. என்னை விட குறைந்த வயதுள்ளவர்கள் அண்ணன் என்று என்னை அழைப்பது மார்க்கத்தில் தவறா?

மவ்லானா மவ்லவி பட்டம் போட்டு நீங்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறீர்களே அது போன்ற மமதை அண்ணன் என்று அழைப்பதில் இல்லை.

உங்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த கமாலுத்தீன் மதனி அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அந்த நிலைக்கு மாறி எங்களுடன் சேருங்கள் என்றும் ஆணவமாக பொது மேடையில் பேசி தரம் தாழ்ந்துள்ளீர்கள்.

நாகர்கோவிலில் முடங்கிக் கிடந்த கமாலுத்தீன் மதனியை நாடு முழுவதும் நான் தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு முன்னர் நான் தான் அஹ்லுல் குர்ஆன் ஹதீஸ் இயக்கத் தலைவனாக இருந்தேன்; நான் அடியோடு மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்கினேன் என்று உங்களைப் போல் நான் சொன்னால் அது உண்மையாக இருந்தாலும் நாகரிகமுள்ள மக்கள் கர்வமாகத் தான் அதைக் கருதுவார்கள்.

இது போல் கீழ்த்தரமான விமர்சனங்கள் வேண்டாம். நாம் கண்ணியமான முறையில் விவாதம் செய்வோம். எது நேர்வழி என்பதும் யார் திருந்த வேண்டும் என்பதும் அப்போது முடிவாகும். இன்ஷா அல்லாஹ்

"பி.ஜைனுல் ஆபிதீன்"

More Articles …