▶️லீசுக்கு, வாடகைக்கு விடலாமா?
லீசுக்கு [வாடகைக்கு] விடலாமா?
29/12/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
லீசுக்கு [வாடகைக்கு] விடலாமா?
29/12/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
வட்டி மற்றும் கொலைக்கு மன்னிப்பு உண்டா?
22/12/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜக்டரை செய்து கொடுக்கலாமா?
நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். புதிய புராஜக்ட் ஒன்றில் என்னை வேலை செய்யுமாறு அழைக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:
இந்த ப்ராஜெக்ட் ஒரு பிரபல வங்கி ப்ராஜெக்ட். இந்த ப்ரொஜெக்டை நான் வேலை பார்க்கும் கம்பெனி அவுட் சோர்ஸ் செய்து எடுத்து செய்து கொடுப்பார்கள். இந்த ப்ராஜெக்ட் அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் மற்றும் அவர்கள் தெரிவிக்கும் வங்கி சம்பந்தமான பிரச்சனைகளைச் சேகரித்து தக்க அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கும். இது தான் அந்த ப்ரோஜெக்டின் தகவல். இப்படிப்பட்ட ப்ரோஜெக்டில் நான் வேலை செய்வது மார்க்கத்தில் அனுமதியுண்டா?
ஜலாலுதீன்.
பதில் :
வங்கி தொடர்பான தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கும் பணியைச் செய்வது கூடுமா? என்பது உங்கள் கேள்வியின் சாராம்சம். வங்கி வட்டியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதால் இந்தச் சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளது.
வட்டித் தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள்.
صحيح مسلم
- حدثنا محمد بن الصباح وزهير بن حرب وعثمان بن أبى شيبة قالوا حدثنا هشيم أخبرنا أبو الزبير عن جابر قال لعن رسول الله -صلى الله عليه وسلم- آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
வட்டிப் பணத்தை வசூலித்தல், வட்டிக் கணக்குப் பார்த்தல் போன்ற வேலைகள் வட்டி தொடர்புடைய வேலைகள் என்பதால் இவற்றைச் செய்வது கூடாது.
வங்கியின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது வெள்ளையடிப்பது போன்றவை வட்டியுடன் தொடர்புடைய பணிகள் அல்ல. எனவே இவற்றைச் செய்வது கூடும்.
வங்கி தொடர்பான தகவல்களைச் சேகரிப்பது வட்டிக்குத் தொடர்பில்லாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பணியாகும்.
இது தொடர்பாக கூடுதல் விபரம் அறிய
வங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா?
என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்
12.03.2011. 2:05 AM
நாள் வாடகை வட்டியாகுமா?
ஒரு வாகனத்தை நாள் வாடகைக்கு விடுவது வட்டி என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?
பதில் :
வட்டி என்பது என்ன? இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.
நம்முடைய பணம் எவ்வளவு காலம் ஒருவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் பெறுவது தான் வட்டி என்பது.
நம்முடைய பொருள் எவ்வளவு காலம் ஒருவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் அடைவது வாடகை எனப்படும்.
பிறரின் பணம் ஒருவரிடம் இருப்பதற்கும், பணம் அல்லாத மற்றவை ஒருவரிடம் இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும். நமது பணத்தை ஒருவர் பயன்படுத்தினால் அதனால் பணத்தின் மதிப்பு குறையப் போவதில்லை. நோட்டு பழையதாக ஆனாலும் பணத்தின் மதிப்பு குறையாது. பழைய நோட்டுகளுக்கும், புதிய நோட்டுகளுக்கும் மதிப்பு ஒன்று தான்.
ஆனால் ஒருவனது வீட்டையோ, வாகனத்தையோ பயன்படுத்தினால் அதனால் தேய்மானம் ஏற்படுகிறது. மதிப்பு குறைகிறது.
இந்த வகையில வாடகையும், வட்டியும் வேறுபடுகிறது.
ஒருவரது பணத்தை நாம் ஏதோ ஒரு துறையில் பயன்படுத்தினால் அதில் லாபமும், நட்டமும் ஏற்படலாம். நிச்சயமான ஆதாயம் இல்லை.
ஆனால் ஒரு பொருளை வாடகைக்கு எடுத்தால் அதை நாம் அனுபவித்து விடுவது நிச்சயமானது.
எனவே பிறரின் பொருளை நாம் பயன்படுத்தும் போது அப்பொருள் தேய்மானம் ஆவதால் அதற்கு ஈடு கட்டும் வகையில் நாம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதில் நியாயம் உள்ளது.
ஆனால் பணத்தை நாம் திருப்பித் தரும் போது அதில் எந்தத் தேய்மானமும் ஏற்படாது. கொடுத்த பணத்தை அப்படியே திரும்ப வாங்கிக் கொள்கிறோம். இதற்கு ஆதாயமும் பார்ப்பதில் நியாயம் இல்லை.
இது தான் வாடகைக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடு.
நாம் கடனாகக் கொடுத்த ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறதே? இது இழப்பு தானே என்ற சந்தேகம் எழலாம். ஆனால் இந்தச் சந்தேகம் சரியானதல்ல.
பணத்தின் மதிப்பு சில வேளை குறையலாம்; சில வேளை அதிகரிக்கலாம். இது கடன் வாங்கியவர் பயன்படுத்தியதால் ஏற்பட்டதல்ல. அந்தப் பணம் நம்மிடம் இருந்தாலும் இதே விளைவு ஏற்படும்.
இப்படி வட்டிக்கும் வாடகைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் முஸ்லிம்கள் சேரலாமா?
பொதுவாக அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது தவறாகும். எந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மார்க்க வரம்பு மீறப்படுமோ அந்தக் காப்பீட்டுத் திட்டம் மட்டுமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
உதாரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து மாதம் ஒரு தொகை செலுத்த வேண்டும். நாம் செலுத்திய பணத்துக்கு போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள். இதனால் இதைக் கூடாது என்பது சரியானது தான்.
ஆனால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் நாம் செலுத்தும் பணம் நமக்குத் திரும்பக் கிடைப்பதில்லை. நமக்கு நோய் வந்தால் நம் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வார்கள். நமக்கு நோய் வராவிட்டால் அந்த நிறுவனம் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளும். இதில் எந்தத் தவறும் இல்லை.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் பணம் செலுத்துவதற்குப் பதிலாக அரசு பணம் செலுத்துகிறது. அவ்வளவு தான் வித்தியாசம்.
அது எந்த அளவு நம்பகமாக இருக்கும்? என்பது பற்றி நாம் உறுதி அளிக்க முடியாது. ஆனால் மார்க்கத்தில் தடை செய்ய எந்தக் காரணமும் இதில் இல்லை.
முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் உள்ளன. முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை ஒரு வகை.
முஸ்லிமுக்கு மட்டும் தடுக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்கள் செய்தால் தடுக்காமல் விடப்படுபவை மற்றொரு வகை .
மது அருந்துவது முஸ்லிமுக்குத் தடை செய்யப்பட்டது போலவே இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் தடை செய்யப்பட்டதாகும்.
முஸ்லிமல்லாதவர் மது அருந்தினாலும், விற்பனை செய்தாலும் அது இஸ்லாமிய அரசில் தடுக்கப்படும்.
அதே நேரத்தில் பட்டாடை அணிவது முஸ்லிம் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிமல்லாத ஆண்களுக்கு இது தடை இல்லை. எனவே பட்டாடையை முஸ்லிமல்லாத ஆண்களுக்கு விற்பனை செய்யலாம்.
வட்டி, விபச்சாரம், மது, சூது, மோசடி, லஞ்சம், திருட்டு, கொலை, மற்றும் அனைவருக்கும் கேடு விளைவிப்பவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் இவற்றுக்குத் தடை தான்.
முஸ்லிமல்லாதவருக்காக மட்டும் ஒருவர் விபச்சார விடுதி நடத்துவது எவ்வாறு குற்றமோ அது போல் வட்டிக்கு விடுவதும், வட்டிக்கு வாங்குவதும் முஸ்லிமல்லாதவருக்கும் தடுக்கப்பட்டது தான்.
صحيح البخاري
886 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ المَسْجِدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ، فَلَبِسْتَهَا يَوْمَ الجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ» ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ، فَأَعْطَى عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، مِنْهَا حُلَّةً، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا» فَكَسَاهَا عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடுபோட்ட பட்டு அங்கி விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின்தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்ளலாமே! என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர் தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! உதாரித் அவர்கள் வழங்கிய கோடு போட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணை வைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள்.
நூல் : புகாரி 86
இந்த அடிப்படையில் தான் தமக்குக் கிடைத்த பட்டாடையை முஸ்லிமல்லாத தன் சகோதரருக்கு உமர் (ரலி) வழங்கினார்கள்.
முழுமையாகத் தடுக்கப்படாமல் ஓரளவு தடுக்கப்பட்டும் ஓரளவு அனுமதிக்கப்பட்டும் உள்ளவைகளை நாம் முஸ்லிமல்லாதவருக்கும் முஸ்லிமுக்கும் விற்கலாம்.
முழுமையாகத் தடுக்கப்பட்ட வட்டி போன்ற காரியங்களுக்கு முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் உதவக் கூடாது.
கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால் என்ன செய்வது?
பதில்:
ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும். இதில் மற்றுக் கருத்து யாருக்கும் இல்லை. ஆனால் நாம் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருந்தும் கொடுப்பதற்கான சூழ்நிலை இல்லாத போது என்ன செய்வது என்பதில் தான் உங்களுக்குக் குழப்பம் உள்ளது.
நெருக்கடியான நேரத்தில் நிர்பந்தமான நிலையில் சட்டங்கள் தளர்த்தப்படும் என்று இஸ்லாம் கூறுவதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்பந்தமான நிலையில் சட்டங்கள் தளர்த்தப்படும் என்பது இறைவன் தொடர்பான விஷயங்களைப் பற்றியதாகும். நிர்பந்தமான நிலையில் நாம் ஒரு கட்டளையை மீறி விட்டால் நிச்சயம் அல்லாஹ் மன்னிப்பான்.
ஆனால் மனிதனின் உரிமை தொடர்பான எந்த விஷயத்தையும் அல்லாஹ் மன்னிப்பதில்லை. சம்மந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லது அந்த மனிதனுக்கு நியாயம் வழங்காத வரை அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான்.
ஒரு காரியம் நிறைவேறினால் ஆயிரம் ரூபாய் தர்மம் செய்வேன் என்று நாம் நேர்ச்சை செய்தால் அதன் பின்னர் அதைச் செய்ய முடியாத அளவுக்கு வறுமை ஏற்பட்டு அதை நிறைவேற்ற முடியாவிட்டால் அல்லாஹ் அதை மன்னிப்பான்.
ஒருவரிடம் கடன் வாங்கி விட்டு அதைக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமை ஏற்பட்டால் அதுவும் நிர்பந்தம் தான்.
ஆனால் கடன் கொடுத்தவன் நாளை மறுமையில் நியாயம் கேட்கும் போது அவனிடம் வசதி இல்லாததால் அவன் தரவில்லை என்று அல்லாஹ் பதில் தர மாட்டான். அவ்வாறு பதிலளித்தால் அது பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கும் நீதியாக அமையாது.
நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவன் மறுமையில் நியாயம் கேட்கும் போது உங்களுடைய நல்லறங்கள் அதற்கு ஈடாக அவனுக்கு மாற்றப்படுவது தான் மறுமையில் அவனுக்கு வழங்கும் சரியான நீதியாகும்.
நாம் யாரிடம் கடன் வாங்கினோமோ அவர் சார்பில் அதைத் தர்மம் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். அவர் திருப்பப் பெறுவதற்காகத் தான் கடன் தந்தார். அதை நீங்கள் தர்மம் செய்வது அவருடைய உரிமையைப் பறிப்பதாக ஆகும்.
இந்த அத்தனை அடிப்படையையும் கவனத்தில் கொண்டு தான் இதற்கான தீர்வை நாம் காண வேண்டும்.
நாம் வாங்கிய கடனுக்காக நம்முடைய நன்மைகள பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கப்படும் என்பதை விளங்கி அதற்கேற்றவாறு உபரியான வணக்கங்களை அதிகப்படுத்திக் கொள்வதன் மூலமும் அவர் சார்பாக இல்லாமல் நம் சார்பில் அந்தத் தொகையை தர்மம் செய்வதன் மூலமும் இதை ஈடு செய்ய முடியும்.
அதனால் தான் கடமையான வணக்கங்கள் மட்டுமின்றி மேலதிகமான வணக்கங்களும் மார்க்கத்தில் ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளன.
இப்படி உபரியான வணக்கங்களை நாம் சேமித்து வைத்து இருந்தால் பாதிக்கப்பட்டவனுக்காக நம்முடைய நன்மைகள மாற்றப்பட்டாலும் நரகம் செல்லும் நிலை நமக்கு ஏற்படாது. நாம் உபரியாகச் செய்துள்ள வணக்கங்களில் சில அடுத்தவனுக்குப் போய் விட்டாலும் நம்முடைய கடமையான வணக்கங்கள் நமக்கு மிச்சமாகி விடும்.
எனவே அவருக்குக் கொடுக்க வேண்டிய கடனை அவர் சார்பாக நீங்கள் தர்மம் செய்ய முடியாது. காணாமல் போனவர் வந்து அந்தக் கடனைக் கேட்டால் தர்மம் செய்து விட்டேன் என்று பதில் சொல்ல முடியாது. கடன் கொடுத்தவர் வந்து கேட்டால் நான் திரும்பக் கொடுப்பேன் என்ற எண்ணத்துடன் உங்கள் சார்பில் தர்மம் செய்யலாம்.