Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

சவூதியில் பீ.ஜே. நூல்களுக்குத் தடையா?

சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும், பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்குத் தடை!

பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை!

சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை!

சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!

என்றெல்லாம் சில மதனிகளும், பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும் போது நாம் தக்க விளக்கம் அளித்து வந்த போதும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இதை நாம் பகிரங்கப்படுத்தவில்லை.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேய்ந்து போன ரிகார்ட் போல் இதையே பயங்கரமான ஒரு செய்தியாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றது ஒரு கும்பல்.

இது குறித்து விரிவாக எழுதும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டனர்.

அரபு நாடுகள் தான் அத்தாரிட்டியா?

இவர்கள் கூறுவது போல் எனது நூல்களை அரபு நாடுகளில் தடை செய்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அரபு நாடுகளில் நுழைவதற்கு எனக்குத் தடை போட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக எனது கருத்துக்கள் தவறு என்பது நிரூபணமாகி விடுமா?

சவூதிக்காரர்கள் தான் மார்க்கத்தின் அத்தாரிட்டியா?

நான் சொல்லும் கருத்துக்கள் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டு இருப்பதாகவோ, தவறானதாகவோ உள்ளது என்று தக்க ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் எனது கருத்துக்கள் தவறு என்று ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

நமது கருத்துக்களை எதிர்கொள்ள அவர்களிடம் சரக்கு இல்லாததால் இதுவே இவர்களுக்குப் பெரிய ஆதாரமாகத் தெரிகிறது.

சத்தியத்தைச் சரியாக எடுத்துச் சொல்லும் யாராக இருந்தாலும் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் களத்தில் இறங்கி இருக்கிறோம்.

இவர்கள் ஆசைப்படுவது போல் சவூதி என்ன? ஒட்டுமொத்தமாக உலகமே திரண்டு தடை போட்டாலும் நமது பயணம் நின்று விடாது. இக்கொள்கையை நம்பியவர்களின் மன உறுதியை எந்த வகையிலும் இது குலைக்காது என்பதைத் திட்டவட்டமாக நான் அறிவித்துக் கொள்கிறேன்.

கூலிக்கு தவ்ஹீத் பேசும் இந்தக் கும்பல் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எப்போது என்னைப் பாதிக்கும்?

சவூதியிலோ, மற்ற அரபு நாடுகளிலோ நான் ஊதியம் பெற்று அதற்காகவே தவ்ஹீதைச் சொன்னால் அந்த நாடுகளின் கோபப் பார்வை என்னைப் பாதிக்கும்.

எந்த ஒரு காலகட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ, அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ, பொருளோ, அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை - நூல்களை- வாங்கி அனுப்பும் போது பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.

ஜாக் அமைப்பில் பணியாற்றிய அந்தச் சமயத்தில் மதனிகள் அல்லாத கஷ்டப்படும் உலமாக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கமாலுத்தீன் மதனீ அவர்கள் மதனிகளாக இல்லாத சில தாயிகளுக்கு சிறிய அளவிலான உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும் நான் எதையும் பெற விரும்பவில்லை என்று மறுத்து விட்டேன். எந்தக் கால கட்டத்திலும் இதில் நான் சபலப்பட்டதே இல்லை.

அப்படி இருக்கும் போது இவர்கள் ஆசைப்படுவது போன்ற தடைகள் வந்தால் அது என்னை எள் முனையளவும் பாதிக்கப் போவது இல்லை.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியில் வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது நான் அனுமதியளித்துள்ளேன்.

சில மதனிகள் நூல்கள் எழுதி அதை இலவசமாக வெளியிடப் போகிறோம் என்று கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக் கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.

எனது நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது அதற்கான ராயல்டி இவ்வளவு வேண்டும் என்றால் அதைத் தருவதில் சவூதி நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக வெளியிட அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை.

இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும்.

செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று தான் நினைத்தேனே தவிர சவூதி அரபு நாட்டுப் பனத்துக்கு பல்லிளிக்கவில்லை.

அவ்வாறு பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இது பின்னர் விளக்கப்பட்டுள்ளது)

செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு நமது சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.

இதை சுய தம்பட்டம் அடிப்பதற்காகக் குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை வித்தித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும், சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களைக் காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

தடை பூச்சாண்டி ஏன்?

இந்தத் தடை பூச்சாண்டி ஏன் என்றால் அதற்கும் காரணம் உண்டு. அரபு நாடுகளுக்குச் சென்ற தமிழ் கூறும் முஸ்லிம் சகோதரர்கள் அங்கே சென்றதும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத்வாதிகளாக மாறி வருகிறார்கள். தங்களால் இயன்ற தஃவா பணிகளையும் சுயநல நோக்கமின்றி செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சவூதியில் உள்ள ஜாலியாத்கள் எனும் தஃவா சென்டர்களில் முக்கிய மொழிகளுக்கு அம்மொழி பேசும் பிரச்சாரகர்களை நியமித்திருக்கிறார்கள். அது போல் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிமல்லாத மக்களிடமும் தூய இஸ்லாத்தைச் சொல்கிறோம் என்ற பெயரில் சம்பளம் வாங்கும் இவர்களில் பலர் அந்தப் பணியைச் செய்வதில்லை.

இவர்கள் உப்புக்குச் சப்பாக நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் மக்கள் செல்வதில்லை. நம்மைக் காட்டி பணம் கறக்கிறார்கள் என்று மக்கள் நம்புவதால் இவர்கள் நடத்தும் சன்மார்க்க(?) விளக்கக் கூட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதில்லை.

அதே சமயம் தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ் மொழியில் மட்டும் மார்க்கத்தை அறிந்த சிலர் மூலம் நடத்தும் பிரச்சார் நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்கெடுப்பார்கள்.

படியளக்கும் எஜமானர்களுக்கு இது தெரிந்தால் இவர்கள் தூங்கி வழிவது தெரிந்து விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்? சன்மார்க்கக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களை குறிப்பாக என்னை வசைபாடுவது, என் மீது வெறுப்பை விதைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு மக்கள் போக மாட்டர்கள் என்று தங்கள் பிரச்சாரப் பாணியை அமைத்துக் கொண்டார்கள்.

பாவம்! இவர்கள் மார்க்கம் பேசாமல் தனி நபர் தாக்குதல் நடத்தியது இன்னும் அவர்களைத் தனிமைப்படுத்தி விட்டது.

அடுத்து என்ன செய்யலாம்?

சவூதியில் சட்டதிட்டங்கள் கடுமையானவை. அங்கே கூட்டமாகக் கூடிப் பேசினாலே பிரச்சனையாகி விடும். பீஜேக்கு தடை என்று மக்களிடம் பரப்பினால் ஆகா தடை செய்யப்பட்டவர்களின் அமைப்பில் செயல்பட்டால் நமக்கு பிரச்சனை வருமோ என்று தவ்ஹீத் சகொதரர்களுக்கு பயம் வரும். இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளை முடக்கி விடுவார்கள். களத்தில் நிற்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள், பயந்து போய் முடங்கி விடுவார்கள். இப்படி கணக்குப் போட்டதன் விளைவு தான் இந்தப் பிரச்சாரம்.

இந்தச் சகோதரர்களை முடக்கிப் போட்டால் தான் முன்பு போல் இவர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளற முடியும்.

அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்கவே இந்த தரம் கெட்ட பொய்ப் பிரச்சாரம்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டமோ, வேறு விதமாக இருந்தது. யார் இப்படிப் பரப்பினார்களோ அவர்களின் கூடாரம் காலியானது. இந்த இழி செயல் செய்த சில போலி உலமாக்கள் பாலியல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஆட்குறைப்பு என்ற பெயரில் சிலர் தூக்கி அடிக்கப்பட்டார்கள். பாக்கவிகளும், அஷ்ரபிகளும் சிறைக் கம்பிக்குப் பின்னால் நின்றார்கள்.

இவர்களின் மதனி செல்வாக்கோ, அரபு மொழிப் புலமையோ, ஜாலியாத் பதவியோ இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தவ்ஹீத் தாயியாக களத்தில் நின்ற தாயிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

உணர்வு ஏட்டில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றி போட்டுக் கொடுத்து குறிப்பிட்ட சில பக்கங்களுக்கு கறுப்புச் சாயம் பூசியதையும், சில பக்கங்களைக் கிழித்து விட்டு விற்பனை செய்ய வைத்ததையும் தவிர வேறு ஒன்றும் இவர்களால் செய்ய முடியவில்லை.

அது கூட மார்க்க அடிப்படையில் செய்த இடையூறு அல்ல. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானல் சவூதி பிரமுகருக்கு ரோஜா மாலை தூவுவது போன்ற படம் இடம் பெற்று அது விமர்சிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் உள்ளதை இவர்கள் தான் தணிக்கை செய்யும் அதிகாரிகளுக்குச் சொல்லும் நிலையில் இருந்ததால் இதைக் கிழிக்கச் செய்தனர். இது ஒரு உதாரணமே.

மூன்றாவது திட்டம்

சவூதியில் எனக்கோ, எனது நூலுக்கோ எந்தத் தடையும் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் சவூதி அரசின் கவனத்துக்கு பீஜேயைப் பற்றி கொண்டு சென்றால் நிச்சயம் தடை செய்து விடுவார்கள் என்பதால் அதற்கான புகாரையும் தயார் செய்து சவூதியின் தலைமை முஃப்திக்கு அனுப்பினார்கள்.

சவூதியின் தலைமை முஃப்தியும் மூத்த உலமாக்கள் அமைப்பின் தலைவருமான அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அவர்களுக்கு கீழ்க்காணும் நபர்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதினார்கள்.

தம்மாம் ஜாலியாத்தில் பொழுதைப் போக்கும் முகம்மது ஜக்கி முகம்மது (இலங்கைவாசி)

தம்மாம் ஜாலியாத்தில் இதே போல் பொழுதைப் போக்கி சம்பளம் வாங்கும் முபாரக் மஸ்வூத் லெப்பை எனும் முபாரக் மதனி, (இலங்கைவாசி)

இதே வேலை பார்க்கும் முகம்மது நூஹ்

ஆகிய இம்மூவரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை எழுதினார்கள்.

அந்தக் கடிதம் இதோ.

mubarak madani 1

mubarak madani 2

mubarak madani 3

mubarak madani 4

இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிடும் விஷயம் இது தான்.

தமிழகத்தில் ஜைனுல் ஆபிதீன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் இலங்கையிலும், இந்தியாவிலும் பிரபலமானவர். முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அல்லாதவரிடமும் பிரபலமானவர்.

குர்ஆன் சுன்னாவின் பால் அழைப்பதிலும், பித்அத்தை ஒழிப்பதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

எழுத்து, பேச்சு, விவாதம், கருத்தரங்கம் என்று பல் துறைகளில் இவருக்கு ஆற்றல் உண்டு. கப்ர் வணங்கிகளுடனும், காதியானிகளுடனும், கிறித்தவர்களிடமும் இவர் விவாதங்கள் பல நடத்தியுள்ளார்.

இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகளாகவும் ஒளிப்பேழைகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பு உள்ளது.

இவர் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளும் கொடுத்துள்ளார். இது இரண்டு முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சில தவறுகளை நாங்கள் காண்கிறோம். அவற்றுள் சில

  1. அல்லாஹ் மேகத்தில் வருவான் என்பதற்கு அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
  2. ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல. ஷைத்தான்கள் என்று எழுதியுள்ளார்.
  3. ஸாத் அத்தியாயத்தில் 34 வது வசனத்தில் அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்று மொழிபெயர்க்காமல் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று எழுதியுள்ளார். சுலைமான் நபி ஒரு இரவில் நூறு மனைவியருடன் உடலுறவு கொண்டதாக வரும் ஹதீஸ்களை மறுத்துள்ளார்.
  4. ரசூல், நபி என்பதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்று எழுதியுள்ளார்.
  5. ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதாமல் ஒரு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதியுள்ளார்.
  6. சிஹ்ர் - சூனியம் என்பது கற்பனை என்கிறார்.
  7. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை மறுக்கிறார்.
  8. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதை மறுக்க வேண்டும் என்கிறார். இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50 உள்ளன எனக் கூறுகிறார்.
  9. பத்து தடவை பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் மரணிக்கும் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.
  10. ஸாலிம் என்ற இளைஞருக்குப் பாலூட்டு அவர் உன் பிள்ளையாகி விடுவார் என்று ஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.
  11. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரர்களைக் குறிக்காது. ஷைத்தானையே குறிக்கும் என்று எழுதியுள்ளார்.
  12. பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறார்.
  13. குர்ஆனை எடுத்து எழுதிய நபித் தோழர்கள் சில எழுத்துப் பிழைகளை விட்டுள்ளனர். அது அப்படியே உள்ளது எனக் கூறி சில ஆதாரங்களையும் கூறுகிறார்.
  14. குர்ஆனின் ஓரத்தில் ஸஜ்தா என்றும் மற்றும் சில வார்த்தைகளும் பின்னால் எழுதப்பட்ட பித்அத் என்று கூறி இவ்வாறு செய்தவர்களைக் கண்டிக்கிறார்.
  15. நிச்சயமாக என்பதை அறவே தவிர்த்து விட்டார்.

இவரது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாங்கள் கண்ட தவறுகள் இவை. இவை தவிர அவரது உரைகளிலும், நூல்களிலும் இன்னும் பல தவறுகளைச் செய்துள்ளார். உதாரணத்துக்காக சில. இவை மட்டுமல்லாமல் இன்னும் உள்ளன.

  1. இறைவன் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் செய்யவில்லை.
  2. இஜ்மாவையும், கியாஸையும் அறவே மறுக்கிறார்.
  3. சலஃபிக் கொள்கையை மறுத்து கிண்டல் செய்கிறார். அவர்கள் தக்லீது செய்பவர்கள் என்கிறார்.
  4. மனித உடலுக்குள் ஜின்கள் நுழைவதையும் இவர் மறுக்கிறார்.
  5. நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களை யாரும் கனவில் காண முடியாது என்கிறார்.
  6. பலவீனமான ஹதீஸ்கள் துணைச் சான்றுகள் மூலம் சரியான ஹதீஸ் என்ற நிலைக்கு உயரும் என்பதையும் மறுக்கிறார்.
  7. தாடியைக் கத்தரிக்க எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்.
  8. ஆடைகளைத் தரையில் இழுபடும்படி தொங்க விடுவதால் தவறல்ல என்கிறார்.
  9. ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்கிறார். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்கிறார்.
  10. ஜும்ஆவுக்கு முன் சுன்னத் உண்டு என்கிறார்.
  11. குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் இதயம் பிளக்கப்பட்டதை மறுக்கிறார். அது குர்ஆனுக்கு முரண் என்கிறார்.

இவரது இத்தகைய தவறுகளை நேருக்கு நேராகவும், எழுத்து வடிவிலும் சகோதர தாயிகள் அவருக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் தன் நிலையில் நீடிக்கிறார். எதிர்க் கருத்து சொல்பவர்களை விவாதத்துக்கு அல்லது முபாஹலாவுக்கு அழைக்கிறார்.

இவருக்கு இருக்கும் பேச்சாற்றல் காரணமாக இவர் கூறுவதை பாமர மக்கள் நம்புகின்றனர்.

அதனடிப்படையில் தங்களிடம் இது குறித்து சில விளக்கங்களை எதிர் பார்க்கிறோம்.

  1. இவருடன் நாங்கள் எப்படி நடந்து கொள்வது?
  2. குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்களை அழைப்பதற்காக இவர் பாடுபடுவதாலும், பித்அத்களை ஒழிக்கப் பாடுபடுவதாலும் இவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது. அது தான் சமுதாயத்துக்கு நன்மை என்று சலஃபி உலமாக்கள் சிலர் கூறுகின்றனர். இது சரியா?
  3. எவ்விதத் தவறும் இல்லாமல் மன்னர் பஹத் செலவில் ஒரு தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது தமிழாக்கத்தை விற்பதும், வாங்குவதும் கூடுமா? அவரது தமிழாக்கம் ரகசியமாக சவூதி அரேபியாவில் விற்கப்படுகிறது.

இது பற்றி தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

இது தான் மேற்படி மதனிமார்கள் சவூதி உலமாக்களுக்கு எழுதிய புகார் பட்டியல்.

கடிதத்தில் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டதைக் கண்டு இவர்களை நாகரிகமாக விமர்சித்தவர்கள் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. மக்களிடம் இவர்கள் செய்யும் விமர்சனம் எவ்வளவு தரம் கெட்டதாக இருந்தது என்பதை நாம் அறிவோம்.

நமது கொள்கைச் சகோதரர்கள் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து இழிசெயல் புரிந்தனர் என்பதும் தம்மாமில் பிரசித்தம்.

தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனக் கூறி, தர்கா விழாக்களுக்கு வாழ்த்து வழங்கிய தமுமுகவின் கொள்கை இவர்களுக்குத் தடையாக இல்லை.

சில அறியாத சகோதரர்கள் தமுமுக தேவை என்று நினைக்கிறார்கள். சமுதாயத்துக்கு குரல் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்புவதால் இப்படி நினைக்கிறார்கள். அந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை.

இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் தமுமுக இவர்களுக்கு உதவாது. தம்மாமிலும் உதவ முடியாது. அப்படி இருந்தும் தம்மாம் தமுமுகவுடன் இவர்கள் கை கோர்க்க முடிகிறது. தமுமுக நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சயில் முகம் காட்ட முடிகிறது. சவூதியில் ஹிஸ்ப் எனப்படும் அரசியல் அமைப்புகளுக்குத் தடை என்ற போதும் இவர்களுடன் கூடிக் குலாவ முடிகிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக், விடியல் ஆகிய இயக்கங்களின் கொள்கைகள் சவூதியின் கொள்கைக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் முரணானவை. இவர்களும் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எதிராக எந்தப் புகாரையும் இந்த மதனிக்ள் அளித்ததில்லை.

சவூதியில் எதையும் தீர விசாரிப்பார்கள் என்பதால் தான் தரக் குறைவாக எதையாவது எழுதினால் மாட்டிக் கொள்வோம் என்று இப்படி ஒரு புகார் அனுப்பினார்கள்.

இவர்கள் அனுப்பிய புகாருக்குப் பின்னர் சவூதி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவர்கள் ஆசைப்பட்டது போல் எந்தத் தடையும் போடவில்லை.

மாறாக புகார் அனுப்பியவர்கள் வழியாக எனக்கு இரண்டு மடல்களை அனுப்பி என்னிடம் சேர்ப்பிக்கும் படியும், இந்தப் புகார் கடிதத்தையும் பீ.ஜே.க்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் எழுதியவர்களுக்கு சவூதி அரசு உத்தரவிட்டது.

இதன் பின்னர் புகார் அனுப்பியவர்களில் ஒருவரான முபாரக் மதனி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவூதி அரசு உங்களுக்கு சில தகவல்களைத் தெரிவிக்கப் பணித்துள்ளது. உங்கள் பேக்ஸ் நம்பர் வேண்டும் என்று கேட்டார். நான் பேக்ஸ் நமபர் அனுப்பினேன். எனது பேக்ஸுக்கு சவூதி அரசு எனக்கு அனுப்பச் சொன்ன கடிதத் தொகுப்பை அனுப்பி வைத்தார்.

அவர் அனுப்பிய கடிதங்களில் சவூதி அரசு எனக்கு எழுதிய கடிதங்கள் மட்டும் இன்றி எனக்கு எதிராக இவர்கள் அனுப்பிய் மேற்கண்ட கடிதங்களும் இணைக்கப்பட்டு இருந்தன,

எனக்கு எதிராக இவர்கள் சவூதி அரசுக்கு அனுப்பிய புகார் கடித்தை இவர்கள் கையாலேயே அல்லாஹ் எனக்கு அனுப்பச் செய்தான்.

இத்துடன் சவூதி அரசின் சார்பில் என்னிடம் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதங்கள் இது தான். 

முதல் கடிதம் தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் அவர்கள் புகார் கொடுத்தவர்களுக்கு இட்ட உத்தரவு அடங்கிய கடிதம். அந்தக் கடிதம் இதுதான்

ksa02

இதன் தமிழாக்கம்

தலைமை முப்தீ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் தம்மாம் ஜாலியாத் முதீருக்கு எழுதுவதுஅஸ்ஸலாமு அலைக்கும்.

ஜைனுல் ஆபிதீன் என்பவர் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றி உங்கள் ஜாலியாத் தாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் பல தவறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அழகிய முறையில் ஜைனுல் ஆபிதீனுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் கொண்டுள்ளோம். இவ்வாண்டு (ஹிஜ்ரி 1426)ராபிதா அல் ஆலமுல் இஸ்லாமி மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கிறோம். துல்ஹஜ் பிறை 1 முதல் ஹஜ் முடியும் வரை நமது விருந்தினராக அவரை அழைக்கும் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். எனவே இந்த அழைப்பிதழை அந்தப் பெரியவரிடம் விரைந்து சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டாவது கடிதம் எனக்கு அனுப்பப்பட்ட கடிதமாகும்.

ksa1.

பெறுநர்: பேராசிரியர் ஜைனுல் ஆபிதீன் இந்தியாவின் பிரச்சார தாயி.உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். 

இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு உங்களை அழைக்கிறோம். அதற்கான அனுமதி எண் ......

உங்களை உபசரிக்கும் செலவு எங்களுடையது. பயணச் செலவு உங்களுடையது.

ஜனவரி 1/ 2006 முதல் ஜனவரி 16 /2006 வரை விருந்தினராக இருப்பீர்கள்.

இஹ்ராம் நிய்யத்துடன் பிரவேசிக்க வேண்டும்.

சவூதி வருகை பற்றி ஒரு வாரம் முன்பு பேக்ஸ் மூலம் தெரிவிக்கவும்.

நீங்கள் ஒருவர் மட்டுமே வரலாம்.

இப்படி இரண்டாம் கடிதம் கூறுகிறது-

ஹஜ் அழைப்பில் ஹஜ் கிரியை முடியும் வரை இஹ்ராமுடன் தங்கவே அழைப்பு இருந்தது. விவாதித்தல் பற்றி எந்த விபரமும் காணப்படவில்லை. முப்தி அவர்களின் கட்டளையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.

ஹஜ் முடிந்த பின் எங்கே விவாதிப்பதுஅதற்கான கால அளவு எதுவுமே இதில் காணப்படவில்லை.

சாதாரண நட்பு முறையில் பேசவே அவர்கள் விரும்பியுள்ளனர் இதிலிருந்து தெரிகிறது. இந்த மதனிகள் சுட்டிக் காட்டிய விஷயங்கள் புதுமையானது அல்ல என்பதால் கண்ணியப்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்தது.

இல்லாவிட்டால் ஹஜ் இல்லாத காலங்களில் இதற்காக வரச் சொல்லி அழைப்பு அனுப்பி இருப்பார்கள். ஹஜ் பரபரப்பில் இதற்காக அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.

இந்த அழைப்புக்கு நாம் பதில் அளித்து கடிதம் அனுப்பினோம். அதன் கடிதம் இதோ.,   

pj ripley1

pj ripley2

pj ripley3

pj ripley4

நாம் அனுப்பிய இக்கடிதத்தின் சாராம்சம் தமிழில்

தமிழக முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக கும்பகோணத்தில் ஜனவரி 29 அன்று மாநாடு பேரணி நடத்துகிறோம்.

நானே அமைப்பின் தலைவராக இருப்பதால் இந்தக் கட்டத்தில் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று குறிப்பிட்டு பேரணியின் நோக்கம் செயல்பாடு அனைத்தும் இக்கடிதத்தில் விளக்கப்பட்டது.

எனவே ஜனவரிக்குப் பின் இரண்டு மாத அவகாசத்தில் தாங்கள் வசதிப்படும் எந்த நாளில் என்னை அழைத்தாலும் எனது சொந்தச் செலவில் வந்து மதனிமார்கள் கூறிய புகார்கள் குறித்து நட்பு முறையில் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருக்கிறேன்

என்று பதில் போட்டேன்.

அந்த பதிலை முபாரக் மதனிக்கும்  அக்கடிதத்தில் குறிப்பிட்ட அத்தனை பேக்ஸ் எண்ணுக்கும் அனுப்பினேன்.

ஜித்தாவின் ஷிப்லி அவர்கள் மூலம் நேரடியாகவே ஜித்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சேர்ப்பித்தேன்.

ஆண்டுகள் பலவாகியும் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

இதிலிருந்து ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக அழைத்து கௌரவப்படுத்தவே விரும்பியுள்ளார்; விவாதிப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.

இவர்களின் புகார் பைசா பெறுமானமில்லாதது என்பது சவூதி அரசின் நடவடிக்கையில் இருந்து தெரிகிறது.

ரகசியமாக குர்ஆன் தமிழாக்கம் விற்பனை செய்யப்படுகிறது என்று இவர்கள் போட்டுக் கொடுத்தும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. பொதுவாக பிரச்சாரம் தொடர்பாக எத்தகைய கடும் நடவடிக்கையை சவூதி எடுக்குமோ அவற்றில் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

இது தான் நடந்த உண்மை.

இது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி இவர்கள் எழுதிய புகார்களில் எதை இவர்கள் குறையாக சுட்டிக் காட்டினார்களோ அவை அனைத்தும் அவர்களிடம் என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.

இதனால் தான் இது தான் பைபிள் என்ற நூலை இலவசமாக ஜாலியாத்கள் வெளியிட்டன. 

 baible jalyath

இது போல் இயேசு இறைமகனா என்ற நூலையும் இலவசமாக வெளியிட்டுள்ளனர்.

iraimakana jaliyath

பித்அத் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையையும் புத்தகமாக வெளியிட்டனர்.

bidath jaliyath

நோன்பு என்ற எனது நூலையும்திருமறையின் தோற்றுவாய் என்ற நூலையும் வெளியிட்டனர்.  

nonbu jaliyath

 

thotruvay jaliyath

அதற்காக என்னிடம் அனுமதி கேட்டு எழுதிய கடிதம் இதோ.    

திருமறையின் தோற்றுவாய் நூலை ஜாலியாத மூலம் வெளியிட என்னிடம் அனும்தி  கேட்டு எழுதிய கடிதம்

thotruvay jaliyath anumthi

 

இயேசு இறைமகனா எனும் நூலை வெளியிட என்னிடம் அனுமதி கேட்டு ஜாலியாத் எழுதிய கடிதம்

iraimakna jaliyath anumathi

இன்னும் சில கடிதங்கள் தவறி விட்டன.

இன்னும் பல நூல்களையும் ஜாலியாத மூலம்ம்சவூதி அரசு வெளியிட்டது.

arthamulla jaliyath

mamanithar jaliyath

இப்படி வெளியிடப்படும் நூல்களுக்கு பெரிய அளவில் ராயல்டி வாங்கிக் கொண்டு தான் வெளியிடுவார்கள். நான் எந்த ராயல்டியும் வேண்டாம் என்று இலவச்மாகவே அனுமதி வழ்ங்கினேன் என்பதையும் கவனத்தில் கொள்க!

இந்த மதனிகள் சவூதியில் படித்தவர்களாக இருந்ததால் எனக்கெதிராக எல்லா வகையான கேடுகளையும் சவூதியில் செய்து முடிக்க எல்லா வாய்ப்புகளையும் இவர்கள் பெற்றிருந்தனர். ஆனாலும்  இவர்களின் எந்தத் திட்டமும் பலிக்கவில்லை.

துபைகத்தர் போன்ற நாடுகளில் எனக்கு எதிராகச் செயல்பட்டவரும் இவர்களைப் போன்ற ஒரு மதனி தான்.

அவர் செய்த தில்லுமுல்லுகள்திருகுதாளங்கள் என்னென்னஎன்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் விளக்குகிறேன்.

பீ.ஜே. கோடி கோடியாக பணம் சேர்த்து விட்டார் என்று புளுகுபவர்களுக்கும் பதிலளிக்க நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். 

பொது வாழ்வில் எனது நேர்மை குறித்து எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளும் அபத்தமானவைஉண்மைக்கு புறம்பானவை கீழே உள்ள ஆக்கத்தில் தெளிவாக்கியுள்ளேன்.

பீஜேயின் சொத்துக்கள் எவ்வளவு

மதனிகளாக இருந்தும் இவர்களின் தில்லுமுல்லுகளைக் கண்டு கொதித்துப் போன நல்ல மதனிகளும் உள்ளனர். நம்மால் செய்ய முடியாததை இந்தச் சாமானியர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சியடையும் மதனிகளை எனது இந்த விமர்சனம் கட்டுப்படுத்தாது.

30.09.2009. 02:22

பீஜேயின் சொத்து எவ்வளவு?

(இந்த ஆக்கம் எழுதப்பட்ட போது மூன் மார்ட் நிறுவனத்தை நான் ஆரம்பிக்கவில்லை. அப்போது உள்ள நிலையில் எனது பொருளாதார நிலை குறித்தே இதில்  எழுதியுள்ளேன். சில ஆண்டுகளாக அல்லாஹ் எனக்கு பரகத் செய்துள்ளதால் இதில் கூறப்பட்ட நிலையில் நான் இப்போது இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு இதை வாசிக்கவும்)

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி பீஜே பணம் சம்பாதித்துள்ளார் என்று பாக்கரும், இஸ்மாயீல் சலஃபி என்பவரும் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஜமாஅத்தைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் பீஜே அடையவில்லை என்று தெரிந்திருந்தும் பீஜே கோடிகளுக்கு அதிபதியாகி விட்டது போலவும், அவர் கார் பங்களாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் பாக்கர் கூட்டம் இப்போது பேசுகிறார்கள்.

மஞ்சள் பையுடன் வந்தவர் இன்று சொகுசு காரில் போவது எப்படி என்று பாக்கரை மேடையில் வைத்துக் கொண்டு செங்கிஸ் கான் பேசி இருக்கிறார்.

இது குறித்து இஸ்மாயில் ஸலஃபி என்பவரும் கேள்வி எழுப்பிய போது பீஜேயகிய நான் எனது இணைய தளத்தில் பின்வருமாறு பதில் அளித்துள்ளேன். அதுவே பாக்கர் கூட்டத்தின் குற்றச் சாட்டுக்கும் உரிய பதிலாகும்.

இஸ்மாயீல் ஸலஃபி என்பவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.

உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! அல்ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாய் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன?

அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா?

இதற்கு பீஜே அளித்த பதில் வருமாறு:

எனது பதில்

இஸ்மாயீல் ஸலஃபி கடைந்தெடுத்த பெரும் பொய்யர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமே தேவை இல்லை.

என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார். சொத்து சேர்த்த சரித்திரம் என்ன என்று கேட்கிறார்.

இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி?

இஸ்மாயீல் ஸலஃபியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று பொத்தாம் பொதுவாகத் தான் நான் கேட்டேனா? தேவைப்பட்டால் ஆதாரத்துடன் தான் அதைக் கேட்பேன்.

உங்களுக்கு நாணயம், நேர்மை இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதைப் பட்டியல் போட்டு அதை நிரூபிக்க முன் வர வேண்டும்.

என் சொத்து வளர்ச்சி பற்றிய பட்டியலையும் எனக்குக் கொடுக்க வேண்டும்?

மானம், சூடு, சொரனை இவை கடுகளவாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் எதற்குப் பதில் சொல்லா விட்டாலும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை. இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்து நான் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகிறேன்.

இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன்.

நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன்.

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பைன்டிங் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார்.

அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன். அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி உங்கள் இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும் எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்கு குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு நிலம் வாங்கினேன்.

எனது பூர்வீக வீடும், அந்த நிலமும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.

மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

என் பெயரிலோ, என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்துச் சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.

இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ, என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் ஸலஃபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறார்களோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ, என் மனைவி மக்கள் பெயரிலோ, சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள், பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலஃபிக்குத் தந்து விடுகிறேன்.

இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவர்கள் வந்த போது கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிந்திருந்ததையும், உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.

இது போல் நீங்கள் பொய்களைப் பரப்பியதால் தான் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:273

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலஃபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே, அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவே இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும், செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும், மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது நானும் சுயமரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம்.

இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன்.

அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்தச் சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி அல்ல.

எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்று நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.

அதனால் பணத்துக்காகச் சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலஃபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.

அத்னால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ, சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.

மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா பணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன்.

ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐ.ஏ.சி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காக பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல், ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்து அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன், அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே ஜாக் இயக்கமே அல்ஜன்னத் இதழை எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி அல் ஜன்னத் இதழை ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலஃபி குறிப்பிடுகிறார்.

அந்த உறுத்தலைத் தவிர்ப்பதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)

சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன்.

சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சென்னை வந்ததும் நூல்கள் எழுதி தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.

நான் தமுமுக அமைப்பாளராக இருந்த போது எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர்.

இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்று கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மன திருப்தி ஏற்பட்டது.

ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி பதில் எழுதுதல், பிழை திருத்தல், மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்றதில்லை. தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ, ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான நேரத்தில், கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி அல்லது சில நிர்வாகிகள் துணையுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.

தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத் தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவர்  இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.

ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தவ்ஃஹீத் ஜ்மாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

இப்போது அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கியக் காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன்.

கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக. தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ, நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது பல லட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன்.

அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்குப் பயன்பட்டது. இப்போது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைபாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலமும் தொலைக் காட்சி மூலமும், குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று பல நண்பர்கள் கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆச் செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கும் வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.

மார்க்கத்தைத் தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். ஆனால் அதில் முதலீடு செய்து வாடகை கொடுத்து சம்பளம் கொடுத்து உழைப்பும் அடங்கியுள்ளதால் இந்த வாதமும் சரியல்ல..

இது குறித்து விளக்கமாக அறிய வேதத்தை வியாபாரமாக்கலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று நாம் சொல்வது பொய்யா?

சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரமலானில் தொடர் உரை நிகழ்த்திய போது ஒரு செய்தியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பொய் பேச நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் என்று சொல்லி கீழ்க்கண்ட ஹதீஸைக் குறிப்பிட்டார்.

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي يُونُسُ ، عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ – وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَخْبَرَتْهُأَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ : لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا ". قَالَ ابْنُشِهَابٍ : وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِي شَيْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلَّا فِي ثَلَاثٍ : الْحَرْبُ، وَالْإِصْلَاحُ بَيْنَ النَّاسِ، وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُالْمَرْأَةِ زَوْجَهَا.

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார் என்று நபிகள் நாயகம் ( ஸல்) கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல் : முஸ்லிம்

இணக்கத்திற்காக கணவன் மனைவியர் தமக்கிடையில் பொய் சொல்வதற்கு நபிகளார் அனுமதியளித்துள்ளார்கள் என்பதை விளக்கி பீஜே அவர்கள் பேசிய 7 நிமிடம் உள்ள முழு நீள வீடியோவின் 30 நொடியை மட்டும் துண்டாக வெட்டி தற்போது அவதூறு பரப்பி வருகின்றனர் சில வயிற்றெரிச்சல் பேர்வழிகள்.

பீஜே பேசிய முழு வீடியோவை முழுமையாக காணவும்

மேற்கண்ட செய்தியை பீஜே குறிப்பிடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரின் போது பொய் சொல்ல அனுமதியளித்துள்ளார்கள். போரின் போது நபி அவர்களே பொய் சொல்லுவார்கள் என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அரபு மூலத்துடன் பீஜே சொல்லிக் காட்டினார்.

அந்த ஹதீஸ் இதோ:

2947. கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போரின் போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்த போது இதை அவர்கள் கூற கேட்டேன் என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த – அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) அறிவித்தார்.

நூல் : புகாரி 2947

3029 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَصْرَمَ ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : سَمَّىالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَرْبَ خَدْعَةً.

3029 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் போரை சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி

3030 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3030

போருக்குச் செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொய் சொல்வார்கள் என்று ஹதீஸ் ஆதாரத்துடன் மேற்கோள்காட்டி பீஜே அவர்கள் சொன்ன விஷயத்தை, அவர் சொன்ன ஹதீஸ் ஆதாரங்களையெல்லாம் வெட்டிவிட்டு வெறுமனே 30 நொடி வீடியோவாக வெட்டிப் போட்டதே இவர்களது பித்தலாட்டத்திற்குச் சரியான சான்று.

இருந்த போதிலும் தக்க சான்றுகளுடன் சொன்ன சரியான செய்தியை பாரதூரமான செய்தி போல பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்து கப்ர் வணங்கிகளும், சலஃபுக் கும்பலும் தற்போது பரப்பி வருகின்றனர்.

நாம் போர் செய்யும் போது எதிரி ஒருவன் வந்து நம்மிடம் நீ என்னென்ன போர்த்தளவாடங்கள் வைத்துள்ளாய் என்று கேள்வி கேட்டால், நம்மிடம் உள்ளது 20 துருப்பிடித்த வாள்களும், 15 துருப்பிடித்த கேடயம் மட்டும் தான் என்று வைத்துக் கொள்வோம்; அந்த உண்மையை அவனிடத்தில் சொன்னால் அந்த இடத்திலே நமது கதை முடிந்துவிடும்.

இதைக் கவனத்தில் கொண்டு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் என்பது சூழ்ச்சியாகும் என்றும், போரில் பொய் சொல்லலாம் எனவும் வழிகாட்டியுள்ளார்கள்.

போரின் போது பொய் சொல்வதை உலகத்தில் யாரும் தவறென்று சொல்ல மாட்டார்.

பீஜே சொன்னதை மறுப்பவர்கள் முக்கியமான ஒரு கேள்வியை வைக்கிறார்கள். கஅப் பின் மாலிக் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸில் பொய் என்ற வாசகம் இல்லை. பாசாங்கு என்று தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே பீஜே சொன்னது தவறு என்பது இவர்களின் வாதம். பொய் என்பது வாயால் சொல்வதில் மட்டும் தான் வரும். செயலில் பொய் வராது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொல்லவில்லை; பாசாங்கு தான் செய்தார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

போருக்குச் செல்வதாக இருந்தால் போருக்குச் செல்வதைச் சொல்லாமல் வேறு ஏதோ ஒரு பகுதிக்குச் செல்வது போல நபிகளார் பாசாங்கு காட்டுவார்கள் என்று தெளிவாக வருகின்றது.

அப்படியானால் இதற்குப் பெயர் என்ன?

பாசாங்கு என்பது பொய் அல்லாமல் வேறு என்ன?

ஒருவர் தான் முழு உடல் நலத்துடன் இருக்கும் நிலையில் தனக்கு உடல் நலம் சரியில்லாதது போல் பாசாங்கு செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இவரைப் பற்றி என்ன சொல்லுவோம். பொய்யாக நடிக்கின்றார் எனக் கூறுவோம். அப்படியானால் பொய் என்பது சொல்லிலும் உண்டு; செயலிலும் உண்டு என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

இல்லை; இல்லை; தனது உடல் நலம் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் போதும் தான் உடல் நிலை சரியில்லாதவர் போல பாசாங்கு செய்பவர் பொய் சொல்லவில்லை என இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபுக் கும்பல்களும் சொல்லப் போகின்றார்களா?

பொய் என்பது சொல்லில் மட்டும் தான் உண்டு. சொல் அல்லாததில் பொய் என்பது வராது என்று கூறுவார்களானால் கீழ்க்கண்ட வசனத்திற்கு இவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

12:18 வசனத்தில் பொய்யான இரத்தத்தைக் கொண்டு வந்தனர் என அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

இரத்தம் என்பது சொல் அல்ல. அது ஒரு பொருள். அதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது பொய்யான இரத்தம் என்று கூறுகிறான்.

உண்மைக்கு முரணான அனைத்துமே பொய் தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பாசாங்கு செய்வது என்பதும் பொய்யின் ஒரு வகை தான் என்பதைத் தெரிந்து கொண்டே மறுக்கும் இந்தக் கூட்டத்தினர் பீஜேவின் மீது ஏதாவது அவதூறு சொல்ல வேண்டும் என்பதற்காக 6 வருடத்திற்கு முன்பு அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு பீஜே பேசிய வீடியோவை தற்போது வெட்டி எடிட் செய்து பரப்பி வருவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகளார் போரின் போது எதிரிகளிடத்தில் பொய் சொன்னார்கள் என்று தக்க ஆதாரத்துடன் பீஜே சொல்வதை இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபுக் கும்பலும் மறுக்கக் காரணம் என்ன தெரியுமா?

இது நபிகளாரது கண்ணியத்தைக் குலைக்கும் செயலாம். நபிகளார் போரின் போது பொய் சொன்னார்கள் என்று ஏதாவது ஒரு பிறமத சகோதரர் கேட்டால் அவர் நபிகளாரைப் பற்றி என்ன நினைப்பார் என்று ரொம்ப ஆதங்கப்படுகின்றனர் இந்த கப்ரு வணங்கிகளும் சலஃபுக் கும்பலும்.

போரின் போது நபிகளார் பாசாங்கு செய்துள்ளார்களே என்று பிறமத சகோதரர் கேட்டால் நபிகளாரைப் பற்றி என்ன நினைப்பார்? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

அறிவை அடகு வைத்துவிட்டு உளறுகிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

சரி. அப்படியானால் போரின் போது நபிகளார் பொய் சொல்ல அனுமதியளித்தார்கள் என்று ஹதீஸில் தெளிவாக வருகின்றதே! இதை பிற மத சகோதரர்கள் படித்தால் நபிகளாரைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்கு இவர்கள் பதில் சொல்வார்களா?

போரின் போது பொய் சொல்ல அனுமதி வழங்குவது கண்ணியம்; அதையே நபிகளார் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருவது மட்டும் அசிங்கமா? பதில் சொல்ல வேண்டும்.

திருக்குர்ஆனின் பல இடங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றச் சொல்லி அல்லாஹ் நபிகளாருக்குக் கட்டளை போடுகின்றான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

மக்களுக்கு விளக்குவதற்காக சூரியன், நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றைக் கடவுள் என்று இப்ராஹீம் நபி கூறினார்கள். இது அந்த மக்களுக்குப் புரிய வைப்பதற்காகப் பொய்யாக சொல்லப்பட்டது தான்.

ஏனென்றால் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு போதும் இணைவைத்ததே இல்லை என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

பார்க்க : அல்குர்ஆன் 3:67 2:135, 3:67, 3:95, 6:161, 16:120, 16:123

இந்த கப்ரு வணங்கிக் கூட்டமும், சலஃபுக் கும்பலும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?

அப்படியானால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் சொன்னதாக வரும் வசனங்களின் நிலை என்ன?

இது குறித்து சகோதரர் பீஜே அவர்கள் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பின் விளக்கங்கள் பகுதியில் 162வது குறிப்பில் விரிவாக விளக்கியுள்ளார்.

மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா?

போரின் போது நபிகளார் பொய் சொன்னார்கள் என்ற செய்தியை இவர்கள் மறுக்கப் புகுந்தால் மேற்கூறிய அனைத்து வசனங்களையும் மறுக்க வேண்டும்.

இன்னும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்?

இதற்கு கப்ரு வணங்கிக் கூட்டமும், சலஃபுக் கும்பலும் பதிலளிக்க வேண்டும்.

போரின் போது எதிரிகளிடத்தில் பொய் சொல்வது தான் புத்தியுடையவரின் செயல் என்பதை சுய நினைவுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்; இது போல நபிகளார் பொய் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று சொல்பவர் தான் நபிகளாரின் கண்ணியத்தைக் கெடுப்பவர்கள் என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

போர் தந்திரங்களை அறியாதவராக நபிகளார் இருந்துள்ளார்கள் என்பது போல இந்த மூளை மழுங்கிய கூட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் காட்டப் பார்க்கின்றது என்பது தான் நிதர்சனமான உண்மை.

நபிகளாரை அல் அமீன்; சாதிக் என்றெல்லாம் மக்கள் சொல்லியுள்ளார்களே! அப்படியானால் போரில் நபிகளார் பொய் சொல்வார்கள் என நம்புவது மிகவும் வேதனைக்குரியது என்று ரொம்பவும் வேதனைப்படுகின்றனர் சலஃபுக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

அமீன் என்றெல்லாம் மக்கள் சொல்லி இருக்க நபியவர்கள் பாசாங்கு செய்தார்கள் என்று சொல்வது வேதனைக்குரியது என்று சொல்வார்களா?

அமீன் என்று பெயரெடுத்த நபிகளார் மற்றவர்களைப் பொய் சொல்லத் தூண்டினார்கள் என்று கூறுவது வேதனைக்குரியது என்பார்களா?

ஒரு கிராமவாசியிடத்தில் ஒரு குதிரையை நபிகளார் விலைக்கு வாங்கியதைப் பார்க்காத ஒரு நபித்தோழர் தான் பார்த்ததாக பொய் சாட்சி சொன்னதை அப்படியே சிலாகித்து நபிகளார் ஏற்றுக் கொண்டதாகவும், அப்படி பொய் சாட்சி சொன்ன நபரை இரண்டு சாட்சிக்கு நிகரானவர் என்று சொல்லி நபிகளார் அங்கீகரித்ததாக வரும் கட்டுக்கதையை மட்டும் அப்படியே நம்புவார்களாம். அப்போது மட்டும் அல் அமீன்; அஸ்ஸாதிக் என்ற நபிகளாரின் பட்டம் அப்படியே கண்ணியம் கூடுமாம். இதுதான் சலஃபுக் கும்பலின் உண்மை முகம்.

என்னதான் இவர்கள் இது போல படம் காட்டினாலும், அவதூறு கூறினாலும் கெட்டிக்காரனின் புளுகுமூட்டை எட்டு நாளைக்குத் தான் என்பது போல சில நாட்களில் இவர்களது வேடம் கலைந்து முகத்திரை கிழியும் என்பது இந்த விஷயத்திலும் உண்மையாகியுள்ளது.

அதே நேரத்தில் நம்மை நோக்கி இந்தக் குற்றச்சாட்டை வைக்க அறவே தகுதியற்றவர்கள் தான் இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபுப் பேர்வழிகளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆம்!

நபிகளார் ஒரு யூதன் வைத்த சூனியத்தால் 6 மாத காலங்கள் மனநோயாளியாக இருந்தார்கள் எனச் சொல்லும் இந்தக் கூட்டம்.

நபிகளார் அந்நியப் பெண்ணிடத்தில் தனித்திருந்தார்கள் என அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டும் இந்தக் கூட்டம்.

நபிகளார் அந்நிய ஆடவனை அந்நியப் பெண்ணிடத்தில் பால்குடிக்கச் சொல்லிக் கட்டளையிட்டார்கள் என்று சொல்லி அவர்களது ஒழுக்கத்தையும், நற்குணத்தையும் கேவலப்படுத்தும் இந்தக் கூட்டம்

தற்போது ஏதோ நபிகளாருக்குக் கண்ணியம் தேடித் தருவதுபோல பில்டப்புகளைக் கொடுத்து படம் காட்டுவது கொடுமையிலும் கொடுமை.

مجموع فتاوى ابن باز (7/ 371)

وقد وقع في يوم الأحزاب من الخديعة للمشركين واليهود والكيد لهم على يد نعيم بن مسعود – رضي الله عنه – بإذن النبي صلى الله عليه وسلم ما كان من أسباب خذلان الكافرين وتفريق شملهم واختلاف كلمتهم وإعزاز المسلمين ونصرهم عليهم

அஹ்ஸாப் போரின் போது நபியவர்கள் இணைகற்பிப்பவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக மோசடியும் சூழ்ச்சியும் செய்தார்கள் என்று சவூதி நாட்டு மார்க்க அறிஞர் பின் பாஸ் கூறுகிறார். சூழ்ச்சியும் மோசடியும் பொய்யை விட பாரதூரமானதாகும்.

அரபு நாட்டு சல்லிக்கு சிங்கி அடிக்கும் சலபிக் கும்பல் பின் பாஸ் மேலே சொன்னவாறு எழுதியுள்ளாரே அதைப் பற்றி பேசத் தயாரா?

18.02.2016. 0:55 AM

கோட்டார் விவாதம் 1986

ஓரிரு ஊர்களில் மட்டும் சிறிய அளவில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து வந்த காலகட்டத்தில் நாகர்கோயில் கோட்டார் எனும் ஊரில் முதன்முதலாக சுன்னத்வல்ஜமாத்திற்கும், அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பிற்கும் ஒரு விவாதம் 18,19-07-1986 ல் இரண்டு நாள் நடைபெற்றது.

சுன்னத் வல்ஜமாஅத் சார்பாக 20 க்கும் மேற்பட்ட மவ்லவிமார்கள் கலந்துகொண்டு விவாதித்தனர்.

நமது சார்பாக அதிகமான மவ்லவிமார்கள் அந்தக் காலக்கட்டத்தில் இல்லாததால்

P.ஜெய்னுல் ஆபிதீன்

S.கமாலுதீன் மதனி,

S.I.அப்துல் காதிர் மதனி,

K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,

M.அப்துல் ஜலீல் மதனி,

F.அப்துல் ஹமீது ஆமிர் உமரி,

S.S.U.சைபுல்லாஹ் ஹாஜா

ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

எதிர்த் தரப்பில் கேரளாவின் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார், இலங்கை ஏ.எல்.பத்ருத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காந்தபுரம் அபூபக்ர் முஸ்லியார் கேரளாவில் சுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப்பெரிய அறிஞராவார். அப்படி இருந்தும் பீஜே அவர்களின் அறிவார்ந்த வாதம் காரணமாக அவர்களுக்கு படுதோல்வியே ஏற்பட்டது.

இந்த விவாதத்துக்குப் பின்னர் தான் குமரி மாவட்டத்தின் பல ஊர்களில் ஜாக் இயக்கத்துக்கு  கிளைகள் உருவாயின. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட்டது. அந்த அளவுக்கு இந்த விவாதத்தில் அல்லாஹ் வெற்றியளித்தான்.

விவாதத்தின் தலைப்புகளாக

இறந்தவர்களிடம் வசீலா தேடுதல்

இறந்தவர்களுக்கு குர் ஆன் ஹத்தம் ஓதுதல்

தொழுகைக்குப்பின் கூட்டு துஆ

ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொள்கைச் சகோதரர்களும், சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லக்கூடியவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இந்த விவாதம் தமிழகத்தில் தவ்ஹீதின் வளர்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது. இந்த விவாதம் "கோட்டாறு முனாழரா" எனும் தலைப்பில் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

இரண்டு பெரிய சூப்பர் மார்க்கெட் திறக்க பணம் எப்படி வந்தது?

பதில்கள் பகுதி

பதிலளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

கேள்வி : தாங்கள் மண்ணடியில் இரண்டு பெரிய சூப்பர் மார்க்கெட் திறக்க இருப்பதாகவும், எனக்கு சொத்து எதுவும் இல்லை என்று தாங்கள் சொன்னதெல்லாம் பொய் என்றும், ஒன்றுமில்லாதவருக்கு இரண்டு சூப்பர் மார்கெட்டுகள் திறக்கக்கூடிய அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது என்றும் கேள்வி எழுப்புகின்றார்கள். இது குறித்து தகுந்த விளக்கம் தேவை. - முஸ்தஃபா, கோவை

பதில் : இந்தக் கேள்விக்கு ஏற்கனவே ஆன்லைன் பீஜேவில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளேன்.

அதையே உங்களது கேள்விக்கும் பதிலாக தருகின்றேன்.

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்வி கேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் – moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம்.

இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும், சிறிய கடை என்பதாலும் எந்த ஃபித்னாவும் வரவில்லை. ஃபித்னாவுக்கு வழியும் இல்லை.

மேலும் ரியல் எஸ்டேட் அல்லது பிற சேவை நிறுவனங்கள் நடத்தினால் ஜமாஅத்தின் பெயர் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கும். எங்கள் நிறுவனத்தில் அதற்கு இடமில்லை. வாடிக்கையாளர்கள் எங்கள் வியாபார நேர்மைக்காக மட்டுமே வாடிக்கையாளர்களாக உள்ளனர். தவ்ஹீத் சகோதார்களை விட மற்ற சகோதரர்களும், போரா ஜமாஅத்தினரும், முஸ்லிமல்லாத மக்களும் தான் அதிக அளவில் வாடிக்கையாளராக உள்ளனர். விலை குறைவு, தரமான பொருட்கள் என்பதற்காகவே வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே ஜமாஅத் சகோதரர்களை எனது வியாபாரத்துக்கு நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று யாரும் கூற முடியவில்லை.

மண்ணடி பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் குவியும் ஒரே நிறுவனமாக மூன் மார்ட் வளர்ந்துள்ளதால் எல்லா நேரமும் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவைக் கவனத்தில் கொண்டு கடையை விரிவாக்கம் செய்ய நாங்கள் முயற்சித்து வந்தோம்.

அந்த முயற்சியின் விளைவாக டிசம்பர் முதல் தேதியில் இருந்து பிராட்வே சாலையில் 2400 சதுர அடிபரப்பளவு கொண்ட வாடகைக் கட்டடத்துக்கு moon mart மூன் மார்ட்டை மாற்றுகிறோம்.

அதுபோல் 3500 சதுர அடியில் அமைந்த மற்றொரு வாடகைக் கட்டடத்தில் இன்னொரு நிறுவனத்தை இன்னும் மூன்று மாதங்களில் துவக்கவுள்ளோம்.

இப்போது பல கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெரிய அளவில் தொழில் செய்வதற்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை என்பது பல சகோதரர்களுக்குத் தெரியும். நான் எனது அறிமுகத்தைப் பயன்படுத்தி ஜமாஅத் சகோதரர்களிடத்தில் கடன் வாங்கி இருப்பேனோ அல்லது பங்குதாரர்களைச் சேர்த்து தொழிலை விரிவாக்கி இருப்பேனோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

எனது தொழில் விரிவாக்கத்துக்காக நான் ஜமாஅத் சகோதார்களிடமோ, மற்றவர்களிடமோ எந்தக் கடனும் வாங்கவில்லை. யாரையும் பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. கடன் வாங்குவதையும், பங்கு சேர்வதையும் நான் தவிர்ப்பதுடன் அதையே ஆலோசனையாக மற்றவர்களுக்கும் கூறிவருகிறேன்.

எனவே இந்த ஜமாஅத்தின் அறிமுகத்தை எனது தொழில் வளர்ச்சிக்கு நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியானால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதியை முறைகேடாக நான் பயன்படுத்தி இருக்கலாமோ? அல்லது ஜமாஅத் நிதியில் கடன் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வரலாம். (நான் தலைவராக இருந்தவரை) ஜமாஅத்தின் நிர்வாக நடைமுறையை அறிந்தவர்கள் இப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்.

நம்முடைய ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைவர் அல்லது பொதுச் செலாளர் நிதியைக் கையாள முடியாது. நிர்வாகக் குழுவின் ஆலோசனைப்படி பொருளாளர் தான் கையாள முடியும்.

நிர்வாகச் செலவுகளுக்குக் கூட 5000 ரூபாய் தான் தலைவர், பொதுச் செயலாளர் செலவிட முடியும். 25 ஆயிரம் வரை செலவிடுவது என்றால் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் ஆலோசித்துத் தான் செலவிட முடியும். அதற்கு மேல் செலவிடுவது என்றால் நிர்வாகக் குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்ற பின்பே செலவிட முடியும்.

(இந்த நடைமுறையை முற்றிலுமாக மீறி பொருளாதாரத்தை தற்போது கையாள்கின்றனர் என்பது நிரூபணமாகியுள்ளது.)

இப்படிப்பட்ட நிர்வாகம் உள்ள ஜமாஅத்தில் நானோ மற்ற எந்த நிர்வாகியோ கடனாகக் கூட பணத்தை எடுக்க முடியாது.

எனது தொழில் விரிவாக்கத்துக்கு எந்தத் தனிநபரின் உதவியையும் நான் நாடவில்லை. எந்தச் செலவந்தரிடமும் கடனும் பெறவில்லை. பார்ட்னராகவும் சேர்க்கவில்லை. ஜமாஅத்தில் இருந்து கடனாகவும் பெறவில்லை.

யாருக்கும் தெரியாமல் ஜமாஅத் பணத்தை எடுத்துக் கொள்ளவும் இல்லை. எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜமாஅத்தின் பணம் என் கட்டுப்பாட்டிலோ, கைவசத்திலோ இல்லை. ஜமாஅத் பணத்தை அமானிதமாக சில நேரம் என்னிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வார்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு ஏக்கர் நிலம் ஒன்றை எனது சொந்த ஊருக்கு அருகில் வாங்கிப் போட்டு இருந்தேன். தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை போடப்பட்டு சாலையில் அந்த இடம் வருவதால் அந்த இடத்தின்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து அல்லாஹ் பரக்கத் செய்துள்ளான்.

இஸ்மாயீல் சலபி என்பவர் எனது சொத்து குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் அதற்கு மிக விரிவாக நான் பதில் அளித்தேன். அந்தப் பதிலில் அந்த இடத்தைப் பற்றி முன்னரும் நான் குறிப்பிட்டுள்ளேன்.

அந்த ஆக்கத்தை வாசிக்க

பீஜேயின் சொத்து எவ்வளவு

 என்ற இணைப்பைப் பார்க்கவும்.

எனது ஒரே சொத்தான அந்த நிலத்தை உடனடியாக விற்று கடையை விரிவாக்கம் செய்ய அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

15 நாட்களுக்கு முன்னர் அந்தச் சொத்தை தொண்டி தவ்ஹீத் சகோதரர்கள் வழியாக விற்றேன். தொண்டியில் இது குறித்து விசாரித்துக் கொள்ளலாம்.

அந்தப் பணத்தையும், தற்போது நடத்திவரும் மூன் மார்ட் நிறுவனத்தின் சரக்குகளையும் சேர்த்துத் தான் தற்போது எனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் இயக்கத்தை தமது ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சந்தேகப்படும் வகையில் நடக்கக் கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தைத் தருகிறேன்.

நீங்களோ மற்ற யாருமோ இது குறித்து கேள்வி கேட்பதற்கு முன்பே நான் இதைப் பற்றி மக்களுக்கு எனது இணைய தளத்தில் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளேன்.

மேலும் 20 நாட்களுக்கு முன் கூடிய உயர்நிலைக் குழுவிலும் நானாக முன் வந்து முழுவிபரத்தையும் தெரிவித்துள்ளேன்.

நவம்பர் 2013ல் எழுதியது

நன்றி : உணர்வு வார இதழ்

திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

விவாதத்திலிருந்து தப்பி நழுவி ஓடுவதற்காக அவர்கள் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற பொருந்தாக் காரணத்தை கூறி வந்தனர்.

அவர்களை தப்பி ஓடவிட்டுவிடக்கூடாது என்பதற்காக நாம் இறங்கி வந்து, நேரடி ஒளிபரப்பு இல்லாமலேயே விவாதம் செய்ய நிர்பந்தித்து அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே, நேரடி ஒளிபரப்பும், விளம்பரமும் இல்லாமல் தரப்புக்கு 25 பார்வையாளர்களைக் கொண்டு இவ்விவாதம் நடைபெற உள்ளது. விவாதம் முடிந்த பிறகு தாமதமின்றி முழு விவாத வீடியோக்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம்

2011 ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் மூன் பப்ளிகேசன் சார்பில் அரங்கு எடுக்கப்பட்டது குறித்து அன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பீஜே அளித்த விளக்கம்.

34வது புத்தக கண்காட்சியில் மூன் பப்ளிகேசன் பெயரில் ஸ்டால் போட்டு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஏன் போடவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கேள்விகள் எழுப்புவது நல்லது தான்.

ஆனால் இந்தக் கேள்வி சென்ற வருடமும் எழுப்பப்பட்டு அதற்கு தக்க பதில் சொல்லப்பட்டது. சென்ற வருடமும் மூன் பப்ளிகேசன் சார்பில் தான் ஸ்டால் போடப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போடப்படவில்லை.

இது குறித்த விபரத்தை அனைவரும் புரிந்து கொள்வதற்காக தெளிவுபடுத்துகிறேன்.

சென்னையில் ஆண்டு தோறும் பதிப்பாளர்கள் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் அதிகமான மக்கள் வந்து குழுமுவதால், வரக்கூடியவர்களில் அதிகமானவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர்களாக உள்ளதால் நாமும் அதில் ஒரு கடையை எடுத்தால் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பிரசுரங்களை வினியோகிக்கலாம்; தாவா செய்யலாம் என்று பல சகோதரர்கள் நம்முடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

நான் தமுமுகவில் அமைப்பாளராக இருந்த போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டு முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் மூலம் ஸ்டால் போடுவதென்று முடிவு செய்யப்பட்டது. அப்போது தமுமுகவின் சார்பில் எந்தப் புத்தகமும் வெளியிடப்படவில்லை. மூன் பப்ளிகேசனும் அப்போது இருக்கவில்லை.

உணர்வு இதழை விளம்பரப்படுத்துவதுடன் ஸாஜிதா புத்தக நிறுவனத்தில் தாவா தொடர்பான நூல்களை வாங்கி விற்பனை செய்யப்பட்டது. மேலும் இலவசப் பிரசுரங்களும் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. இதில் பல ஆயிரம் ரூபாய்கள் நமக்கு செலவாயின. ஆனாலும் தாவா நோக்கில் இதை விடாமால் செய்து வந்தோம்.

தமுமுகவில் இருந்து நாம் பிரிந்து வந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. எனவே முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் நாம் ஸ்டால் போட்டதை நிறுத்தி விட்டோம். முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் உறுப்பினர் கட்டணம் செலுத்துவதையும் விட்டு விட்டோம்.

இந்த நிலையில் தான் மூன் பப்ளிகேசன் மூலம் அதை நடத்துவது என நான் முடிவு செய்தேன். அதற்கான கட்டணைத்தைச் செலுத்தி மூன் பப்ளிகேசனை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தில் உறுப்பினராக்கினோம்.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் மூன் பப்ளிகேசன் மூலம் ஸ்டால் போட்டோம். ஆள் பற்றாக்குறை காரணமாக அதை நிறுத்தி விட்டோம். எனவே இரண்டு ஆண்டுகள் நாம் ஸ்டால் போடவில்லை.

இந்த நிலையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தாவா நோக்கத்தில் ஸ்டால் போட வேண்டும் என்று புதிய நிர்வாகிகள் கூடி முடிவு செய்தனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஸ்டால் போடுவதில் சில பிரச்சனைகள் இருந்தன. இயக்கம் சார்பில் ஸ்டால் போட அனுமதி இல்லை என்பது அதில் முக்கியப் பிரச்சனை.

புதிதாக ஒரு பதிப்பகம் பெயரில் தான் ஸ்டால் போட வேண்டும். அப்படி புதிய பதிப்பகம் துவங்கினால் உடனே பதிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே உறுப்பினராகச் சேர முடியும்.

உறுப்பினர்களுக்கு மட்டுமே ஸ்டால் போடுவதில் முன்னுரிமை அளிப்பார்கள்.

இதைக் கவனத்தில் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்கனவே உறுப்பினராக உள்ள மூன் பப்ளிகேசன் ஸ்டால் போடுவதை நிறுத்தி விட்டதால் அவர்கள் பெயரில் ஸ்டால் எடுத்து கேட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் முழுப்பொறுப்பில் நடத்துவது என்று முடிவு செய்தனர். மூன் பப்ளிகேசன் பெயரைப் பயன்படுத்த அனுமதி பெறுவது தவிர வேறு எந்த ஒத்துழைப்பும் நம்மால் தர வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தோம்..

மூன் பப்ளிகேசன் பதிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளதால் அதன் பெயரில் ஸ்டால் எடுத்துக் கொடுத்தோம். உறுப்பினராக இருப்பதற்காக ஆண்டு தோறும் செலுத்தும் கட்டணத்தையும் நாம் ஏற்றுக் கொண்டோம்.

இதைத் தவிர அந்த ஸ்டாலுக்கும், நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. உரிமையும் இல்லை.

உறுப்பினர் கட்டணம் அல்லாமல் நாம் கேட்கும் கடையின் அளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் தமக்குத் தேவையான அளவுக்கான ஸ்டால் கட்டணம் மட்டும் செலுத்தி அதை பயன்படுத்துகிறார்கள். அதில் கிடைக்கும் லாப நட்டங்களுக்கும் நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அதன் வரவு செலவுகளிலோ, கொள்முதலிலோ நமக்கு எந்தப் பங்கும் இல்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தனக்குத் தேவையான நூல்களை நம்மிடமும் மற்றவர்களிடமும் 30 சதவிகித தள்ளுபடியில் வாங்கி விற்பனை செய்வார்கள்.

(இன்னும் சொல்லப் போனால் சவூதியில் இலவசமாக வெளியிட்ட மானிதர் நூல் போன்றவற்றை அங்கே இலவமாக விநியியோகம் செய்வது மூன் பப்ளிகேசனைப் பாதிக்கக் கூடியதாகும்.)

மேலும் தாவா நோக்கத்தில் ஸ்பான்சர் பெற்று சலுகை விலையிலும் சில நூல்களைக் கொடுக்கிறார்கள். தீவிரவாதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் இலவசப் பிரசுரங்களும் அங்கே வினியோகம் செய்கிறார்கள்.

இதில் எந்த ஒன்றிலும் மூன் பப்ளிகேசனுக்குச் சம்மந்தம் இல்லை. பெயர் மட்டும் தான் மூன் பப்ளிகேசன். ஸ்டால் நடத்துவது, அதன் லாப நட்டங்கள் யாவும் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தது தான்.

அதன் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவர்கள் தான்.

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது ஏன்?

கேள்வி

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது ஏன்?

திருவிடைச்சேரியின் தற்போதைய நிலைமை என்ன?

நமது முன்னாள் சகாக்கள் தங்களது பத்திரிக்கையில் நம் தரப்பில் தான் தவறு உள்ளதாக எழுதி உள்ளார்கள். ஒரு முஸ்லிம் கொலை செய்யப்பட்டதற்கு PJ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்? என்றும் எழுதி உள்ளார்கள். விளக்கம் தேவை

ராஜா முஹம்மத், குவைத்

பதில்

ஒருவரை ஒருவர் கொல்ல நடந்த முயற்சியில் ஒருவர் கை ஓங்கி விட்டால் அதற்காக நாம் கண்டனம் தெரிவிக்க மாட்டோம். நபிவழிக்கு ஏற்ப நாம் நடப்போமே தவிர சந்தர்ப்பவாதிகளின் விருப்பப்படி நாம் நடக்க மாட்டோம். இதற்கான நபி வழி இது தான்.

صحيح البخاري

31 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ المُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ: ذَهَبْتُ لِأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ؟ قُلْتُ: أَنْصُرُ هَذَا الرَّجُلَ، قَالَ: ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا التَقَى المُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالقَاتِلُ وَالمَقْتُولُ فِي النَّارِ»، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا القَاتِلُ فَمَا بَالُ المَقْتُولِ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ»

31அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஜமல் போரின் போது) அந்த மனிதருக்கு (அலீ ரலி அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் அந்த மனிதருக்கு உதவி செய்யச் செல்கிறேன் என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத் தான் செல்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்ட போது அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று சொன்னார்கள் என்றார்கள். 

நூல் : புகாரி 31

ஒரு சாரார் அரிவாள், கத்தியுடனும், அடியாட்களுடனும் காத்திருக்கின்ற போதுதான் ஒருவர் துப்பாக்கியுடன் செல்கிறார். இதில் யாருடைய கை ஓங்கினாலும் இருவருமே குற்றவாளிகள் தான்.  கொல்லப்பட்ட காரணத்தால் அக்கிரமங்கள் நியாயமாகி விடாது. இருவரும் சமமான குற்றவாளிகள் தான்.

கொலை செய்யும் நோக்கமின்றி சென்று தன்னைக் காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக ஹஜ் முஹம்மத் தரப்பு சொல்வது உண்மை என்றால் அப்போதும் கண்டிக்க வழியில்லாமல் போய் விடுகிறது.

Published on: September 20, 2010, 10:47 PM

More Articles …

Subcategories