Sidebar

21
Sun, Jun
சமீபத்திய செய்திகள்

▶️TMMK 2004 தஞ்சைப் பேரணியில் பீஜே துவக்க உரை

தமுமுக TMMK
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இட ஒதுக்கீட்டுக்கான தஞ்சைப் பேரணியில் பீஜே உரை

2004 மார்ச் 24 ஆம் தேதியன்று இட ஒதுக்கீட்டுக்காக தஞ்சையில் மாபெரும் பேரணி தமுமுக சார்பில் நடத்தப்பட்டது. இப்பேரணியை பீஜே துவக்கி வைத்து உரையாற்றினார். இதுவே தமுமுகவில் பீஜே ஆற்றிய கடைசி உரையாக அமைந்தது.

பிரம்மாண்டமான இக்கூட்டம் நாமும் அரசியலில் இறங்கினால் என்ன என்ற ஆசையை தமுமுக நிர்வாகிகளுக்கு விதைத்தது. பீஜே, பாக்கர், ஏ.எஸ். அலாவுதீன், அன்வர் பாஷா தவிர மற்ற எல்லா மாநில நிர்வாகிகளும் அரசியல் பக்கமே நின்றார்கள்.

பெரும்பாலான மாவட்ட கிளை நிர்வாகிகளும் அரசியல் பக்கமே நின்றார்கள். இப்பேரணியின் எழுச்சியைக் கண்டதும் தவ்ஹீத் கொள்கை தான் வளர்ச்சிக்கு முடுக்கட்டை எனக் கூறினார்கள்.

பீஜே உரையாற்றும் போது ஜவஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர், ஏ.எஸ். அலாவுத்தீன், மண்டலம் ஜைனுல் ஆபிதீன், விஞ்ஞானி அப்துல் ஜலீல், மறைந்த மவ்லவி அப்துர்ரஹீம், சாதிக், ஜே.எஸ்.ரிஃபாயி, தமீம் அன்சாரி, ஹாஜா கனி, பல ஆண்டுகள் பீஜேயின் pso பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அம்சராஜ் (இவர் பின்னாளில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றார்.) ஆகியோர் உடனிருக்கின்றனர்.