Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

தீயபண்புகள்,தீயசெயல்கள், தீய ஆசைகள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு தேடுகிறேன் என்று ஒரு துஆ இருக்கிறதா?

ஸஜ்தா திலவாத் துஆ

தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ

ஸஜத வஜ்ஹிய லில்லதீ கல(க்)கஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி

பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் செவிப் புலனையும் பார்வைப் புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.

நூல்: திர்மிதீ

பல தெய்வ வணக்கம் உள்ளவர்களின் பிராத்தனை ஏற்கப்படும்போது 17-56 வசனத்தில் ஏற்கப்படாது என்று சொல்வது சரியா?

More Articles …