307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை
இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன.
தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச் செவியுறுவோராக இருந்தனர். இறைவன் அதைத் தடுக்காமல் இருந்தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு இவ்வாறு ஒட்டுக் கேட்பதை விட்டும், வானுலக இரகசியத்தைச் செவியேற்பதை விட்டும் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வானுலகின் எந்த இரகசியத்தையும் ஷைத்தான்கள் அறிய முடியாது என்பதை இவ்வசனங்கள் தெரிவிக்கின்றன.
வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode