ஹஜ் பயணத்தில் கணவன் இறந்துவிட்டால் ஹஜ்ஜை முறித்துவிட்டு இத்தா இருக்க வேண்டுமா?
திருமணம் முடிந்த மறுநாளே தலாக் செய்தால் அது திருமணமா? - இத்தாஹ் அவசியமா?
மாதவிடாய் நின்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு காலம்? கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு நாட்கள்?
அப்துல் வதூத்
பதில்:
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகின்றது.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
மேலுள்ள வசனம் கணவனை இழந்த பெண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இத்தா இருக்க வேண்டும் எனப் பொதுவாகக் கூறுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், கறர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தை பேறு அற்ற பெண்களுக்கும் இச்சட்டத்தில் விதிவிலக்கு இருப்பதாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை.
எனவே இந்தப் பொதுவான சட்டத்தின் அடிப்படையில் இவர்களும் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருப்பது கட்டாயம்.
இவர்கள் கணவனின் கருவைச் சுமந்திருக்க முடியாது என்பதால் இத்தா தேவை இல்லை என்று நமக்கு சந்தேகம் எழலாம். ஆனாலும் இறைவன் இவர்களுக்கு விதிவிலக்கு தேவை என்று கருதினால் அவனே அதை அளித்திருப்பான். அவன் விதி விலக்கு அளிக்காதபோது இறைவன் சொன்னதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று எண்ணி இறைக் கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும்.
12.04.2011. 13:59 PM
திருமணம் முடிந்த மறுநாளே தலாக் செய்தால் அது திருமணமா? - இத்தாஹ் அவசியமா?
பெண் அடிமைத்தனம் இல்லாத இஸ்லாத்தில் கணவன் இறந்தபின் பெண் நல்ல உடைகள் அணிவதில்லை. இது சரியா?
கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன?
அக்பர்
பதில் :
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.
திருக்குர்ஆன் 65:4
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் காலக் கெடுவிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
பின்வரும் நபிமொழியிலிருந்தும் இச்சட்டத்தை அறியலாம்.
4910 حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الْأَجَلَيْنِ قُلْتُ أَنَا وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلَامَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ وَهِيَ حُبْلَى فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا رواه البخاري
அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண்ணைப் பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள் என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (நான்கு மாதம் பத்து நாட்கள், நாற்பது நாட்கள் ஆகிய) இரு தவணைகளில் எது அதிகமோ அது தான் இத்தா (அதாவது நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா) என்று கூறினார்கள்.
உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும் (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் குரைப் என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு இத்தா பிரசவம் வரையில் தான்) என்று சொல்லி அனுப்பினார்கள்.
நூல் : புகாரி 4909
கர்ப்பம் உறுதியாகி விட்டால் முதல் கணவரால் உருவான குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தான் அவள் இன்னொரு கணவனை மணக்க வேண்டும்.