352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!
இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.
ஒன்று, வேதம்
இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது
எனக் கூறப்படுகிறது.
வேதத்தை மட்டும் தான் இறைத் தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன் இப்படிக் கூறியிருக்க மாட்டான்.
வேதத்துடன் விளக்கம் தருகின்ற அதிகாரமும் வழங்கப்பட்டுத்தான் நபிமார்கள் அனுப்பப்படுகிறார்கள் என்பதையும், அவர்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதையும் இவ்வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode