Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கூடுமா?

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நாம் (முஸ்லிம்) சேரலாமா?

ஷாஹுல்

அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது தவறாகும். எந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மார்க்க வரம்பு மீறப்படுமோ அந்தக் காப்பீட்டுத் திட்டம் மட்டுமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

உதாரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து மாதம் ஒரு தொகை செலுத்த வேண்டும். நாம் செலுத்திய பணத்துக்கு போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள். இதனால் இதைக் கூடாது என்பது சரியானது தான்.

ஆனால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் நாம் செலுத்தும் பணம் நமக்குத் திரும்பக் கிடைப்பதில்லை. நமக்கு நோய் வந்தால் நம் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வார்கள். நமக்கு நோய் வரா விட்டால் அந்த நிறுவனம் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளும். இதில் எந்தத் தவறும் இல்லை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் பணம் செலுத்துவதற்கு பதிலாக அரசு பணம் செலுத்துகிறது. அவ்வளவு தான் வித்தியாசம். அது எந்த அளவு நம்பகமாக இருக்கும்? என்பது பற்றி நாம் உறுதி அளிக்க முடியாது. ஆனால் மார்க்கத்தில் தடை செய்ய எந்தக் காரணமும் இதில் இல்லை.

மேலும் விபரத்துக்கு கீழே உள்ள் ஆக்கத்தைக் காண்க!

மருத்துவ காப்பீட்டில் சேரலாம் எனபது சரியா ? 

 

24.02.2010. 19:45 PM

 

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?

? வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம்; அவர்கள் தரும் விருந்தையும் சாப்பிடலாம் என்று பதிலளித்திருந்தீர்கள். தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் மலத்தைத் தின்பதாக நேர்ச்சை செய்த ஒரு பெண், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது வட்டி வாங்குபவன் வீட்டு நிழலில் நின்று சாப்பிடு, உன் நேர்ச்சை நிறைவேறி விடும் என்று கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்கு உங்கள் பதில் மாற்றமாக உள்ளதே! மேலும், யூதர்களின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விருந்துண்டதை உதாரணம் காட்டியிருந்தீர்கள். எல்லா யூதர்களும் வட்டித் தொழில் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?

ஏ. அப்துர்ரஸாக், பி. சுலைமான், மேற்கு மாம்பலம்

நாம் தேடிப் பார்த்த வரையில் இப்படி ஒரு பலவீனமான ஹதீஸ் கூட எந்த நூலிலும் இல்லை. யூதர்கள் வட்டித் தொழில் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள்.

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

திருக்குர்ஆன் 4:160

இந்த வசனத்தில் யூத சமுதாயத்தைப் பற்றி குறிப்பிடும் போது, வட்டி வாங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றான். எனவே யூதர்களின் தொழிலே வட்டியாகத் தான் இருந்தது என்பதற்கு இந்த வசனம் போதிய சான்றாகும்.

இது குறித்து விரிவாக அறிய கீழ்க்காணும் ஆக்கத்தை வாசிக்கவும் http://onlinepj.in/poruladharam/vatti-nonbukanji/

01.01.2015. 20:33 PM

காலை மாட்டின் இறைச்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு பசு மாட்டின் இறைச்சி விற்கலாமா?

18/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்


இரத்தத்தை விற்கலாமா?

மக்சூமிய்யா

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் வசதியும் இருக்கவில்லை.

இன்றைக்கு அந்தத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்துக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் வந்துள்ளனர்.

கிட்னி இரத்தம் போன்றவற்றை விற்கலாமா என்றால் இதற்கான விடை காண்பது எளிதானது தான்.

மார்க்கத்தில் எந்த ஒன்றை தர்மமாகக் கொடுக்க அனுமதி உள்ளதோ அதை விற்பதற்கும் அனுமதி உண்டா? நமக்குச் சொந்தமான ஒன்றை நாம் விரும்பினால் இலவசமாகக் கொடுக்கலாம். விரும்பினால் அதற்காக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டும் கொடுக்கலாம். விரும்பினால் கொடுக்காமலும் இருக்கலாம் என்ற அடிப்படையில் இரத்த்த்தை விற்கலாமா?

பொதுவாக அனுமதிக்கப்பட்டவைகளுக்குத் தான் இது பொருந்தும். இரத்தம் உணவாக உட்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது; உயிர் காக்கும் நிர்பந்தம் காரணமாகவே ஒருவரின் இரத்தத்தை மற்றவருக்குச் செலுத்துவது குற்றமில்லை என்ற நிலையை அடைகிறது. எனவே பொதுவான இந்தச் சட்டம் நிர்பந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவைகளுக்குப் பொருந்தாது.

உயிர் காக்கும் நிர்பந்தம் காரணமாக ஒருவர் செத்த பிராணிகளை உண்பது குற்றமாகாது என்பதை ஆதாரமாகக் கொண்டு செத்த பிராணிகளை விற்கலாம் என்ற முடிவுக்கு வர முடியாது.

நிர்பந்தம் காரணமாக ஒரு பொருள் உண்ண அனுமதிக்கப்பட்டால் விற்கும் போதும் நிர்பந்த நிலை இருந்தால் தான் விற்க அனுமதிக்கப்படும்.

அதாவது இரத்தத்தை விலைக்கு விற்றால் தான் உயிர்வாழ முடியும் என்ற அளவுக்கு ஒருவருக்கு கஷ்ட நிலை இருந்தால் அவர் விற்கலாம். அப்படி இல்லாதவர்கள் அதை விற்பனைப் பொருளாகக் கருதி விற்கக் கூடாது.

இரத்த சேகரிப்பு வங்கிகளில் நாம் இலவசமாகக் கொடுத்த இரத்தத்தை விற்கிறார்களே இது கூடுமா என்றால் இதைப் பற்றி விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இரத்த வங்கிகளில் இரத்த சேமிப்பு என்பது அதிகமான பொருள் செலவுடைய வேலையாகும். முதலில் இரத்தத்தில் டைபாய்ட், மலேரியா போன்ற கிருமிகள் உள்ளதா? மற்றவருக்குச் செலுத்தும் அளவுக்குப் போதிய அனுக்கள் உள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்.  நூறு பேரிடம் எடுத்த இரத்த்த்தில் பத்து பேரின் இரத்தம் தேராது என்றால் அந்தச் செலவும் தொன்னூறூ பேரில் இரத்த்த்தில் சேர்க்கப்படும்.

கெட்டுப் போகாமல் இருக்கத் தக்க டெம்பரேச்சரில் வைத்து பாதுகாக்கும் போது அதற்கான மின் கட்டணம், பராமரிப்பு செலவு உள்ளது. மேலும் சேமித்த இரத்தம் குறிப்பிட்ட நாட்களுக்குள் யாருக்கும் செலுத்தாவிட்டால் அவை பயன்படாது. இப்படி பயன்படாமல் போகும் இரத்தத்தைப் பாதுக்காத்த வகையில் ஏற்பட்ட செலவையும் எஞ்சிய இரத்த்தில் தான் சேர்க்க வேண்டும்.

இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களுக்கு நட்டம் ஏற்படாத வகையில் ஐநூறு அல்லது அறுநூறு ரூபாய்கள் கட்டணம் வாங்கினால் அது இரத்தத்திற்காகன விலை அல்ல. மேலே நாம் குறிப்பிட்ட வகையில் செய்த செலவை ஈடுகட்டுவதற்கானது.

இது இரத்தத்தை விற்றதாக ஆகாது.

இவ்வளவு செலவு செய்து பாதுகாத்தவர்களிடம் இலவசமாகக் கொடுங்கள் என்று கேட்டால் இரத்தம் சேமிக்கும் வங்கியை மூடி விடுவார்கள். புதிதாக யாரும் அமைக்க மாட்டார்கள். இதனால் நோயாளிகளுக்குப் போதிய இரத்தம் கிடைக்காத நிலை ஏற்படும்.

04.08.2011. 15:42 PM

சீனி தயாரிக்க மனித மற்றும் மிருக எலும்புகள் பயன்படுத்துவதால் ஹலாலா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 13/12/2020

More Articles …