Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது

நாட்களில் வெள்ளிக்கிழமை மிகச் சிறந்தது என்றாலும் அன்றைய தினம் நோன்பு நோற்கக் கூடாது.

صحيح البخاري

1984 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الجُمُعَةِ؟ قَالَ: «نَعَمْ»

வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்களா? என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அப்பாத் (ரலி)

நூல்: புகாரி 1984

صحيح البخاري

1985 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ

வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது இதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக் கிழமை நோன்பு நோற்கலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1985

صحيح البخاري

1986 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، ح وحَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا يَوْمَ الجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ، فَقَالَ: «أَصُمْتِ أَمْسِ؟»، قَالَتْ: لاَ، قَالَ: «تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا؟» قَالَتْ: لاَ، قَالَ: «فَأَفْطِرِي»

வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டு விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுவைரிய்யா (ரலி)

நூல்: புகாரி 1986

வெள்ளிக்கிழமையுடன் இன்னொரு நாள் சேர்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றவர்கள் அதை முறித்து விட வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்

மிஃராஜ் நோன்பு இல்லை

ரஜப் மாதம் பிறை 27 அன்று மிஃராஜ் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கம் தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

அந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதாகவோ, அல்லது பிறரை நோற்குமாறு கட்டளையிட்டதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் நபித்தோழர்களின் காலத்திலும் இந்த நோன்பு நோற்றதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

எனவே இது பிற்காலத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பித்அத் ஆகும். இதைத் தவிர்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அது ரஜப் பிறை 27ல் தான் நடந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சான்று இல்லை. எனவே மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டுமே தவிர இன்ன தேதியில் நடந்ததாக நம்புவதும், அதற்காக நோன்பு நோற்பதும் மார்க்கத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதாகும்

பராஅத் நோன்பு கூடாது

ஷஅபான் மாதம் 15ம் இரவு அன்று பராஅத் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கமும் தமிழக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது.

பராஅத் என்றொரு இரவு உள்ளதற்கும், அன்றைய தினம் மூன்று யாஸீன்கள் ஓதி இறந்தவர்களுக்குச் சேர்ப்பதற்கும் ஆதாரம் இல்லை. லைலத்துல் கத்ர் போல் லைலத்துல் பராஅத் என்றொரு இரவு பற்றி ஹதீஸ்களில் கூறப்படவே இல்லை. எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

தொடர் நோன்பு நோற்கத் தடை

ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்கப்படும் நோன்பும், நோன்பைத் துறக்காமல் இரவு பகலாக நோற்பதும் விசால் எனப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய தொடர் நோன்புகளை நோற்றுள்ளார்கள். ஆனாலும் நாம் அவ்வாறு நோற்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள். அதிகமாக நோன்பு நோற்க ஆசைப்படுபவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இதை விட அதிகமாக நோன்பு நோற்க அனுமதி இல்லை. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

صحيح البخاري

1962 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الوِصَالِ» قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசால் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1962, 1922

صحيح البخاري

1976 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ: أُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنِّي أَقُولُ: وَاللَّهِ لَأَصُومَنَّ النَّهَارَ، وَلَأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ، فَقُلْتُ لَهُ: قَدْ قُلْتُهُ بِأَبِي أَنْتَ وَأُمِّي قَالَ: «فَإِنَّكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ الحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالَ: «فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالَ: «فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، فَذَلِكَ صِيَامُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، وَهُوَ أَفْضَلُ الصِّيَامِ»، فَقُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «لاَ أَفْضَلَ مِنْ ذَلِكَ»

ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும் என்றார்கள். என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டு விடுவீராக! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக! இது தான் தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும் என்றார்கள். என்னால் இதை விட சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 1976, 1975, 1977

நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷஅபான் முப்பதாம் இரவா? ரமளானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري

1197 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ، سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ يَوْمَيْنِ إِلَّا مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ وَلاَ تُشَدُّ الرِّحَالُ، إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى وَمَسْجِدِي»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1197, 1864, 1996

صحيح مسلم

2733 – وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا خَالِدٌ عَنْ أَبِى الْمَلِيحِ عَنْ نُبَيْشَةَ الْهُذَلِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ »

தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.

நூல்: முஸ்லிம்

سنن الترمذي

686 – حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

(ரமளானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)

நூல்: திர்மிதி 622

ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா?

நோன்பு நோற்பதாக ஸுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் அது நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

முஹம்மத் ஸபீர்.

நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவூத், அஹ்மத், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2292 أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُبَيِّتْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ رواه النسائي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஃபஜருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது.

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)

நூல் : நஸாயீ

இந்த ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் கூறி இருந்தாலும் இந்த ஹதீஸ் தொடர்பான ஆய்வில் நடுநிலையோடு ஈடுபட்டால் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை இது தான்.

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஹப்ஸா (ரலி) அறிவிக்கின்றார்.

ஹப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் அறிவிக்கின்றார்.

இப்னு உமர் அவர்களிடமிருந்து சாலிம் அறிவிக்கின்றார்.

சாலிமிடமிருந்து இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரீ அறிவிக்கின்றார்.

இப்னு ஷிஹாபிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் அறிவிக்கின்றார்.

அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கின்றார்.

இந்தச் செய்தியை அறிவிக்கும் மேற்கண்ட அறிவிப்பாளர்ளின் நம்பகத்தன்மை குறித்து எந்த அறிஞரும் விமர்சனம் செய்யவில்லை. அறிவிப்பாளர் தொடரில் முறிவும் இல்லை.

இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக சிலர் வழியாகவும், நபித்தோழர்களின் கூற்றாக சிலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திர்மிதீ, நஸாயீ ஆகிய இருவரும் நபித்தோழரின் கூற்றாக வரும் அறிவிப்பே சரியானது என்று கருத்து கூறியுள்ளனர்.

இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ மற்றும் இப்னு ஹஸ்ம் ஆகியோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்பு சரியானது என்ற கருத்தில் உள்ளனர்.

இதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரி என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

(பாகம் : 4 பக்கம் : 142)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்பு சரியில்லை என்பதற்கு திர்மிதீ அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் இந்தச் செய்தியை இப்னு ஹிஷாப் ஸுஹ்ரீ வழியாக அறிவிக்கும் நம்பகமானவர்கள் நபித்தோழரின் கூற்றாகவே அறிவித்துள்ளார்கள். இவர்களுக்கு மாற்றமாக யஹ்யா பின் அய்யூப் என்பவர் மட்டும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என்பது தான்.

662 حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُجْمِعْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَفْصَةَ حَدِيثٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَوْلُهُ وَهُوَ أَصَحُّ وَهَكَذَا أَيْضًا رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ الزُّهْرِيِّ مَوْقُوفًا وَلَا نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلَّا يَحْيَى بْنُ أَيُّوبَ وَإِنَّمَا مَعْنَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَا صِيَامَ لِمَنْ لَمْ يُجْمِعْ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فِي رَمَضَانَ أَوْ فِي قَضَاءِ رَمَضَانَ أَوْ فِي صِيَامِ نَذْرٍ إِذَا لَمْ يَنْوِهِ مِنْ اللَّيْلِ لَمْ يُجْزِهِ وَأَمَّا صِيَامُ التَّطَوُّعِ فَمُبَاحٌ لَهُ أَنْ يَنْوِيَهُ بَعْدَ مَا أَصْبَحَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ رواه الترمذي

திர்மிதீ அவர்கள் 662 வது ஹதீஸின் கீழ் இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளார். திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தி நபியின் கூற்றாக ஸுஹ்ரீ வழியாக மட்டுமே வருகிறது என்று நினைத்து இதை மறுக்கின்றார். ஸுஹ்ரீ அல்லாத வேறு நபர்களின் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் அதை திர்மிதீ அவர்கள் மறுத்திருக்க மாட்டார்கள்.

ஹதீஸ் நூற்களை ஆய்வு செய்தால் இந்தச் செய்தி ஸுஹ்ரீ இடம்பெறாத அறிவிப்பாளர் தொடரின் வழியிலும் நபியின் கூற்றாக வந்திருப்பதை அறியலாம். தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள்.

سنن الدارقطني

 حدثنا أبو بكر أحمد بن محمد بن موسى بن أبي حامد , ثنا روح بن الفرج أبو الزنباع المصري بمكة , ثنا عبد الله بن عباد أبو عباد , ثنا المفضل بن فضالة , حدثني يحيى بن أيوب , عن يحيى بن سعيد , عن عمرة , عن عائشة , عن النبي صلى الله عليه وسلم قال : " من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له " . تفرد به عبد الله بن عباد , عن المفضل بهذا الإسناد , وكلهم ثقات

சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : தாரகுத்னீ

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அம்ரா அறிவிக்கின்றார்.

அம்ராவிடமிருந்து யஹ்யா பின் சயீத் அறிவிக்கின்றார்.

இவரிடமிருந்து யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கின்றார்.

இந்த வரிசையில் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் நம்பகமானவர்கள் என்று தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தியின் கீழ் உறுதியளிக்கின்றார்.

எனவே திர்மிதீ அவர்களின் விமர்சனத்தை வைத்துக்கொண்டு நபியின் கூற்றாக வரும் அறிவிப்புகள் சரியில்லை என்று கூற முடியாது. தாரகுத்னியின் மேற்கண்ட சரியான அறிவிப்பு உள்ளது. இதை எந்த அறிஞரும் குறை கூறவில்லை.

அடுத்து நஸாயீ அவர்களின் விமர்சனத்துக்கு வருவோம்.

நபியின் கூற்றாக அறிவிக்கும் யஹ்யா பின் அய்யூபை நபித்தோழரின் கூற்றாக அறிவிக்கும் நபர்களுடன் ஒப்பிட்டால் இவர் அவர்களின் அளவுக்கு உறுதியான மனனத்தன்மை உள்ளவர் இல்லை என்று நஸாயீ அவர்கள் கருதியுள்ளார்கள். எனவே நபியின் கூற்றாக வரும் யஹ்யாவின் அறிவிப்பை ஏற்க இயலாது எனக் கூறியுள்ளார்கள்.

السنن الكبرى للنسائي

 أخبرنا أحمد بن حرب الموصلي ، قال : حدثنا سفيان ، عن الزهري ، عن حمزة بن عبد الله ، عن حفصة قالت : " لا صيام لمن لم يجمع الصيام قبل الفجر " قال أبو عبد الرحمن : والصواب عندنا موقوف ، ولم يصح رفعه ، والله أعلم ؛ لأن يحيى بن أيوب ليس بذلك القوي ، وحديث ابن جريج عن الزهري غير محفوظ ، والله أعلم ، أرسله مالك

திர்மிதீ மற்றும் நஸாயீ ஆகிய இருவரும் இந்தச் செய்தி நபியின் கூற்றாக யஹ்யா பின் அய்யூப் வழியாக மட்டுமே வந்துள்ளது என்று கருதியே இந்த அறிவிப்பை மறுக்கின்றனர். ஆனால் ஹதீஸ் நூற்களை ஆய்வு செய்தால் யஹ்யா பின் அய்யூப் அல்லாத மற்ற நம்பகமானவர்களும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்திருப்பதை அறியலாம்.

அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து லைஸ் பின் ஸஅத் என்பவரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். லைஸ் பின் ஸஅத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பகமானவர். இதை தப்ரானி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

المعجم الكبير للطبراني

 حدثنا أبو يزيد القراطيسي ، ثنا عبد الله بن عبد الحكم ، أنا الليث بن سعد ، ويحيى بن أيوب ، عن عبد الله بن أبي بكر ، عن ابن شهاب ، عن سالم ، عن أبيه ، عن حفصة ، عن النبي صلى الله عليه وسلم : " من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له

அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து இஸ்ஹாக் பின் ஹாஸிம் என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இதை சமர்கந்தீ அவர்கள் அல்ஃபவாயித் என்ற தமது நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.

الفوائد المنتقاة العوالي الحسان للسمرقندي

 وبه : ثنا خالد بن مخلد القطواني ، ثنا إسحاق بن حازم ، حدثني عبد الله بن أبي بكر بن عمرو بن حزم ، عن سالم ، عن ابن عمر ، عن حفصة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " لا صيام لمن لم يجمع الصيام من الليل

எனவே இந்த ஹதீஸை யஹ்யா பின் அய்யூப் மட்டும் அறிவிக்கவில்லை. அவருடன் லைஸ் பின் ஸஅத், இஸ்ஹாக் பின் ஹாஸிம் ஆகிய நம்பகமானவர்களும் அறிவித்துள்ளனர். மேலும் ஸுஹ்ரீ இடம்பெறாமல் ஆயிஷா (ரலி) அவர்களின் வழியாகவும் சரியான வழியில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் திர்மிதீ அவர்களுக்கும், நஸாயீ அவர்களுக்கும் கிடைக்காத காரணத்தால் தான் நபியின் கூற்றாக வரும் அறிவிப்பை அவ்விருவரும் மறுத்துள்ளனர். இதை அவர்கள் அறிந்திருந்தால் யஹ்யா பின் அய்யூபின் அறிவிப்பைக் கண்டிப்பாக ஏற்றிருப்பார்கள்.

பைஹகீ அவர்கள் நபியின் கூற்றாகவும், நபித்தோழரின் கூற்றாகவும் வரும் அறிவிப்புக்களை முரண்பட்டதாகக் கருதவில்லை. யஹ்யா பின் அய்யூப் தான் நபியின் கூற்றாக அறிவித்து தவறு செய்துள்ளார் என்று யஹ்யாவின் மீது பழிசுமத்துவோரின் வாதத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக யஹ்யாவின் ஆசிரியரான அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர்; உறுதியுள்ளவர் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தில் பைஹகீ அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸை அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துவிட்டு அதன் கீழ் இந்த விபரத்தைத் தெரிவிக்கின்றார்கள்.

السنن الكبرى للبيهقي

أخبرنا أبو عبد الله الحافظ ، وأبو سعيد بن أبي عمرو قالا : ثنا أبو العباس محمد بن يعقوب ، أنبأ الربيع بن سليمان ، ثنا عبد الله بن وهب ، حدثني ابن لهيعة ، ويحيى بن أيوب ، عن عبد الله بن أبي بكر بن عمرو بن حزم ، عن ابن شهاب ، عن سالم ، عن أبيه ، عن حفصة زوج النبي صلى الله عليه وسلم ، أن النبي صلى الله عليه وسلم قال : " من لم يجمع الصيام مع الفجر فلا صيام له " كذا قال ، ورواه أحمد بن صالح عن ابن وهب ، فقال : " قبل الفجر " ، وهذا حديث قد اختلف على الزهري في إسناده وفي رفعه إلى النبي صلى الله عليه وسلم ، وعبد الله بن أبي بكر أقام إسناده ورفعه ، وهو من الثقات الأثبات أخبرنا أبو عبد الرحمن السلمي ، أنبأ علي بن عمر الحافظ ، قال : رفعه عبد الله بن أبي بكر وهو من الثقات الرفعاء

அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் இந்தச் செய்தியை நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். அவர் உறுதியானவர். வலிமையானவர்.

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா

எனவே நபியின் கூற்றாக வரும் அறிவிப்பு பலவீனமானது என்ற வாதம் தவறானது. இது பல நம்பகமானவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

நபித்தோழர்களின் கூற்றாக வரும் அறிவிப்புகள் இதற்கு முரணானவை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கருத்தை நபித்தோழர்களும் கூறியுள்ளார்கள் என்று முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் எனக்கு நோன்பு நோற்க சலுகை உண்டா?

28/09/2020 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-மதிமுகம்

நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யும் துவா ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சரியா?

06/09/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்

நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

صحيح البخاري

1933 – حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1933, 6669

அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.

More Articles …