என் ஜனாஸாவுக்கு என் மகன் வரக் கூடாது என்று ஒரு தந்தை கூறலாமா?
ஹபீபுர்ரஹ்மான், அம்பகரத்தூர்
பதில்
பொதுவாக எனது மரணத்திற்கு யாரும் வரக் கூடாது என்று சொல்வது உறவுகளைப் பிரித்தல் என்பதில் அடங்கும்.
மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலை என்றாலும் ஒருவரால் மற்றவர் பாதிக்கப்பட்டு இருக்கும் போது அதற்கு ஏற்ற முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
தன் பக்கம் நியாயம் இருந்து ஒருவர் இன்னொருவரால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் மார்க்கம் அனுமதிக்காக இது போன்ற சொற்களைக் கூறுவது குற்றமாகாது.
அல்லாஹ் கூறுகிறான்
148.அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர் ஆன் 6:148
பாதிக்கப்பட்டவர் அநீதி இழைக்கப்பட்டவராக இருந்தால் அவர் இது போல் கூறுவதற்கு அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான்.
ஆனால் மன்னித்து விடுவது சிறந்தது.
22. "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 24:22
126. நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.
திருக்குர்ஆன் 16:126
என் ஜனாஸாவுக்கு என் மகன் வரக் கூடாது என்று ஒரு தந்தை கூறலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode