ஹதீஸ் ஆய்வு
▶️செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமா?
செருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமா? 25/11/18 வாட்ஸ் அப் கேள்வி பதில்
சிரிக்கக் கூடாத இடங்கள்:
சிரிக்கக் கூடாத இடங்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பொய் சொல்வது மற்ற பொய்களை விட பெரிய குற்றமாகும். இது பற்றிய அச்சம் இல்லாமல் பொய்யான செய்திகளை ஹதீஸ் என்று சிலர் பரப்பி வருகின்றனர்.
அந்தப் பொய்களில் ஒன்றுதான் கீழே உள்ள பொய்ச்செய்தி.
1. தொழுகை
2. மஸ்ஜித்
3. கப்ருக்கு அருகில்
4. மய்யித்தின் அருகில்
5. பாங்கு சொல்லும் போது…
6. குர்ஆன் ஓதும் போது…
7. பயான் செய்யும் போது..
இந்த ஏழு இடங்களில் சிரிப்பவர்களை அல்லாஹ் அவர்களது உருவத்தை மாற்றி மறுமையில் தண்டிப்பான்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
இப்படி ஒரு செய்தியைப் பரப்புகின்றனர்.
இந்தச் செய்தி புகாரியிலோ, முஸ்லிமிலோ இல்லை.
صحيح البخاري
106 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ: سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல்: புகாரி 106, 107, 1291
நபியின் தந்தை நரகிலிருப்பார் என்பது சரியான ஹதீஸா?
நபியின் தந்தை நரகிலிருப்பார் என்பது சரியான ஹதீஸா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தை காஃபிராக இருந்தார் என்ற கருத்தில் முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் பலவீனமானது என்றும், ஹம்மாத் பின் சலமா என்பவர் வழியாகவே முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது; இவர் பலவீனமானவர் என்றும் கூறுகிறார்கள். இது சரியா
ஷரஃபுத்தீன், அதிரை
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عفان حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله أين أبي قال في النار فلما قفى دعاه فقال إن أبي وأباك في النار
இது தான் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் ஆகும்.
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை எங்கே இருப்பார் என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நரகத்தில் இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை அழைத்து என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இதில் ஹம்மாத் பின் சலமா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுவது உண்மை தான். ஆனால் ஹம்மாத் பின் சலமா என்பவர் மிகவும் நம்பகமானவர் என்பதிலோ, அவர் உறுதியான நினைவாற்றல் உள்ளவர் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.
அவர் மீது உள்ள விமர்சனம் என்னவென்றால் அவர் முதுமை அடைந்த போது மனக் குழப்பத்துக்கு உள்ளானார் என்பது தான்.
இது போன்ற நிலை அதிகமானவர்களுக்கு ஏற்படக் கூடியது தான். இது போன்றவர்கள் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது?
மனக்குழப்பம் ஏற்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் பற்றி மூன்று நிலைகள் உள்ளன.
அவர் மனக்குழப்பம் ஏற்பட்ட பிறகு ஒரு ஹதீஸை அறிவித்தால் அதை நிராகரிக்க வேண்டும்.
அவர் நம்பகமானவராக இருந்து மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்தது உறுதி செய்யப்பட்டால் அப்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் அறிவிக்கும் ஹதீஸ் அவரது மனக்குழப்பத்துக்கு முன்பா பின்பா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால் அவரது அறிவிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பொத்தாம் பொதுவாக இவரது அறிவிப்பைத் தள்ளிவிடக் கூடாது.
تهذيب التهذيب - ابن حجر (3/ 11)
14 - قال أحمد حماد بن سلمة أثبت في ثابت من معمر وقال أيضا في الحمادين ما منهما إلا ثقة وقال حنبل عن أحمد أسند حماد بن سلمة عن أيوب أحاديث لا يسندها الناس عنه وقال أبو طالب حماد بن سلمة أعلم الناس بحديث حميد وأصح حديثا وقال في موضع آخر هو أثبت الناس في حميد الطويل سمع منه قديما يخالف الناس في حديثه وقال إسحاق بن منصور عن بن معين ثقة وقال الدوري عن بن معين من خالف حماد بن سلمة في ثابت فالقول قول حماد وقال جعفر الطيالسي عنه من سمع من حماد بن سلمة الأصناف ففيها اختلاف ومن سمع منه نسخا فهو صحيح وقال بن المديني لم يكن في أصحاب ثابت أثبت من حماد بن سلمة وقال الأصمعي عن عبد الرحمن بن مهدي حماد بن سلمة صحيح السماع حسن اللقي أدرك الناس لم يهتم بلون من الألوان ولم يلتبس بشيء أحسن ملكه نفسه ولسانه ولم يطلقه على أحد فسلم حتى مات وقال بن المبارك دخلت البصرة فما رأيت أحدا أشبه بمسالك الأول من حماد بن سلمة وقال أبو عمر الجرمي ما رأيت فقيها أفصح من عبد الوارث وكان حماد بن سلمة أفصح منه وقال شهاب بن المعمر البلخي كان حماد بن سلمة يعد من الأبدال وعلامة الأبدال أن لا يولد لهم تزوج سبعين امرأة فلم يولد له وقال عفان قد رأيت من هو أعبد من حماد بن سلمة ولكن ما رأيت أشد مواظبة على الخير وقراءة القرآن والعمل لله من حماد بن سلمة وقال بن مهدي لو قيل لحماد بن سلمة إنك تموت غدا ما قدر أن يزيد في العمل شيئا وقال بن حبان كان من العباد المجابين الدعوة في الأوقات ولم بنصف من جانب حديثه واحتج في كتابه بأبي بكر بن عياش فإن كان تركه إياه لما كان يخطىء فغيره من أقرانه مثل الثوري وشعبة كانوا يخطئون فإن زعم أن خطاءه قد كثر حتى تغير فقد كان ذلك في أبي بكر بن عياش موجودا ولم يكن من أقران حماد بن سلمة بالبصرة مثله في الفضل والدين والنسك والعلم والكتب والجمع والصلابة في السنة والقمع لأهل البدع قال سليمان بن حرب وغيره مات سنة 167 زاد بن حبان في ذي الحجة استشهد به البخاري وقيل أنه روى له حديثا واحدا عن أبي الوليد عنه عن ثابت قلت الحديث المذكور في مسند أبي بن كعب من رواية ثابت عن أنس عنه وقد ذكره المزي في الأطراف ولفظه قال لنا أبو الوليد فذكره وقد عرض بن حبان بالبخاري لمجانبته حديث حماد بن سلمة حيث يقول لم ينصف من عدل عن الاحتجاج به إلى الاحتجاج بفليح وعبد الرحمن بن عبد الله بن دينار واعتذر أبو الفضل بن طاهر عن ذلك لما ذكر أن مسلما أخرج أحاديث أقوام ترك البخاري حديثهم قال وكذلك حماد بن سلمة إمام كبير لمدحه الأئمة وأطنبوا لما تكلم بعض منتحلي المعرفة أن بعض الكذبة أدخل في حديثه ما ليس منه لم يخرج عنه البخاري معتمدا عليه بل استشهد به في مواضع ليبين أنه ثقة وأخرج أحاديثه التي يرويها من حديث أقرانه كشعبة وحماد بن زيد وأبي عوانة وغيرهم ومسلم اعتمد عليه لأنه رأى جماعة من أصحابه القدماء والمتأخرين لم يختلفوا وشاهد مسلم منهم جماعة وأخذ عنهم ثم عدالة الرجل في نفسه وإجماع أئمة أهل النقل على ثقته وأمانته انتهى وقال الحاكم لم يخرج مسلم لحماد بن سلمة في الأصول إلا من حديثه عن ثابت وقد خرج له في الشواهد عن طائفة وقال البيهقي هو أحد أئمة المسلمين إلا أنه لما كبر ساء حفظه فلذا تركه البخاري وأما مسلم فاجتهد وأخرج من حديثه عن ثابت ما سمع منه قبل تغيره وما سوى حديثه عن ثابت لا يبلغ اثني عشر حديثا أخرجها في الشواهد وقال عفان اختلف أصحابنا في سعيد بن أبي عروبة وحماد بن سلمة فصرنا إلى خالد بن الحارث فسألناه فقال حماد احسنهما حديثا واثبتهما لزوما للسنة فرجعنا إلى يحيى القطان فقال أقال لكم وأحفظها قلنا لا وقال القطان حماد عن زياد الأعلم وقيس بن سعد ليس بذاك وقال عبد الله عن أبيه أو يحيى عن القطان إن كان ما يروي حماد عن قيس بن سعد فهو كذا قال عبد الله قلت لأبي لأي شيء قال لأنه روى عنه أحاديث رفعها وقال أحمد بن حنبل أثبتهم في ثابت حماد بن سلمة وقال الدولابي ثنا محمد بن شجاع البلخي حدثني إبراهيم بن عبد الرحمن بن مهدي قال كان حماد بن سلمة لا يعترف بهذه الأحاديث التي في الصفات حتى خرج مرة إلى عبادان فجاء وهو يرويها فسمعت عباد بن صهيب يقول إن حمادا كان لا يحفظ وكانوا يقولون أنها دست في كتبه وقد قيل إن بن أبي العوجاء كان ربيبه فكان يدس في كتبه قرأت بخط الذهبي بن البلخي ليس بمصدق على حماد وأمثاله وقد اتهم قلت وعباد أيضا ليس بشيء وقد قال أبو داود لم يكن لحماد بن سلمة كتاب غير كتاب قيس بن سعد يعني كان يحفظ علمه وقال عبد الله بن أحمد عن أبيه ضاع كتاب حماد عن قيس بن سعد وكان يحدثهم من حفظه وأورده له بن عدي في الكامل عدة أحاديث مما ينفرد به متنا أو إسنادا قال وحماد من أجلة المسلمين وهو مفتي البصرة وقد حدث عنه من هو أكبر منه سنا وله أحاديث كثيرة وأصناف كثيرة ومشائخ وهو كما قال بن المديني من تكلم في حماد بن سلمة فاتهموه في الدين وقال الساجي كان حافظا ثقة مأمونا وقال بن سعد كان ثقة كثير الحديث وربما حدث بالحديث المنكر وقال العجلي ثقة رجل صالح حسن الحديث وقال إن عنده ألف حديث حسن ليس عند غيره وحكى أبو الوليد الباجي في رجال البخاري إن النسائي سئل عنه فقال ثقة قال الحاكم بن مسعدة فكلمته فيه فقال ومن يجترئ يتكلم فيه لم يكن عند القطان هناك ثم جعل النسائي يذكر الأحاديث التي انفرد بها في الصفات كأنه خاف أن يقول الناس تكلم في حماد من طريقها وقال بن المديني أثبت أصحاب ثابت حماد ثم سليمان ثم حماد بن زيد وهي صحاح
ஹம்மாத் பின் சலமாவின் நினைவாற்றல், அவரது அபாரத் திறமை, ஆராய்ச்சியின் ஆழம் மற்றும் வணக்க வழிபாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு என பல அறிஞர்கள் பாராட்டியதை தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றை மேலே அரபு மூலத்தில் காணலாம்.
நமக்குத் தேவையான பகுதியை மட்டும் சிவப்பு எழுத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
இமாம் முஸ்லிம் அவர்கள் இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யும் போது நன்கு ஆய்வு செய்து இவர் மனக் குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன் அறிவித்தவை என்று உறுதி செய்து கொண்டு பதிவு செய்துள்ளார்கள் என்று பைஹகீ இமாம் கூறுகிறார்கள். அதாவது மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் இவர் அறிவித்தவைகளை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்யவில்லை. மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்த ஹதீஸ்களையே இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் என்று பைஹகீ கூறுகிறார்.
அடுத்து ஸாபித் என்பவர் வழியாக ஹம்மாத் அறிவித்தால் அதற்கு மாற்றமாக யார் அறிவித்தாலும் ஹம்மாதின் அறிவிப்பைத் தான் ஏற்க வேண்டும் என்று இப்னு மயீன் கூறுகிறார்.
மேற்கண்ட ஹதீஸ் இவருக்கு மூளைக் குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் அறிவித்ததாகும். மேலும் இது ஸாபித் என்பார் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை. ஹதீஸ் கலையை அறைகுறையாக விளங்கிக் கொண்டு சிலர் இதை பலவீனமாக்க முயல்கின்றனர்.
இவர்கள் (ஜமாலி வகையறாக்கள்) நபிகள் நாயகத்தின் பெற்றோர் முஸ்லிம்கள் என்பதற்கு இப்னு அசாகிரில் ஆதாரம் உள்ளது என்று பேசினார். நம்முடன் நடந்த விவாதத்தின் போது அதை எடுத்துக் காட்டச் சொன்ன போது எடுத்துக் காட்ட முடியாமல் ஊமையாக நின்றவர்கள் என்பதை அந்த விவாத வீடியோவில் இருந்து அறியலாம்.
மேலும் இதே ஹம்மாத் அவர்கள் அறிவிக்கும் மகரந்தச் சேர்க்கை பற்றிய ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பித்அத்தை நியாயப்படுத்தியவர் தான் ஜமாலி என்பதையும் அந்த விவாத சீடியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒரே ஆள் அறிவிக்கும் இரு ஹதீஸ்களில் இரு வேறு நிலை எடுத்தவர்கள் என்பதில் இருந்து இது தவறான விமர்சனம் என்பது மேலும் உறுதிப்படுகின்றது.
21.03.2012. 14:59 PM
கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன?
இப்னு ஜமீலா, முகவை.
பதில்
கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் அவை சரியான ஹதீஸ்கள் அல்ல. அது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
ஆதாரம்: 1
المستدرك على الصحيحين للحاكم
5478 - أَخْبَرَنَا الشَّيْخُ الْإِمَامُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنَا بِشْرُ بْنُ مُوسَى، ثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، ثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو هُبَيْرَةَ، عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيِّ، وَكَانَ مُجَابَ الدَّعْوَةِ، أَنَّهُ أُمِّرَ عَلَى جَيْشٍ، فَدَرِبَ الدُّرُوبَ، فَلَمَّا أَتَى الْعَدُوَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَجْتَمِعُ مَلَأٌ فَيَدْعُو بَعْضُهُمْ، وَيُؤَمِّنُ الْبَعْضُ، إِلَّا أَجَابَهُمُ اللَّهُ» ثُمَّ إِنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «اللَّهُمُ احْقِنْ دِمَاءَنَا، وَاجْعَلْ أُجُورَنَا أُجُورَ الشُّهَدَاءِ» فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ نَزَلَ الْهُنْبَاطُ أَمِيرُ الْعَدُوِّ، فَدَخَلَ عَلَى حَبِيبٍ سُرَادِقِهِ
- سكت عنه الذهبي في التلخيص
ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலி)
நூல்: ஹாகிம்
இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
المعجم الكبير للطبراني
3456- حَدَّثَنَا بِشْرُ بن مُوسَى ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، حَدَّثَنِي ابْنُ هُبَيْرَةَ ، عَنْ حَبِيبِ بن مَسْلَمَةَ الْفِهْرِيُّ وَكَانَ مُسْتَجَابًا أَنَّهُ أُمِّرَ عَلَى جَيْشٍ فَدَرَّبَ الدُّرُوبَ ، فَلَمَّا لَقِيَ الْعَدُوَّ ، قَالَ لِلنَّاسِ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " لا يَجْتَمِعُ مَلأٌ فَيَدْعُو بَعْضُهُمْ وَيُؤَمِّنُ سَائِرُهُمْ إِلا أَجَابَهُمُ اللَّهُ " ، ثُمَّ إِنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ، فَقَالَ : اللَّهُمَّ احْقِنْ دِمَاءَنَا وَاجْعَلْ أُجُورَنَا أُجُورَ الشُّهَدَاءِ ، فَبَيْنَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ نَزَلَ الْهِنْبَاطُ أَمِيرُ الْعَدُوِّ ، فَدَخَلَ عَلَى حَبِيبٍ سُرَادِقَهُ ، قَالَ أَبُو الْقَاسِمِ : الْهِنْبَاطُ بِالرُّومِيَّةِ صَاحِبُ الْجَيْشِ.
இந்த இரண்டு நூற்களிலும் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் மூன்றாவது அறிவிப்பாளராக இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.
எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
قال أبو حاتم بن حبان البستي: كان من أصحابنا يقولون: سماع من سمع من ابن لهيعة قبل احتراق كتبه مثل العبادلة: ابن المبارك، وابن وهب، والمقرئ، وعبد الله بن مسلمة القعنبي، فسماعهم صحيح ومن سمع بعد احتراق كتبه فسماعه ليس بشئ.- سير أعلام النبلاء – الذهبي
இப்னு லஹீஆவிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப், அல்முக்ரிஉ அப்துல்லாஹ் பின் மஸ்லமா ஆகியோர், அறிவித்த அறிவிப்புகள் தரமானவை. அவரது நூல்கள் எரிந்துபோன பின் அவர் வழியாக அறிவிக்கப்படுபவை பலவீனமானவை.
ஆதாரம் : ஸியரு அஃலாமின் நுபலா
وكان صالحا، لكنه يدلس عن الضعفاء، ثم احترقت كتبه، وكان أصحابنا يقولون: سماع من سمع منه قبل احتراق كتبه مثل العبادلة: عبدالله بن وهب، وابن المبارك، وعبد الله بن يزيد المقرئ، وعبد الله بن مسلمة القعنبى – فسماعهم صحيح. ميزان الاعتدال – الذهبي
இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.
நூல்: மீஸானுல் இஃதிதால்
وقال نعيم بن حماد سمعت بن مهدي يقول لا أعتد بشيء سمعته من حديث بن لهيعة إلا سماع بن المبارك ونحوه – وقال عبد الغني بن سعيد الأزدي إذا روى العبادلة عن بن لهيعة فهو صحيح بن المبارك وابن وهب والمقري وذكر الساجي وغيره مثله تهذيب التهذيب – ابن حجر
இப்னு வஹப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்
மேற்கண்ட ஹதீஸை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத் தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று வாதிடுகிறார்கள்.
இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இந்த வாதத்தைப் பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.
இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.
وولي أرمينية لمعاوية، فمات بها سنة اثنتين وأربعين— سير أعلام النبلاء – الذهبي
ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.
நூல்: ஸியரு அஃலாமின் நுபலா
قال المزي في تهذيب الكمال عبد الله بن هبيرة بن أسعد بن كهلان السبئى الحضرمى ، أبو هبيرة المصرى . اهـ. قال سعيد بن كثير بن عفير : ولد سنة الجماعة . و قال أبو سعيد بن يونس : قرأت فى بعض الكتب القديمة : أنه مات سنة ست و عشرين و مئة .
அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.
நூல்: தஹ்தீபுல் கமால்
ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.
இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது.
ஆதாரம்: 2
السنن الكبرى للنسائي
5839 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَجُلًا جَاءَ زَيْدَ بْنَ ثَابِتٍ، فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، فَقَالَ لَهُ زَيْدٌ: عَلَيْكَ أَبَا هُرَيْرَةَ، فَإِنِّي بَيْنَمَا أنا وَأَبُو هُرَيْرَةَ، وَفُلَانٌ فِي الْمَسْجِدِ ذَاتَ يَوْمٍ نَدْعُو اللهَ، وَنَذْكُرُ رَبَّنَا خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَسَكَتْنَا فَقَالَ: «عُودُوا لِلَّذِي كُنْتُمْ فِيهِ» قَالَ زَيْدٌ: فَدَعَوْتُ أَنَا وَصَاحِبَيَّ قَبْلَ أَبِي هُرَيْرَةَ، وَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَمِّنُ عَلَى دُعَائِنَا، ثُمَّ دَعَا أَبُو هُرَيْرَةَ، فَقَالَ: اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِثْلَ مَا سَأَلَكَ صَاحِبَايَ هَذَانِ، وَأَسْأَلُكَ عِلْمًا لَا يُنْسَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمِينَ»، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ وَنَحْنُ نَسْأَلُ اللهَ عِلْمًا لَا يُنْسَى، فَقَالَ: «سَبَقَكُمْ بِهَا الْغُلَامُ الدَّوْسِيُّ»
கைஸ் அல்மதனீ கூறுகிறார்:
ஒருவர் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:
நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும், அபூஹுரைரா (ரலி) அவர்களும், இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தமது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறக்காத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.
உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே மறக்காத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம் என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார் என்றார்கள்.
நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா நஸாயீ
கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இப்னு ஹஜர் அவர்கள் அல்இசாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆனால் இச்செய்தி பலவீனமானதாகும்.
இப்னு ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள்.
இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
قيس المدني مجهول من الثالثة س – تقريب التهذيب : ابن حجر
கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப்
கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?
இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.
ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தமது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் அல்லர் என்று தெரிவித்துள்ளார்கள்.
مجمع الزوائد ومنبع الفوائد
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَقَيْسٌ هَذَا كَانَ قَاصَّ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَمْ يَرْوِ عَنْهُ غَيْرُ ابْنِهِ مُحَمَّدٍ، وَبَقِيَّةُ رِجَالِهِ ثِقَاتٌ.
இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர்.
நூல்: மஜ்மவுஸ் ஸவாயித்
இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.
திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய முபாரக் ஃபூரி, இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய நூருத்தீன் சிந்தீ, அல்பானீ ஆகியோர் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
எனவே இச்செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது
ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்
ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்
முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூற வேண்டும் என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். இது முஸ்லிம்கள் மீது கடமையான ஒரு நற்செயல் என்பதில் சந்தேகமில்லை.
3468حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால், அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ
3469حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى وَزِيَادُ بْنُ أَيُّوبَ قَالَا حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி)
நூல் : திர்மிதீ
இவ்விரு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் மார்க்கம் நினைவூட்டும் குறித்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறுவதால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளுக்குரியவராகிறார். ஏனெனில் ஒரு முறை ஸலவாத் கூறுபவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான்.
صحيح مسلم
616 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம்
இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது சிறப்பிற்குரிய, அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தருகிற ஓர் உன்னதச் செயல் என்பதைச் சந்தேகமின்றி அறிகிறோம்.
السنن الكبرى للنسائي
1221- أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً وَاحِدَةً ، صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ.
யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ
இதுவும் ஸலவாத் ஓதுவதால் கிடைக்கும் சிறப்பை எடுத்துரைக்கின்ற ஆதாரப்பூர்வமான நபிமொழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதால் நமது பாவங்கள் சில மன்னிக்கப்பட்டு நமது அந்தஸ்தும் இறைவனிடத்தில் உயர்கின்றது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
எனவே ஒரு முஸ்லிம் தமக்கு வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் நாம் உயிரினும் மேலாக நேசிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்யும் ஸலாவத்தை ஓத வேண்டும்.
எது ஸலவாத்?
ஸலவாத் ஓதுவதால் மேற்கண்ட சிறப்புகளை அடைய வேண்டும் என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தாக இருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்காக எவ்வாறு ஸலவாத் ஓத வேண்டும் என்பதைப் பின்வரும் நபிமொழியில் கற்றுத் தந்துள்ளார்கள்.
صحيح البخاري
3369 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "3369 அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது நாங்கள் எப்படி ஸலவாத்து' சொல்வது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்-இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்கள் மீதும் அவர்களுடைய மனைவிமார்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களுடைய மனைவிமார்கள் மீதும் அவர்களுடைய சந்ததிகள் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 3369, 4798, 6357, 6358, 6360
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலா(த்)து வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
مسند أحمد
17072 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنِي - فِي الصَّلَاةِ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْمَرْءُ الْمُسْلِمُ صَلَّى عَلَيْهِ فِي صَلَاتِهِ - مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ الْأَنْصَارِيِّ، أَخِي بَلْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، عَنْ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو، قَالَ: أَقْبَلَ رَجُلٌ حَتَّى جَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَمَّا السَّلَامُ عَلَيْكَ، فَقَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ إِذَا نَحْنُ صَلَّيْنَا فِي صَلَاتِنَا صَلَّى الله عَلَيْكَ؟ قَالَ: فَصَمَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَحْبَبْنَا أَنَّ الرَّجُلَ لَمْ يَسْأَلْهُ. فَقَالَ: " إِذَا أَنْتُمْ صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது? ஸல்லல்லாஹு அலைக்க என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தனர். பின்னர் நீங்கள் என் மீது ஸலவாத் கூறும் போது அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ வலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என விடை அளித்தார்கள்.
நூல் : அஹ்மத்
கேள்வி கேட்ட மனிதர் தொழுகையின் போது ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்டார். அப்படிக் கேட்கும் போது ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாத் கூறினார்.
(முன்னிலையாகக் கூறும்போது அலைக்க (உங்கள் மீது) என்றும், படர்க்கையாகக் கூறும்போது அலைஹி (அவர் மீது) என்று கூற வேண்டும்.)
ஸல்லல்லாஹு அலைக்க என்று அவர் ஸலவாத் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. திருத்தவில்லை. மாறாக தொழுகையில் எப்படி ஸலாவாத் ஓதுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.
எனவே தொழுகை அல்லாத நேரங்களில் ஸலவாத் கூறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்படி நபித்தோழர்கள் கூறியுள்ளதே இதற்குச் சான்று.
سنن النسائي
2818 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ الْبَهْزِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " خَرَجَ يُرِيدُ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ حَتَّى إِذَا كَانُوا بِالرَّوْحَاءِ إِذَا حِمَارُ وَحْشٍ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ودَعُوهُ فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ» فَجَاءَ الْبَهْزِيُّ وَهُوَ صَاحِبُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ وَسَلَّمَ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ فَقَسَّمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالْأُثَايَةِ، بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ وَفِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَ رَجُلًا يَقِفُ عِنْدَهُ لَا يُرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ، حَتَّى يُجَاوِزَهُ»
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாத் கூறினார்....... சுருக்கம்
நூல் : நஸாயீ
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
سنن أبي داود
1667 - حدَّثنا قتيبةُ بنُ سعيدٍ، حدَّثنا الليث، عن سعيدِ بنِ أبي سعيد، عن عبد الرحمن بن بُجَيدٍ عن جدته أم بُجَيد - وكانت ممَن بايَع رسولَ الله - صلَّى الله عليه وسلم - أنها قالت له: يا رسولَ الله صلَّى الله عليكَ، إن المسكينَ ليقومُ على بابي، فما أجِدُ له شيئاً أعطيه إيَّاه، فقال لها رسولُ الله - صلَّى الله عليه وسلم -: "إنْ لم تَجِدي له شيئاً تُعطينه إياه إلا ظِلْفاً مُحَرَّقاً فادفعيه إليه في يَدِه"
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைக்க என்று கூறினார்...... சுருக்கம்.
நூல் : அபூதாவூத்
இந்த ஹதீஸ்களிலும் ஸல்லல்லாஹு அலைக்க என்று நபித்தோழர்கள் நேருக்கு நேராக ஸலவாத் கூறியுள்ளனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை.
எனவே தொழுகைக்குள் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹும்ம் ஸல்லி அலா முஹம்மதின் ..... என்று தொடங்கும் ஸலவாத்தை கூற வேண்டும். தொழுகைக்கு வெளியே அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது அல்லது செவியுறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.
இன்றைக்கு நடைமுறையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராததை எல்லாம் ஸலவாத் என்ற பெயரில் ஓதிக் கொண்டிருக்கின்றனர். ஸலாதுன் நாரிய்யா எனும் பெயரில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வகையிலான வாசகங்களை உள்ளடக்கி ஒரு ஸலவாத் (?) ஒன்றை மக்கள் ஓதிக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. அதுபோல் லக்கி ஸலவாத், தாஜ் ஸலவாத், தரூத் அக்பர் போன்று ஆதாரமில்லாமல் உருவாக்கப்பட்ட ஸலவாத்களையும் தவிர்க்க வேண்டும்
பொய்யான செய்திகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் சிறப்பு குறித்து ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பல நாம் மேலே கண்டோம். உலமாக்கள் அதை மக்களிடையே போதிப்பதை விட்டு விட்டு ஆதாரமற்ற, பொய்யான செய்திகளை மக்களிடையே போதிக்கின்றனர். அத்தகைய தவறான செய்திகள் குறித்து நாம் அறிந்து கொள்வோம்.
செய்தி 1
من صلى علي في يوم [الجمعة] ألف مرة ؛ لم يمت حتى يرى مقعده من الجنة.
என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தைக் காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி).
இந்தச் செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் அதிய்யா பலவீனமானவர் ஆவார். நஸாயீ, அபுல் வலீத் உள்ளிட்ட அறிஞர்கள் இவர் பலவீனமானவர். இவரை ஆதாரம் கொள்ளக் கூடாது என்று விமர்சித்துள்ளார்கள்.
பார்க்க அல்ஜரஹ் வத்தஃதீல் பாக 3 பக் 125
அபூ ஹாதம் அவர்கள் இவர் உறுதியானவர் அல்ல; எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.
நூல் : அல்லுஆஃபாஉ வல்மத்ரூகீன்
இமாம் புகாரி மற்றும் உகைலீ ஆகியோர் பலவீனமானவர்கள் எனும் (நூலில்) பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார்கள்.
மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் அத்தீனவரிய்யு என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர், பலவீனமானவர் என்றும், இவர் உறுதியானவர் அல்ல; பல தவறான செய்திகளைக் கொண்டு வந்துள்ளார் என்றும் இமாம் தஹபீ குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தையே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நூல் : மீஸானுல் இஃதிதால், லிஸானுல் மீஸான்
இமாம் உஸ்பஹானீ அவர்களின் அத்தர்கீப் வத்தர்ஹீப் பாகம் 1 பக் 504 லும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட பலவீனமான அறிவிப்பாளர் ஹகம் பின் அதிய்யா இடம் பெறுவதுடன் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸினான் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.
எனவே ஒரு நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுபவர் சொர்க்கத்தில் உள்ள தன் இருப்பிடத்தைப் பார்க்காமல் மரணிக்க மாட்டார் எனும் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
செய்தி 2
شعب الإيمان
2773 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ السِّقَاءِ الْمُقْرِئُ، حَدَّثَنَا وَالِدِي أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو رَافِعٍ أُسَامَةُ بْنُ عَلِيِّ بْنِ سَعِيدٍ الدَّارِمِيُّ بِمِصْرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَالِمٍ الصَّائِغُ، حَدَّثَتْنَا حَكَامَةُ بِنْتُ عُثْمَانَ بْنِ دِينَارٍ، أَخِي مَالِكِ بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، خَادِمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَقْرَبَكُمْ مِنِّي يَوْمَ الْقِيَامَةِ فِي كُلِّ مَوْطِنٍ أَكْثَرُكُمْ عَلَيَّ صَلَاةً فِي الدُّنْيَا مَنْ صَلَّى عَلَيَّ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَةِ الْجُمُعَةِ، قَضَى اللهُ لَهُ مِائَةَ حَاجَةٍ، سَبْعِينَ مِنْ حَوَائِجِ الْآخِرَةِ، وَثَلَاثِينَ مِنْ حَوَائِجِ الدُّنْيَا، ثُمَّ يُوَكِّلُ اللهُ بِذَلِكَ مَلَكًا يُدْخِلُهُ فِي قَبْرِهِ كَمَا يُدْخِلُ عَلَيْكُمُ الْهَدَايَا، يُخْبِرُنِي مَنْ صَلَّى عَلَيَّ بِاسْمِهِ وَنَسَبِهِ إِلَى عَشِيرَتِهِ فَأُثْبِتُهُ عِنْدِي فِي صَحِيفَةٍ بَيْضَاءَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் அதிகமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும் எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ நாளின் பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.
எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான், அல்ஃபவாயித், அத்தர்கீப் வத்தர்ஹீப், ஹயாதுல் அம்பியா, இன்னும் பிற நூல்களில் சில வார்த்தைகள் மாறுபட்ட நிலையில் பதிவாகியுள்ளது.
இதன் எல்லா அறிவிப்புகளிலும் ஹக்காமா என்பவர் தம் தகப்பனார் உஸ்மான் பின் தீனார் வழியாக அறிவிப்பதாகவே உள்ளது. ஹக்காமா என்பவர் ஹதீஸ் துறையில் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார்.
நூல் : ஸிகாத்
أحاديث حكامة تشبه حديث القصاص ليس لها أصول
ஹக்காமாவின் செய்திகள் கதைகளுக்கு ஒப்பானது. அதற்கு எவ்வித அடிப்படைகளும் கிடையாது என்று இமாம் உகைலீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
நூல் : அல்லுஅஃபா லில் உகைலீ
الضعفاء للعقيلي
1199- عثمان بن دينار أخو مالك بن دينار تروى عنه حكامه ابنته أحاديث بواطيل ليس لها أصل.
ஹக்காமா தம் தந்தை வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார். அவைகளுக்கு எந்த அடிப்படையும் கிடையாது என்றும் உகைலீ விமர்சித்துள்ளார்.
பார்க்க : அல்லுஅஃபாஉல் கபீர்
ஹக்காமாவின் தந்தை உஸ்மான் பின் தீனார் எந்த மதிப்பும் இல்லாதவர்; அவரது செய்தி தெளிவான பொய் என்று இமாம் தஹபீ விமர்சித்துள்ளார். அதையே இப்னு ஹஜர் அவர்கள் வழிமொழிந்துள்ளார்.
பார்க்க : மீஸானுல் இஃதிதால், லிஸானுல் மீஸான்
எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. மிகவும் பலவீனமான செய்தியாகும். சில அறிஞர்கள் இந்தச் செய்தியை இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சித்து உள்ளதும் கவனிக்கத்தக்கது.
மற்றொரு அறிவிப்பு
மேலும் இதே செய்தி ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பாகவும் ஜலாஉல் அஃப்ஹாம் பாக 1 பக் 431 என்ற நூலில் பதிவாகியுள்ளது.
அதில் அபூபக்கர் அல்ஹூதலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.
இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று நஸாயீயும், இவரை பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் மற்றும் அபூஹாதம் ஆகியோரும் நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்னு மயீன் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
பார்க்க : மீஸானுல் இஃதிதால்
அதே ஜலாஉல் அஃப்ஹாம் நூலில் சுப்ஹ் மற்றும் மக்ரிப் தொழுத பிறகு யாரிடத்திலும் பேசாமல் நூறு முறை ஸலவாத் கூறினால் அவரின் 100 தேவைகள் அல்லாஹ்வால் பூர்த்தி செய்யப்படும் என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் இப்றாஹீம் பின் அஷ்அஸ் குராஸானீ எனும் பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.
எனவே மேற்கண்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
செய்தி 3
(من صلى علي حين يصبح عشراً وحين يمسي عشراً أدركته شفاعتي يوم القيامة)).
யார் காலையிலும், மாலையிலும் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது பரிந்துரை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
நூல் : அஸ்ஸலாத்து அலன் நபி
இதுவும் பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இந்தச் செய்தியில் சில குறைபாடுகள் உள்ளன. முதலாவது இதில் அறிவிப்பாளர் வரிசை தொடர்பு அறுந்து உள்ளது. காலித் பின் மஃதான் என்பவர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்று இமாம் அஹ்மத் கூறுகிறார்.
நூல் : ஜாமிஉத் தஹ்ஸீல்
167 – خالد بن معدان الحمصي يروي عن أبي عبيدة بن الجراح ولم يدركه قال أحمد بن حنبل لم يسمع من أبي الدرداء
காலிதிற்கும், அபுத்தர்தா அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். அவர் யாரென்று அறியப்படவில்லை. இதனடிப்படையில் பல அறிஞர்கள் இச்செய்தியை பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது இந்தச் செய்தியில் உள்ள முக்கிய குறைபாடாகும்.
அடுத்து இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பகிய்யா பின் வலீத் என்பவர் முதல்லிஸ் – இருட்டடிப்பு செய்பவர் ஆவார். இவர் தாம் நேரடியாகச் செவியேற்றதைக் குறிக்கும் வார்த்தைகளைக் கூறவில்லை. ஹதீஸ்கலை விதிப் பிரகாரம் இருட்டடிப்பு செய்பவர் குறிப்பிட்ட செய்தியை தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டதைக் குறிக்கும் வார்த்தைகளைக் கூறாவிடில் அந்தச் செய்தி ஏற்கப்படாது. எனவே இதுவும் இந்தச் செய்தியில் குறைவை ஏற்படுத்துவதால் செய்தி பலவீனமாகிறது.
செய்தி 4
الترغيب والترهيب لقوام السنة
1696- أخبرنا أبو الحسن: علي بن أحمد المؤذن المديني الزاهد بنيسابور، ثنا أحمد بن علي الحافظ، ثنا أبو بكر: محمد بن الحسين بن جعفر البخاري -قدم حاجاً- أن أبا حسان: عيسى بن عبد الله حدثهم قال: ثنا محمد بن رزام، ثنا محمد بن عمرو، ثنا مالك بن دينار وأبان، عن أنس -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كل يوم جمعة أربعين مرة محا الله عنه ذنوب أربعين سنة، ومن صلى علي مرة واحدة فتقبلت منه، محا الله عنه ذنوب ثمانين سنة،)).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை யார் என் மீது ஸலவாத் ஓதுகிறாரோ அவரது நாற்பது வருட பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். ஒரு முறை என் மீது ஸலவாத் ஓதினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்பது வருட பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : அத்தர்கீப் வத்தர்ஹீப்
இதில் முஹம்மத் பின் ரஸாம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர். ஆகையினால் ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரைப் புறக்கணித்து விட்டனர் என்று அஸதீ அவர்களும், இவர் தவறான செய்திகளை அறிவிப்பவர் என்று தாரகுத்னீ அவர்களும் விமர்சித்துள்ளனர்.
الضعفاء والمتروكين لابن الجوزي
محمد بن رزام أبو عبد الملك البصري يروي عن محمد بن عبد الله الأنصاري قال الأزدي ذاهب الحديث تركوه وقال الدراقطني يحدث بالباطيل
நூல் : அல்லுஅஃபா வல்மத்ரூகீன்
இமாம் தஹபீ அவர்கள், இவர் ஹதீஸில் இட்டுக்கட்டுபவர்; சந்தேகிக்கப்படுபவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: மீஸானுல் இஃதிதால்
இதிலிருந்து இது மிகவும் பலவீனமான செய்தி என்பது தெளிவாகிறது.
செய்தி 5
மேற்கண்ட வாசகத்தை உள்ளடக்கியதுடன் ஸலவாத் தொடர்பான மற்றுமொரு செய்தி அத்தர்கீப் ஃபீ பழாயிலி அஃமால் எனும் நூலில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
الصلاة علي نور على الصراط
என் மீது ஸலவாத் சொல்வது (மறுமையின் இருள் நிறைந்த) ஸிராத் எனும் பாலத்தில் ஒளி தருவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதில் அவ்ன் பின் உமாரா, ஹஜ்ஜாஜ் பின் ஸினான், மற்றும் அலி பின் ஜைத் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களை எண்ணற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.
பார்க்க : தஹ்தீபுல் கமால், லிஸானுல் மீஸான், தஹ்தீபுத் தஹ்தீப்
தாரகுத்னீ, இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்தச் செய்தி மிக பலவீனமான செய்தி என்று விளக்கியுள்ளார்கள்.
செய்தி 6
المعجم الكبير للطبراني
447 – حَدَّثَنَا أَحْمَدُ , قَالَ: نا إِسْحَاقُ بن وَهْبٍ الْعَلافُ , قَالَ: نا بِشْرُ بن عُبَيْدِ اللَّهِ الدَّارِسِيُّ , قَالَ: نا حَازِمُ بن بَكْرٍ، عَنْ يَزِيدَ بن عِيَاضٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
இந்தச் செய்தி தப்ரானீ கபீர், அவ்ஸத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பில் உள்ள யஸீத் பின் இயாழ் என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்று சான்றளித்துள்ளனர்.
இவரை இமாம் புகாரி ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் இமாம் மாலிக், இப்னு மயீன் ஆகியோர் இவர் ஹதீஸில் பொய் கூறுபவர் என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் எண்ணற்ற அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பார்க்க : மீஸானுல் இஃதிதால்
ஆகவே இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான, இட்டுக்கட்டுப்பட்ட தரத்தில் அமைந்த செய்தியாகும்.
மேற்கண்ட அதே செய்தி அத்தர்கீப் வத்தர்ஹீப் எனும் நூலிலும் பதிவாகியுள்ளது. எனினும் இதன் அறிவிப்பும் பலவீனமாகவே உள்ளது.
الترغيب والترهيب لقوام السنة
1697- أخبرنا عبد الواحد بن إسماعيل، أنبأ أبو محمد الخبازي ثنا أبو محمد: عبد الله بن أحمد الحفصي، ثنا إبراهيم بن إسماعيل الزاهد -المعروف بالخزاز- ثنا عبد السلام بن محمد المصري بمصر، ثنا سعيد بن عفير قال: حدثني محمد بن إبراهيم بن أمية القرشي المديني، عن عبد الرحمن بن عبد الله الأعرج، عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كتاب لم تزل الملائكة يستغفرون له ما دام اسمي في ذلك الكتاب)).
இதில் அப்துஸ் ஸலாம் பின் முஹம்மத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், மறுக்கப்பட வேண்டிய செய்திகள் கொண்டவர் என்று இமாம் கதீப் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
நூல் : லிஸானுல் மீஸான்
எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?
கேள்வி:
நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அது "கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, "இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், "தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இறைவா!) "அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும், அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!'' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
4357 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், "சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், "இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒரு போதும்) எந்த குதிரையி-ருந்தும் விழுந்ததில்லை. "துல் கலஸா' என்பது யமன் நாட்டி-ருந்த "கஸ்அம்' மற்றும் "பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது "அல் கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறிகேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்கLiடம் நீ சிக்கிக் கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்த போது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன்.
"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன்'' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். பிறகு "அஹ்மஸ்' குலத்தவரில் "அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று தான் (ஆக்கி) விட்டு வந்துள்ளேன்'' என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) "அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.
அந்த நாத்திக நண்பர் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்ய அவருக்கு வழி இல்லாததால் அவருக்கும் இது போல் நினைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் நாம் விளக்கம் அளித்தால் தெளிவு பெற்று தம்முடைய தவறான கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.
மேற்கண்ட ஹதீஸ்கள் குறித்து விளக்குவதற்கு முன்னர் பொதுவாக கட்டாய மதமாற்றம் குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை முதலில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:256
இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும், தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்துக்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்றும் இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.
மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
திருக்குர்ஆன் 10:99
ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவதோ, நிர்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் தெள்ளத் தெளிவாக பிரகடனம் செய்கிறது.
இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 9:6
ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 109 வது அத்தியாயம்)
உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு என்ற பிரகடனத்தின் மூலமும் வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்புதல் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்படுகிறது.
வேறு மார்க்கத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்தால் அது தான் மதத்தைத் தினிப்பதற்கு சரியான தருனமாகும். ஆனால் அப்படி யாரும் அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்து கூறுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு பாதுகாப்பான ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என்று இவ்வசனமும் தெளிவாகச் சொல்கிறது.
மேலும் எந்த நற்செயலாக இருந்தாலும் உளப்பூர்வமாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வேண்டாவெறுப்பாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு அழைப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.
இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுவோரிடம் இருந்து தான் இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
திருக்குர்ஆன் 5:27
صحيح البخاري
2068 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ»
"முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக இருந்தும், யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்கள் யூதர்களாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் முஸ்லிம்களை விட பொருளாதாரத்தை அதிகம் திரட்டும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கும் இது ஆதாரமாகும். வாள்முனையில் இஸ்லாம் பரப்ப்ப்பட்டிருந்தால் இஸ்லாமிய நாட்டின் தலை நகரத்தில் யூதர்கள் எப்படி இத்தனை செல்வாக்குடன் இருந்திருக்க முடியும்?
صحيح البخاري
1311 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا»
எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். "அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்'' என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்'' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1311
வாள்முனையில் மதமாற்றம் செய்வது தான் இஸ்லாத்தின் கொள்கை என்றால் எப்படி யூதர்கள் அங்கே இருந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழியாக பிரேதத்தை எடுத்துச் சென்றிருப்பார்கள்? அந்த பிரேதம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவர் எப்படி வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பி இருப்பார்?
இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்த போதும் அந்த நாத்திக நண்பர் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியில் இருந்து இதற்கு மாற்றமான கருத்து தெரிகிறதே என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.
துல்கலஸா என்ற ஊரில் உள்ள ஆலயத்தைத் தகர்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை அனுப்பியது வாள் முனையில் பிற மதத்தினரை அடக்குவதற்கா என்றால் நிச்சயமாக இல்லை.
எந்த மதத்தினரும் மற்ற மதத்தினரின் ஆலயங்களை தகர்க்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை.
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
திருக்குர்ஆன் 22:40
அப்படியானால் அரபு தீபகற்பத்தில் எத்தனையோ வழிபாட்டுத் தலங்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றையும் தகர்ப்பதற்காக ஆட்களை அனுப்பாமல் இந்த ஒரு ஆலயத்தை மட்டும் தகர்க்க ஆள் அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு சிறப்பான காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் அந்தச் சம்பவத்திற்கு உள்ளேயே ஒளிந்து இருக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் புனிதச் சின்னங்கள் உள்ளன. அவரவர் புனிதச் சின்னங்களை அவரவர் பேணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு மதத்தின் புனிதச் சின்னத்தைக் கேவலப்படுத்தும் வகையில் மற்றொரு மதத்தினர் நடப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.
முஸ்லிம்கள் கஅபா எனும் ஆலயத்தைப் புனிதச் சின்னமாக மதிப்பது அன்றும், இன்றும் உலகுக்கே தெரிந்த ஒன்று தான். முஸ்லிம் அல்லாதவர்கள் அது போல் ஒன்றை எழுப்பி அது தான் கஅபா என அறிவித்துக் கொண்டு அந்த ஆலயத்தில் இஸ்லாம் தடைசெய்துள்ள வழிபாட்டு முறைகளைச் செயல்படுத்தினால் அதில் விஷமத்தனமும் குழப்பம் விளைவித்தலும் தான் அடங்கி இருக்கும்.
சமீபத்தில் கூட மேற்கத்திய நாடு ஒன்றில் (நாட்டின் பெயர் நினைவில் இல்லை) காபா ஆலயம் போல் அமைக்க முயற்சித்து உலக முஸ்லிம்களின் எதிர்ப்பால அது கைவிடப்பட்டது.
இது போன்ற வேலையைத் தான் துல்கலசா பகுதியினர் செய்தனர். அவர்கள் ஒரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டு அதை கஅபா என்று பெயரிட்டுக் கொண்டு காபாவில் செய்யக் கூடாத காரியங்களை அதில் அரங்கேற்றம் செய்தனர். இதனால் தான் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியது. அதை அவர்கள் கஅபா என்று அழைத்தனர் என்ற விபரம் அந்தச் செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது கூட பள்ளிவாசல் வடிவத்தில் கட்டடம் கட்டி அதற்கு பள்ளிவாசல் எனவும் பெயர் சூட்டிக் கொண்டு அதற்குள் சிலை வணக்கம் செய்தால் இந்து ஆட்சியாளர்களே அதை அப்புறப்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தனர்.
பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தில் கட்டாயப்படுத்தி இணைப்பது இஸ்லாத்தில் இல்லை என்பதை முன்னர் கண்டோம்.
ஆனாலும் பல போர்க்களங்களில் மட்டும் இப்படி சொன்னதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த சகோதரர் சுட்டிக்காட்டியது அல்லாமல் இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.
இஸ்லாத்தை ஒழிப்பதற்காக போருக்கு வரும் போதும், போரைத் தினிக்கும் போதும் எதிரிகள் தோற்று விட்டால் அவர்கள் தோற்று விட்டதை உறுதி செய்வதற்காக இஸ்லாத்தில் சேர்வதாகக் கூறினால் அவர்களை எதிரிகளாகப் பாவிக்காமல் விட்டு விடலாம் என்பதற்காகத் தான் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கம்யூனிசத்தை எதிர்த்து யுத்தம் நடந்தால் எதிரிகள் தோல்வியுறும் போது கயூனிசத்தை ஏற்கிறோம் என்று சொல்வது தான் தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஆகும். தோற்ற எதிரிகளைக் கொன்று போடாமல் உயிருடன் விட்டு வைப்பதற்காக எதை எதிர்த்து படைதிரட்டி வந்து பல உயிர்கள் பலியாகவும் பொருளாதாரம் அழியவும் காரணமாக இருந்தாயோ அதையே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொள் என்று சொல்ல கட்டளையிடுவதை யாரும் குறை கூற முடியாது.
மற்ற ஆட்சியாளர்கள் செய்வது போல் கொன்று போடுவதை விட இது எத்தனையோ மடங்கு சிறந்தது. இது அல்லாத சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தை ஏற்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தியது இல்லை.
அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தின் புனிதச் சின்னம் போல் உருவாக்கி இஸ்லாத்துக்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்த அந்த ஊரார் மீது நபிகள் நாயகம் போர் செய்ய படை அனுப்பினார்கள். எதிரிகள் தோற்ற போது கொன்று குவிக்காலம்; போர் தர்மப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி விட்டு பிழைத்துப் போ என்று சொல்லப்பட்டது.
போர் அல்லாத எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போல் நபிகள் நாயகம் நடந்து கொண்டதில்லை.
இந்தியாவுடன் போர் செய்து ஒரு நாட்டுப்படை தோற்று விட்டால் அந்தப் படையினர் தமது ஊரை இந்திய நாடு தான் என்று ஒப்புக் கொள்ள வலியுறுத்தினால் அதை எப்படி குறை கூற முடியாதோ அப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் பின்னரும் அந்த நாத்திக நண்பர் புரிந்து கொள்ள மறுத்தால் நாத்திகர்களும், நாத்திகர்களால் மதிக்கப்படும் மன்னர்களும் போர்க்களங்களில் எப்படி நடந்து கொண்டனர் என்ற கொடூர வரலாற்றுப் பக்கங்களை எடுத்துக் காட்டுங்கள்.
சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?
சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?
பி. ஜைனுல் ஆபிதீன்
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம்.
இந்த ஹதீஸ் குறித்து கடந்த காலங்களில் அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்போது சில அறிஞர்கள், இது பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
திருமணம் எளிமையாகவும், சிக்கனமாகவும் தான் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆடம்பரத்தையும், வீண் விரயத்தையும் கண்டிக்கின்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளதால் அவர்களும் சிக்கனமான திருமணத்தையே வலியுறுத்துகின்றனர்.
ஆனால் மேற்கண்ட நபிமொழி பலவீனமானதாக உள்ளதால் அதை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்பது தான் அவர்களது விமர்சனம்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதால் இது பலவீனமான ஹதீஸாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
முஸ்னத் அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் தயாலிஸி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. அந்த ஹதீஸ் இவை தான்:
مسند أحمد بن حنبل
24573 حدثنا عبد اللَّهِ حدثني أبي ثنا عَفَّانُ قال ثنا حَمَّادُ بن سَلَمَةَ قال أخبرني بن الطُّفَيْلِ بن سَخْبَرَةَ عَنِ الْقَاسِمِ بن مُحَمَّدٍ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً
مسند إسحاق بن راهويه
[946] أخبرنا وكيع نا أبو عيسى موسى بن بكر الأنصاري عن القاسم بن محمد عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال له أبي أسمعته من رسول الله e فقال نعم هكذا أخبرت قال إسحاق قلت للملائي هو أبو عيسى الأنصاري فقال نعم
مسند الطيالسي
[1427] حدثنا أبو داود قال حدثنا موسى بن تليد ان من آل أبي بكر الصديق قال سمعت القاسم بن محمد يحدث عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال لي أبى عائشة اخبرتك عن رسول الله e فقال هكذا حدثت وهكذا حفظت
இன்ன அஃலமன் நிகாஹி பரக(த்)தன் அய்ஸருஹூ முஃனதன் (குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது)
என்ற நபிமொழி குறித்து அவர்கள் செய்யும் விமர்சனங்களைப் பார்த்து விட்டு அவை சரியானவையா என்பதை ஆய்வு செய்வோம்.
முஸ்னத் அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் தயாலிஸி ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸ் குறித்த விமர்சனத்தைப் பார்ப்போம்.
விமர்சனங்கள்
மேற்கண்ட மூன்று நூற்களிலும் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்னத் அஹ்மத் நூலின் அறிவிப்பாளர் தொடர்
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார். காஸிம் பின் முஹம்மத் கூறியதாக இப்னுத் துபைல் பின் ஸக்பரா அறிவிக்கிறார். இப்னுத் துபைல் பின் ஸக்பரா கூறியதாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கிறார். ஹம்மாத் பின் ஸலமா கூறியதாக அஃப்பான் அறிவிக்கிறார். அஃப்பானிடம் நேரில் செவியுற்று அஹ்மத் பின் ஹம்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.முஸ்னத் அஹ்மதின் அறிவிப்பாளர்களில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்பவரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
முஸ்னத் இஸ்ஹாக் அறிவிப்பாளர் தொடர்
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார். காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் பக்ர் அறிவிக்கிறார். மூஸா பின் பக்ர் கூறியதாக வகீவு அறிவிக்கிறார். வகீவு கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.முஸ்னத் இஸ்ஹாக்கின் அறிவிப்பாளர்களில் மூஸா பின் பக்ர் என்பவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
முஸ்னத் தயாலிஸி அறிவிப்பாளர் தொடர்
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார். காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் தலீதான் அறிவிக்கிறார் மூஸா பின் தலீதான் கூறியதாக அபூதாவூத் அறிவிக்கிறார் அபூதாவூத் கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார். முஸ்னத் தயாலிஸியின் அறிவிப்பாளர்களில் மூஸா பின் தலீதான் என்பவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மூன்று ஹதீஸ்களிலும் விமர்சனத்துக்குரிய மூவர் காரணமாகவே பலவீனமானது என்று விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால் இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். ஒரே நபர் தான் இம்மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். மேற்கண்ட அந்த அறிவிப்பாளர் ஈஸா பின் மைமூன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றார்.
மூஸா பின் பக்ர் என்றும்,
மூஸா பின் தலீதான் என்றும்
இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்
ஈஸா பின் மைமூன் என்றும்
இப்படி நான்கு பெயர்களால் இவர் குறிப்பிடப்படுகிறார்.
ஈஸா பின் மைமூன் பற்றிய விமர்சனம்
இவரைப் பற்றி புகாரி அவர்கள் முன்கருல் ஹதீஸ் (இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்) என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.
திர்மிதீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர் இல்லை என்று நஸாயீ கூறுகிறார்.
அம்ரு பின் அலீ, அபூஹாதம் ஆகியோர், மத்ரூகுல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் விடப்பட வேண்டியவை) என்று கூறியுள்ளனர்.
இவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ கூறுகிறார்.
இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறத்தக்க பல ஹதீஸ்களை நம்பகமானவை என்ற பெயரில் இவர் அறிவித்துள்ளார் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.
இவரது ஹதீஸ்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யஃகூப் கூறுகிறார்.
இவரை அனைவரும் பலவீனராகக் கருதியுள்ளனர் என்று தஹபீ கூறுகிறார்.
மூஸா பின் பக்ர் என்றும்,
மூஸா பின் தலீதான் என்றும்
இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்
ஈஸா பின் மைமூன் என்றும்
குறிப்பிடப்படும் இவரைப் பற்றி மேற்கண்டவாறு அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்கால அறிஞர்கள் அல்பானி, ஷுஐப் அல்அர்னாவூத் ஆகியோரும், இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றி மேற்கூறப்பட்ட விமர்சனங்கள் இருக்குமானால் அவர் நிச்சயம் பலவீனமானவர் என்பதிலும், அவர் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானது என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஆனால் ஆழமாக நாம் ஆய்வு செய்த போது இந்த விமர்சனங்களுக்கும், இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெரிய வருகிறது.
விமர்சனங்கள் மறு ஆய்வு
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இரண்டு அறிவிப்பாளர்கள் சமகாலத்தில் இருந்துள்ளனர். இருவருமே திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற நபிமொழியை ஒரு ஈஸா பின் மைமூன் அறிவிக்கிறார்.
திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள்! என்ற ஹதீஸை மற்றொரு ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளார்.
இருவருமே ஈஸா பின் மைமூன் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்.
திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.
இந்த இரண்டாமவரைப் பற்றித் தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய அறிஞர்கள் மேற்கண்ட கடுமையான விமர்சனங்களைச் செய்துள்ளனர். மேற்கண்ட விமர்சனம் எதுவும் முதலாவதாகக் குறிப்பிட்ட ஈஸா பின் மைமூனைப் பற்றியது அல்ல என்பது நமக்குத் தெரிய வருகிறது.
இவ்விருவரின் பெயரும் ஈஸா,
இவ்விருவரின் தந்தையர் பெயரும் மைமூன்
என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ
அவர் பெயர் காஸிம் ஆகும்.
காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.
ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.
திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும், முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (அலி) (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் அவர்களின் மகனுமாவார்.
இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும் இவ்விருவரின் ஆசிரியர்களின் பெயர்கள் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் பல அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.
இவ்விருவரின் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயரும், இவ்விருவரின் தந்தையர் பெயரும் ஒன்றுபட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி நாம் அறிய முடியும்.
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் என்பதற்கான ஆதாரங்கள்
تاريخ أسماء الثقات
1062 وعيسى بن ميمون الذي يروي أعظم النكاح بركة ايسره مؤونة يقال له بن تليدان وهو من ولد أبي قحافة ويروي عنه حماد بن سلمة يقول بن سخبرة وهو هذا الذي روى عنه وكيع وأبو نعيم وليس به بأس وعيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب ضعيف ليس بشيء
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை. திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் முஹம்மத் பின் கஅபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிக்கும் ஈஸா ஆவார்.
நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத்
تهذيب الكمال
ت ق عيسى بن ميمون المدني المعروف بالواسطي مولى القاسم بن محمد بن أبي بكر الصديق يقال له بن تليدان ويقال إنه الذي يحدث عنه حماد بن سلمة ويسميه الطفيل بن سخبرة روى محمد بن أبي بكر الصديق ت ق ومحمد بن كعب القرظي ونافع مولى بن عمر وهشام بن عروة ويزيد بن ذكوان وأبي الزبير المكي روى عنه إبراهيم بن الحسن العلاف وأحمد بن بشير الكوفي ت وآدم بن أبي إياس ق وأبو خزيمة أسلم بن أبي شيبة الهاشمي البصري وحاتم بن عبيد الله النمري وحجاج بن محمد المصيصي وحجاج بن نصير الفساطيطي وحفص بن الجارود قاضي هراة وحماد بن سلمة وسماه الطفيل بن سخبرة فيما قيل وخالد بن عبد الرحمن وسعيد بن سليمان الواسطي وشيبان بن فروخ وصالح بن بيان الأنباري وعبد الصمد بن النعمان وعبد الكريم بن روح بن عنبسة وعثمان بن عمر بن فارس فصحف في اسمه فقال أبو عيسى المدني وعمر بن علي بن مقدم وأبو نعيم الفضل بن دكين ومحمد بن جعفر المدائني ومحمد بن مصعب القرقساني ووكيع بن الجراح ويحيى بن سعيد العطار الحمصي ويزيد بن هارون ت قال أحمد بن سنان القطان عن عبد الرحمن بن مهدي تهذيب الكمال استعديت على عيسى بن ميمون في هذه الأحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا أعود وقال إبراهيم بن عبد الله بن الجنيد سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون الذي يحدث عن القاسم عن عائشة عن النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة يقال له بن تليدان وهو من آل أبي قحافة ليس به بأس وهو الذي حدث عنه حماد بن سلمة قال حدثني بن سخبرة هو هذا ولم يرو هذا عن محمد بن كعب شيئا والذي يحدث عن محمد بن كعب ليس بشيء يعني إن الذي يحدث عن محمد بن كعب آخر وقال عباس الدوري عن يحيى بن معين عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பார், இப்னு தலீதான் என்றும் கூறப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித் தோன்றலாவார். இவரிடம் தவறு இல்லை. இப்னு ஸக்பரா எனக்கு அறிவித்தார் என்று ஹம்மாத் பின் ஸலமா கூறுவது இவரைத் தான். இவர் முஹம்மத் பின் கஅப் வழியாக எதையும் அறிவித்ததில்லை.
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.
ஆயிஷா, காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தெளிவுபடுத்துகிறார்.
நூல்: தஹ்தீபுல் கமால்
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும், அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.
திருமணத்தைப் பிரகடம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர். குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.
இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.
மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா வகீவு, அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.
அம்ரு பின் அலீ, புகாரி, நஸாயீ உள்ளிட்டோர் செய்த விமர்சனங்கள் இவரைப் பற்றியதல்ல என்பதைப் பின்வரும் கூற்றுக்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
الكامل في ضعفاء الرجال
[1388] عيسى بن ميمون الجرشي مديني يكنى أبا يحيى حدثنا بن أبي بكر قال ثنا عباس قال سمعت يحيى وسئل عن عيسى بن ميمون من هو قال يقال له عيسى الجرشي حدثنا بن حماد وابن أبي بكر قالا حدثنا عباس عن يحيى قال عيسى بن ميمون ليس بشيء وقال الدولابي وفي موضع آخر عيسى بن ميمون المدني يروي أعلنوا النكاح ويروي عن محمد بن كعب ضعيف الحديث ليس بشيء حدثنا الجنيدي ثنا البخاري قال عيسى بن ميمون المدني مولى القاسم بن محمد القرشي صاحب مناكير عن محمد بن كعب هو أبو عبيدة وفي موضع آخر التيمي البصري منكر الحديث وقال عمرو بن علي عيسى بن ميمون المديني يروي عن محمد بن كعب متروك الحديث وقال النسائي عيسى بن ميمون المديني يروي عن محمد بن كعب القرظي متروك الحديث حدثنا سعيد بن عثمان الحراني ثنا عبد الرحمن بن عبيد الله بن أخي الامام قال ثنا محمد بن يزيد الواسطي عن عيسى بن ميمون عن القاسم عن عائشة قالت قال رسول الله e أعلنوا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدف وليولم أحدكم ولو بشاة ثنا عمر بن سنان ثنا نصر بن عبد الرحمن الوشاء قال ثنا أحمد بن بشير عن عيسى بن ميمون عن القاسم عن عائشة قالت قال رسول الله e لا ينبغي لقوم فيهم أبو بكر يؤمهم غيره
திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவருமான ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவர் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தவ்லாபீ கூறுகிறார்.
முஹம்மத் பின் கஅப் வழியாக நிராகரிக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்துள்ள ஈஸா பின் மைமூன் அல்மதனீ, முன்கருல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் நிரகாரிக்கப்படும்) என்று புகாரி கூறினார். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று அம்ரு பின் அலீ கூறுகிறார். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸாயீ கூறுகிறார்.
நூல்: அல்காமில் ஃபில்லுஅஃபா
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸாவையே புகாரி, அம்ரு பின் அலீ, நஸாயீ உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர் என்பது இந்த விமர்சனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் புகாரி அவர்கள் எந்த ஈஸாவை விமர்சனம் செய்தார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
التاريخ الكبير
[2781] عيسى بن ميمون المديني عن محمد بن كعب منكر الحديث مولى القاسم بن محمد القرشي
முஹம்மத் பின் கஅப் மூலம் அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பாரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்.
நூல்: புகாரியின் தாரீகுல் கபீர்
الضعفاء الصغير
[266] عيسى بن ميمون المدني عن محمد بن كعب منكر الحديث
முஹம்மத் பின் கஅப் வழியாக அரிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பாரின் ஹதீஸ்கள் நிகாரிக்கத்தக்கவை.
நூல்: புகாரியின் லுஅஃபாவுஸ் ஸகீர்
ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸாயீ அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.
الضعفاء والمتروكين
[425] عيسى بن ميمون المدني يروي عن محمد بن كعب القرظي متروك الحديث
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை.
நூல்: நஸாயீயின் அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்
மேற்கண்ட விமர்சனங்களில் பலவீனமான ஈஸா யார் என்பதைத் தெளிவுபடுத்தும் போது முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க!
இப்னு ஹஜர், திர்மிதீ உள்ளிட்டோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றித் தான் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.
تلخيص الحبير
[2122] قوله روي أنه صلى الله عليه وسلم قال أعلنوا النكاح واضربوا عليه بالغربال أي الدف الترمذي وابن ماجة والبيهقي عن عائشة وفي إسناده خالد بن الياس وهو منكر الحديث قاله أحمد وفي رواية الترمذي عيسى بن ميمون وهو يضعف قاله الترمذي وضعفه بن الجوزي من الوجهين نعم روى أحمد وابن حبان والحاكم من حديث عبد الله بن الزبير أعلنوا النكاح وروى أحمد والنسائي والترمذي وابن ماجة
திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை திர்மிதீ, பைஹகீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். திர்மிதீயின் அறிவிப்பில் ஈஸா பின் மைமூன் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதியே குறிப்பிட்டுள்ளார்.
நூல்: இப்னு ஹஜரின் தல்கீஸ்
திருமணத்தைப் பகிரங்கப்படுத்தி, முரசு கொட்ட வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரைத் தான் திர்மிதீ பலவீனப்படுத்தியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
திர்மிதி அவர்கள் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர் என்று கூறுவதுடன் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர் என்பதையும் இணைத்துக் கூறுகிறார்கள்.
இவரை அனைவரும் பலவீனப்படுத்தியுள்ளனர் என்று தஹபீ கூறியதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றியது தான்.
இதைப் பின்வரும் அறிஞர்கள் கூற்றிலிருந்து அறியலாம்.
الكاشف
[4403] عيسى بن ميمون المدني عن القاسم وسالم وعنه حجاج بن محمد وآدم وشيبان بن فروخ ضعفوه ت ق
ஈஸா பின் மைமூன் அல்மதனி என்பாரை அறிஞர்கள் பலவீனமாக்கியுள்ளனர்.
நூல்: அல்காஷிஃப்
ஈஸா பின் மைமூன் என்ற பெயருடன் அல்மதனீ என்ற அடைமொழியையும் தஹபீ இனைத்துக் கூறுகிறார். இவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்பதும், ஒருவர் பலவீனமானவர்; மற்றவர் நம்பகமானவர் என்பதும், சிக்கனமான திருமணம் பற்றிய ஹதீஸை நம்பகமான ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளதால் இது சரியான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை.
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் உள்ள இருவரை அவர்களின் ஆசிரியர் யார் என்பதை வைத்தும் வேறுபடுத்தி அறியலாம்.
ஈஸா பின் மைமூன் என்ற பெயரைக் கொண்ட இருவரின் ஆசிரியர் காசிம் பின் முஹம்மத் ஆவார். ஆனால் இருவரும் வேறு வேறு நபர்களாவர்.
ஒரு காசிம் பின் முஹம்மத் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்; மற்றொரு காசிம் பின் முஹம்மத் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.
இந்த அடையாளத்தை வைத்தும் சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸை அறிவித்த ஈஸா நம்பகமானவர் என்று மேலும் உறுதி செய்யலாம்.
காஸிம் பின் முஹம்மத் என்ற பெயரில் இருவர் என்பதற்கான ஆதாரம்
تهذيب الكمال
ت ق عيسى بن ميمون المدني المعروف بالواسطي مولى القاسم بن محمد بن أبي بكر الصديق يقال له بن تليدان ويقال إنه الذي يحدث عنه حماد بن سلمة ويسميه الطفيل بن سخبرة روى محمد بن أبي بكر الصديق ت ق ومحمد بن كعب القرظي ونافع مولى بن عمر وهشام بن عروة ويزيد بن ذكوان وأبي الزبير المكي روى عنه إبراهيم بن الحسن العلاف وأحمد بن بشير الكوفي ت وآدم بن أبي إياس ق وأبو خزيمة أسلم بن أبي شيبة الهاشمي البصري وحاتم بن عبيد الله النمري وحجاج بن محمد المصيصي وحجاج بن نصير الفساطيطي وحفص بن الجارود قاضي هراة وحماد بن سلمة وسماه الطفيل بن سخبرة فيما قيل وخالد بن عبد الرحمن وسعيد بن سليمان الواسطي وشيبان بن فروخ وصالح بن بيان الأنباري وعبد الصمد بن النعمان وعبد الكريم بن روح بن عنبسة وعثمان بن عمر بن فارس فصحف في اسمه فقال أبو عيسى المدني وعمر بن علي بن مقدم وأبو نعيم الفضل بن دكين ومحمد بن جعفر المدائني ومحمد بن مصعب القرقساني ووكيع بن الجراح ويحيى بن سعيد العطار الحمصي ويزيد بن هارون ت قال أحمد بن سنان القطان عن عبد الرحمن بن مهدي تهذيب الكمال استعديت على عيسى بن ميمون في هذه الأحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا أعود وقال إبراهيم بن عبد الله بن الجنيد سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون الذي يحدث عن القاسم عن عائشة عن النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة يقال له بن تليدان وهو من آل أبي قحافة ليس به بأس وهو الذي حدث عنه حماد بن سلمة قال حدثني بن سخبرة هو هذا ولم يرو هذا عن محمد بن كعب شيئا والذي يحدث عن محمد بن كعب ليس بشيء يعني إن الذي يحدث عن محمد بن كعب آخر وقال عباس الدوري عن يحيى بن معين عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء
ஹம்மாத் பின் ஸலமாவின் ஆசிரியரும், இப்னு தலீதான் என்றும், துஃபைல் பின் ஸக்பரா என்றும் அழைக்கப்படுபவருமான ஈஸா பின் மைமூன் என்பார், அபூபக்ர் ஸித்தீக் அவர்களின் பேரனும் முஹம்மதின் மகனுமான காஸிமின் அடிமையாவார்.
நூல்: தஹ்தீபுல் கமால்
الضعفاء الكبير للعقيلي
عيسى بن ميمون عن القاسم بن محمد بن كعب القرظي . حدثنا زكريا بن يحيى الساجي قال : حدثنا أحمد بن سنان قال : سمعت عبد الرحمن بن مهدي ، قال استعديت على عيسى بن ميمون فقلت : هذه الأحاديث التي يحدث بها عن القاسم بن محمد عن عائشة ، فقال : لا أعود . حدثنا محمد بن عيسى قال : حدثنا عباس قال : قلت ليحيى : عيسى بن ميمون ؟ قال : ليس حديثه بشيء . وحدثني آدم بن موسى قال : سمعت البخاري قال : عيسى بن ميمون عن محمد بن كعب القرظي ، منكر الحديث
கஅப் என்பாரின் பேரனும் முஹம்மத் என்பாரின் மகனுமாகிய காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரே பலவீனமானவர்.
நூல்: லுஅஃபாவுல் உகைலீ
تاريخ ابن معين
3950 قال يحيى عيسى بن ميمون الذي يروي أعظم النكاح بركة أيسره مؤنة يقال له بن تليدان وهو من ولد أبي قحافة ويروى عن حماد بن سلمة يقول بن سخبرة وهو هذا قال يحيى وابن سخبرة هذا يروي عنه وكيع وأبو نعيم وليس به بأس 3951 وعيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف ليس بشيء)
تاريخ ابن معين
3833 وعيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரக்கத் மிகுந்ததாகும் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பார் இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாஃப்ஃஃவின் பேரனாவார். ஹம்மாத் பின் ஸலமா வழியாகவும் இவர் அறிவித்துள்ளார். இப்னு ஸக்பரா என்பவரும் இவர் தான். இவர் வழியாக வகீவு என்பாரும், அபூ நுஐம் என்பாரும் அறிவித்துள்ளனர். இந்த ஈஸாவிடம் குறை இல்லை. திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா முஹம்மத் பின் க் அப் வழியாக அறிவிப்பவர். இவர் பலவீனமானவர்; கணக்கில் கொள்ளப்படாதவர்
நூல் : தாரீக் இப்னு மயீன்
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்பதைக் கவனிக்காமல் பிற்கால அறிஞர்கள் இருவரையும் ஒரே நபராகக் கருதி விமர்சனம் செய்துள்ளனர்.
யஹ்யா பின் மயீன் அவர்கள் கவனத்தில் கொண்ட நுணுக்கமான வேறுபாட்டை சிலர் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் ஆள் மாறாட்டம் நடைபெற்று மேற்கண்ட ஹதீஸை பலவீனமானது என்று கூறுகின்றனர் என்றே நமக்குத் தோன்றுகிறது.
யஹ்யா பின் மயீன் அவர்களின் அவர்களின் அறிவிப்பாளர் குறித்த ஆய்வுக்கு முன் பிற்காலத்தில் வந்தவர்கள் செய்யும் விமர்சனம் நிற்காது.
அறிவிப்பாளர் குறித்து யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறும் எந்த விமர்சனத்தையும் மறுப்பது என்றால் அவரை விட பலமானவர்களின் மேற்கோளுடன் இருக்க வேண்டும்.
அறிவிப்பாளர்களை எடை போடும் எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதிகமான அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் யஹ்யா பின் மயீன் அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பதைக் காணலாம். மிகப் பெரும்பாலான நூலாசிரியர்கள் அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சிக்கும் போது யஹ்யா பின் மயீன் என்ன சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுவதை அதிகமாகக் காண முடியும். மற்ற எந்த அறிஞரின் விமர்சனமும் இவரது விமர்சனத்தின் அளவை எட்டியதில்லை.
இந்தக் கலையை உலகுக்கு சொன்ன பேரறிஞர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் ஆவார். அவருடைய மாணவர்களில் முதன்மையானவரும் அவரையும் இத்துறையில் மிஞ்சியவரும் ஹதீஸ் கலையின் இமாமுமானவர் தான் யஹ்யா பின் மயீன் ஆவார். இவரைப் பற்றிய சில குறிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.
تهذيب التهذيب – ابن حجر
وقال العجلي ما خلق الله تعالى أحدا كان أعرف بالحديث من يحيى بن معين ولقد كان يجتمع مع أحمد وابن المديني ونظرائهم فكان هو الذي ينتخب لهم الأحاديث لا يتقدمه منهم أحد ولقد كان يؤتى بالأحاديث قد خلطت وتلبست فيقول هذا الحديث كذا وهذا كذا فيكون كما قال
ஹதீஸ் கலை பற்றி யஹ்யா பின் மயீனை விட அதிகம் அறிந்தவரை அல்லாஹ் படைக்கவில்லை. இவர் அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, மற்றும் இது போன்ற தரத்தில் உள்ளவர்களின் காலத்தில் வாழ்ந்தவர். இவர்களுக்குச் சரியான ஹதீஸ்களைக் கண்டறிந்து சொல்பவராக இருந்தார். மேற்கண்டவர்களில் யாரும் இவரை முந்தியதில்லை. ஹதீஸ்களைக் குழப்பி அவர் முன்னால் சொல்லப்பட்டால் இந்த ஹதீஸ் இப்படித்தான் என்று சொல்லி விடுவார், அவர் சொன்னது போலவே இருக்கும் என்று அஜலீ கூறுகிறார்.
ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்
அஹ்மத் பின் ஹம்பல், இப்னுல் மதீனி ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த யஹ்யா பின் மயீனிடம் தான் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு மாமேதையாகத் திகழ்ந்தார். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர்க்ளின் பெயர்களை அனைத்தையும் மாற்றி கூறினாலும் இது இப்படி அல்ல என்று சொல்லும் அளவுக்கு மாமேதையாக யஹ்யா பின் மயீன் திகழ்ந்தவர்.
تهذيب التهذيب
وقال محمد بن رافع سمعت أحمد بن حنبل يقول كل حديث لا يعرفه بن معين فليس هو بحديث وفي رواية فليس هو ثابتا
யஹ்யா பின் மயீனுக்குத் தெரியாத எந்த ஹதீஸும் ஹதீஸாக இருக்க முடியாது என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள்.
ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்
تهذيب التهذيب
قال بن الرومي وكنت عند أحمد فجاء رجل فقال يا أبا عبد الله انظر في هذه الأحاديث فإن فيها خطأ قال عليك بأبي زكريا فإنه يعرف الخطأ
நான் அஹ்மத் பின் ஹம்பலுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்தார். இதோ சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றில் பல தவறுகள் உள்ளன. அதை உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அபூ ஜக்கரியா (எனும் யஹ்யா பின் மயீன்) அவர்களிடம் செல். அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவார் என்றார்கள் என இப்னுர் ரூமி சொன்னார்.
ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்
تهذيب التهذيب
وقال عبد الخالق بن منصور قلت لابن الرومي سمعت بعض أصحاب الحديث يحدث بأحاديث يحيى ويقول حدثني من لم تطلع الشمس على أكبر منه فقال وما يعجب سمعت بن المديني يقول ما رأيت في الناس مثله وقال أيضا قلت لابن الرومي سمعت أبا سعيد الحداد يقول الناس كلهم عيال على يحيى بن معين فقال صدق ما في الدنيا مثله قال وسمعت بن الرومي يقول ما رأيت أحدا قط يقول الحق في المشايخ غير يحيى
மனிதர்களில் இவருக்கு நிகரானவர் யாரையும் நான் காணவில்லை என்று இப்னுல் மதீனி கூறினார். தமது ஆசிரியர்களானாலும் தாட்சண்யமில்லாமல் அவர்கள் குறித்து உண்மையைச் சொன்னதில் யஹ்யா பின் மயீனைத் தவிர வேறு எவரையும் காணவில்லை என்று இப்னுர் ரூமி கூறினார்.
ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்
تهذيب التهذيب
وقال الإسماعيلي سئل الفرهياني عن يحيى وأحمد وعلي وأبي خيثمة قال أما علي فأعلمهم بالعلل وأما يحيى فأعلمهم بالرجال وأحمد بالفقه وأبو خيثمة من النبلاء وقال حنبل عن أحمد كان بن معين أعلمنا بالرجال
யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனி, அபூ ஹைஸமா ஆகியோர் குறித்து ஃபர்ஹியானியிடம் கேட்கப்பட்டது. அலீ பின் மதீனி அவர்கள் நுணுக்கமான குறைபாடுகளை நன்கு அறிந்தவர். யஹ்யா பின் மயீன் அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர். அஹ்மத் பின் ஹம்பல் ஃபிக்ஹ் எனும் சட்டங்களை நன்கு அறிந்தவர். அபூ ஹைசமா கூர்மையான புத்தி உள்ளவர் என்றார். எங்களில் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்.
ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்
تهذيب التهذيب
وقال أبو عبيد القاسم بن سلام قال انتهى العلم إلى أربعة أبو بكر بن أبي شيبة أسردهم له وأحمد أفقههم فيه وعلي بن المديني أعلمهم به ويحيى بن معين أكتبهم له وفي رواية عنه أعلمهم بصحيحه وسقيمه بن معين وقال صالح بن محمد أعلم من أدركت بعلل الحديث بن المديني وبفقهه أحمد بن حنبل وأحفظهم عند المذاكرة أبو بكر بن أبي شيبة وأعلمهم بتصحيف المشائخ يحيى بن معين وفي رواية عنه يحيى أعلم بالرجال والكني وقال الآجري قلت لأبي داود أيما أعلم بالرجال علي أو يحيى قال يحيى عالم بالرجال وليس عند علي من خبر أهل الشام شيء
ஹதீஸ்களில் சரியானதையும், பலவீனமானதையும் நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். கல்வி நான்கு பேருக்குள் அடக்கம்., அபூபக்ர் பின் ஷைபா நன்கு மனனம் செய்தவர். அஹ்மத் பின் ஹம்பல் நன்கு சட்டம் அறிந்தவர். அலீ பின் மதீனி அவர்களில் அறிஞர். யஹ்யா பின் மயீன் சரியான ஹதீஸையும், தவறான ஹதீஸையும் நன்கு அறிந்தவர் என்று காசிம் பின் சலாம் கூறினார். தனக்கு அறிவித்தவர்களின் பெயர்க் குழப்பங்களை நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார் என்று சாலிஹ் பின் முஹம்மத் கூறுகிறார். அறிவிப்பாளர்கள் குறித்து நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீனா? அலீ பின் மதீனியா என்று அபூதாவூத் இடம் கேட்டேன். அதற்கவர்கள் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர் பற்றி அதிகம் அறிந்தவர். அலீ பின் மதீனிக்கு சிரியாவாசிகளான அறிவிப்பாளர் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியதாக ஆஜுர்ரீ கூறுகிறார்.
அது மட்டுமின்றி அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களில் இரு சாரார் உள்ளனர். பெரிய குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அறிவிப்பாளரைப் பலவீனமாக்கும் அறிஞர்கள் ஒரு வகையினர். சின்னக் குறைபாடுகள் இருந்தால் அதன் காரணமாக பலவீனம் என்று சொல்ல மாட்டார்கள். ஹாகிம் போன்றவர்கள் இந்த வகையில் சேருவார்கள்.
சின்னக் குறை இருந்தால் கூட பலவீனமாக்கும் அறிஞர்களும் இருந்துள்ளனர். இப்படி அற்ப குறைபாடுகள் இருந்தால் கூட அவரைப் பலவீனப்படுத்தும் அறிஞர்களில் முதன்மையானவர் யஹ்யா பின் மயீன்.
ஒருவரைப் பலமானவர் என்று சொல்வதற்கு அதிகத் தயக்கம் காட்டக் கூடிய அளவுக்கு கடும் போக்குடையவராகவும் அறிவிப்பாளர்களைப் பிரித்து மேய்வதில் மாபெரும் விற்பன்னராகவும், இவரது சொல்லையே அனைவரும் மேற்கோள் காட்டும் அளவுக்கு மாமேதையாகவும், ஹதீஸ்களை எப்படித் தான் மாற்றிப் போட்டாலும் அதைக் கண்டு பிடிக்கும் ஞானமுள்ளவருமான யஹ்யா பின் மயீன் அவர்கள் ஈஸா என்ற பெயரில் இருவர் இருந்துள்ளதாகவும் சிக்கனமான திருமணத்தை அறிவிப்பவர் பலவீனமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.
யஹ்யா பின் மயீன் அவர்கள் ஈஸா என்ற பெயரில் இருவர் இருந்த்தாகச் சொல்லி இருக்கிறார்.
இப்படி அவர் சொன்னதை எடுத்து எழுதும் அறிஞர்கள் இதில் யஹ்யா பின் மயீன் தவறாகக் கூறிவிட்டார் என்று சொல்லவில்லை. இன்னின்ன காரணத்தால் அது பிழை எனவும் சொல்லவில்லை.
எனவே சிக்கனமான திருமணம் பரகத் நிறைந்த்து என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பது தான் சரியான கருத்தாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.