Sidebar

19
Fri, Apr
4 New Articles

 விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள்

தொழுகை சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

 விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள்

தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம்.

இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணங்களைக் கூறி இந்த நபிவழியை அவர்கள் மறுத்து வந்தனர்.

இது கருத்தில் கொள்ளத் தகுதியில்லாத வாதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த வாதம் மக்களிடம் எடுபடாமல் போன பின், விரல் அசைத்தல் தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று கூறி புதுப்புது காரணங்களைக் கூறலானார்கள். அதற்கேற்ப சில ஆதாரங்களையும் முன் வைத்தனர்.

இது பரிசீலிப்பதற்குத் தகுதியுடைய வாதம் என்பதால் இவ்வாறு கூறுவோரின் அனைத்து வாதங்களையும் திரட்டி மறு ஆய்வு செய்தோம்.

அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் மறு ஆய்வு செய்தோம்.

ஆனால் இந்த நபிவழியைப் பலவீனப்படுத்துவதற்குக் கூறப்படும் வாதங்கள் தான் பலவீனமானவையாக உள்ளன என்பது நமது மறு ஆய்விலும் நிரூபணமானது.

எனவே அதுபற்றி முழு விபரத்தைக் காண்போம்.

879أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன் அப்போது அவர்கள், எழுந்து நின்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் ருகூஉ செய்ய விரும்பிய போது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை  உயர்த்தினார்கள்.  (பின்னர்) தம் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைத்தார்கள். பின்னர் தமது தலையை (ருகூஉவிலிருந்து நிமிர்த்திய போது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் சஜ்தா செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும், கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

நூல் : நஸாயீ 870

விரல் அசைத்தல் தொடர்பான இந்தச் செய்தி

أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد فلما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها  ; سنن النسائي 879

أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فوصف قال ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها مختصر  ; سنن النسائي 879

حدثنا عبد الصمد حدثنا زائدة حدثنا عاصم بن كليب أخبرني أبي أن وائل بن حجر الحضرمي أخبره قال قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي قال فنظرت إليه قام فكبر ورفع يديه حتى حاذتا أذنيه ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد ثم قال لما أراد أن يركع رفع يديه مثلها ووضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد فافترش رجله اليسرى فوضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض بين أصابعه فحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت الناس عليهم الثياب تحرك أيديهم من تحت الثياب من البرد  ; مسند أحمد 18115

حدثنا معاوية بن عمرو حدثنا زائدة بن قدامة حدثنا عاصم بن كليب أخبرني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر فرفع يديه حتى حاذتا بأذنيه ووضع يده اليمنى على ظهر كفه اليسرى قال ثم لما أراد أن يركع رفع يديه مثلها ووضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد فافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض ثنتين فحلق حلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها قال ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت على الناس جل الثياب يحركون أيديهم من تحت الثياب  ; سنن الدارمي 1323

208 حدثنا إسحاق بن منصور قال ثنا عبد الرحمن يعني بن مهدي عن زائدة بن قدامة عن عاصم بن كليب قال أخبرني أبي أن وائل بن حجر رضي الله عنه قال ثم قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه قام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع كفه اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد ثم ركع فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء اليسرى ثم جلس فافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى ووضع حد مرفقه اليمنى على فخذه اليمنى ثم قبض ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو ثم جئت بعد ذلك في زمن فيه برد فرأيت الناس وعليهم جل الثياب تحرك أيديهم من تحت الثياب -المنتقى لابن الجارود ج: 1 ص: 62

 714 أنا أبو طاهر نا أبو بكر نا محمد بن يحيى نا معاوية بن عمرو حدثنا زائدة نا عاصم بن كليب الجرمي أخبرني أبي أن وائل بن حجر أخبره قال ثم قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي قال فنظرت إليه يصلي فكبر فذكر بعض الحديث وقال ثم قعد فافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها قال أبو بكر ليس في شيء من الأخبار يحركها إلا في هذا الخبر زائد ذكره - صحيح ابن خزيمة ج: 1 ص: 354

1860 أخبرنا الفضل بن الحباب قال حدثنا أبو الوليد الطيالسي قال حدثنا زائدة بن قدامة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر الحضرمي أخبره قال ثم قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه حين قام فكبر ورفع يديه حتى حاذتا اليسرى ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد ثم لما أراد رفع يديه مثلها ثم ركع فوضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء اذنيه ثم جلس فافترش فخذه اليسرى وجعل يده اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى وعقد ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت الناس عليهم جل الثياب تتحرك أيديهم تحت الثياب - صحيح ابن حبان ج: 5 ص: 170

 82 حدثنا محمد بن النضر الأزدي ثنا معاوية بن عمرو ح وحدثنا أبو خليفة ثنا أبو الوليد الطيالسي قالا ثنا زائدة عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال ثم قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى بين الرسغ والساعد ثم لما أراد رفع يديه مثلها ووضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه حذاء اليسرى ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع أصبعه ورأيته يحركها يدعو بها ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت الناس عليهم جل الثياب يحرك أيديهم من تحت الثياب واللفظ لحديث معاوية بن عمرو - المعجم الكبير ج: 22 ص: 35

 963 أخبرنا سويد بن نصر قال أنا عبد الله بن المبارك عن زائدة قال نا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد ثم لما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها النهي عن التخصر في الصلاة - السنن الكبرى ج: 1 ص: 310

1191 أخبرنا سويد بن نصر قال أنا عبد الله يعني بن المبارك عن زائدة قال نا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فوصف قال ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق خلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها مختصر بسط اليسرى على الركبة - السنن الكبرى ج: 1 ص: 376

 889 أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد فلما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها - سنن النسائي (المجتبى) ج: 2 ص: 126

1268 أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فوصف قال ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقه ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها سنن النسائي (المجتبى) ج: 3 ص: 37

தாரமீ

அஹ்மத்

ஸஹீஹ் இப்னு ஹுஸைமா

ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

தப்ரானீ கபீர்

பைஹகீ

ஸுனனுல் குப்ரா

அல்முன்தகா இப்னுல் ஜாரூத்

ஆகிய நூற்களிலும் இடம்பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. இதை வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார்.

இந்த  நபித்தோழர்  ஹள்ர மவ்த்  என்ற  ஊரைச்  சேர்ந்தவர்.  நபிகள்  நாயகம்  (ஸல்)  அவர்கள் எவ்வாறு தொழுவார்கள் என்பதைக் கவனித்து  அறிவதற்காகவே அவர் மதீனா வந்தார். நபிகள்  நாயகம்  (ஸல்) அவர்கள்  தொழும் முறையை அறிந்து கொள்ள வேண்டும்  என்ற  நோக்கத்தில் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு  செயலையும் நன்கு கவனித்து அறிவித்துள்ளார்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இந்த நபித்தோழரின் கூற்று தெளிவானதும் உறுதியானதுமாகும்.

இதே ஹதீஸ் தாரமியிலும் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியில் இருப்பில் விரலசைப்பதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي

…….. இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : தாரமீ (1323)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொழுகையில் விரலசைத்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் குறித்து முதலில் ஆய்வு செய்வோம்.

வாயில் பின் ஹுஜ்ர் அவர்கள் நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி ஆய்வுக்கு அவசியம் இல்லை. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹதீஸ் கலை விதியாகும்.

அடுத்த அறிவிப்பாளர் குலைப் ஆவார். இவரைப் பற்றிய விமர்சனத்தைப் பார்ப்போம்

குலைப் பின் ஷிஹாப் பற்றிய விமர்சனம்

வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் கூறியதாக அறிவிப்பவர் குலைப் என்பவர் ஆவார். இவரது தந்தை ஷிஹாப் ஆவார்.

குலைப் என்பாரும் நபித்தோழர் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயினும் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையில் மூத்தவர்களில் ஒருவர் என்பதே சரியான கருத்தாகும்.

இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இவரைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தான் இவரைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இவர் நம்பகமானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் சமீப காலத்தில் இவரைப் பற்றியும் சிலர் விமர்சனம் செய்துள்ளதால் அதையும் நமது மறு ஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.

இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஜகாத் ஆய்வுக் கட்டுரையில் ஹதீஸ் கலை குறித்து நாம் எழுதிய வாதத்தை எடுத்து வைத்து இந்த அறிவிப்பாளர் பற்றியும் குறை காண்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று காரண காரியத்துடன் ஜகாத் ஆய்வுக் கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:

அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.

இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும், நம்பகமானவர்கள் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் நம்பகமானவர்கள் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.

எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.

இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று கூறுவார். இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்பதே இதன் பொருளாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை

இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

இதற்கு மறுப்பு எழுதப் புகுந்த அல்ஜன்னத் என்ற மாத இதழில், விரலசைத்தல் பற்றிய ஹதீஸில் இடம் பெறும் குலைப் என்பார் பற்றியும் இப்னு ஹிப்பான், தஹபீ ஆகியோர் மட்டும் தானே நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்; அதைச் சரியென ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே தரத்தில் அமைந்த அம்ரு பின் ஹாரிஸ் மட்டும் யாரெனத் தெரியாதவர் என்று விமர்சிப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

குலைப் என்பார் பற்றி இப்னு ஹிப்பான், தஹபி ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியிருந்தால் யாரென்று தெரியாதவர் என்ற முடிவைத் தான் இவர் விஷயத்திலும் நாம் எடுப்போம். ஆனால் குலைப் என்பாரைப் பற்றி வேறு பல அறிஞர்களும் நற்சான்று அளித்துள்ளதால் அவரது நம்பகத் தன்மை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

معرفة الثقات - العجلي - باب كليب وكميل وكنانة وكوبة كليب بن شهاب والد عاصم تابعي ثقة

ஆஸிமின் தந்தையும், ஷிஹாபின் மகனுமாகிய குலைப் என்பார் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்; நம்பகமானவர்.

நூல்: மஃரிபதுஸ் ஸிகாத் 2/228

الإصابة في تمييز الصحابة - ابن حجر - كليب بن شهاب الجرمي والد عاصم قال أبو عمر له ولأبيه صحبة روى حديثه قطبة بن العلاء بن منهال عن أبيه عاصم بن كليب عن أبيه انه خرج مع أبيه الى جنازة شهدها رسول الله صلى الله عليه و سلم الحديث وأخرجه بن أبي خيثمة والبغوي وابن قانع عنه وابن السكن وابن شاهين والطبراني من طريق قطبة وفو غلط نشأ عن سقط وذلك ان زائدة روى هذا الحديث عن عاصم بن كليب فقال عن أبيه عن رجل من الأنصار قال خرجت مع أبي فذكر الحديث وجزم أبو حاتم الرازي والبخاري وغير واحد بان كليبا تابعي وكذا ذكره أبو زرعة وابن سعد وابن حبان في ثقات التابعين وروى عن كليب أيضا إبراهيم بن مهاجر وذكره أبو داود فقال كان من أفضل أهل الكوفة

அபூஸூர்ஆ, இப்னு ஸஅத்,  இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரைப் பற்றி நம்பகமான தாபியீ என்று கூறியுள்ளனர். இவர் கூஃபா நகரவாசிகளில் மிகச் சிறந்தவர் என்று அபூதாவூத் கூறியுள்ளார்.

நூல்: அல் இஸாபா, பாகம்: 5, பக்கம்: 668

الطبقات الكبرى - ابن سعد -كليب بن شهاب الجرمي من بني قضاعة وهو أبو عاصم بن كليب روى عن عمر وعلي وكان ثقة كثير الحديث قال بن سعد رأيتهم يستحسنون حديثه ويحتجون به

இவர் நம்பகமானவராக இருந்தார். அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரது ஹதீஸ்களை அழகியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவரது அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

நூல்: தபகாத் இப்னு ஸஅத்

குலைப் என்பார் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லை என்பதாலும்,  அவரது நம்பகத் தன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாலும் இவரைக் காரணம் காட்டி விரலசைத்தல் பற்றிய ஹதீஸைப் பலவீனமாக்குவது முற்றிலும் தவறாகும்.

குலைப் என்பாரிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் அவரது மகன் ஆஸிம் ஆவார். இவர் பலவீனமானவர் என்று காரணம் கூறி இந்த ஹதீஸை சிலர் பலவீனமாக்குகின்றனர்.

1 ஆஸிம் பின் குலைப் பலவீனமானவரா?

விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள் இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விமர்சனம் செய்துள்ளார்கள். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று கூறுகின்றனர்.

ஆஸிம் பின் குலைப் பல அறிஞர்களால் நம்பகமானவர் என்று நற்சான்று அளிக்கப்பட்டவர். இவர் நம்பகமானவர் என்று   அஹ்மது,   நஸாயீ,   அபூ ஹாதிம்,   அஹ்மது பின் ஸாலிஹ்,   இப்னு சஅத்,   யஹ்யா பின் மயீன், இப்னு ஷிஹாப், இப்னு ஷாஹீன்,   இஜ்லீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.

அலீ பின் மதீனீ மட்டுமே இவரைக் குறை கூறியுள்ளார்.

ஒரு அறிவிப்பாளரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பாக ஒருவரைப் பற்றி நல்லவர், சிறந்தவர், நம்பகமானவர் என்று பலர் கூறியிருக்கும் போது குறை சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின் விமர்சனம் நிராகரிக்கப்படும். இதுவும் ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ள விதியாகும்.

இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ அவர்களைத் தவிர அனைவரும் பாராட்டியுள்ளனர், நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் அவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று காரணம் ஏதும் இல்லாமல் கூறியுள்ளார். ஆஸிம் பலவீனமானவர் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்தக் காரணத்தையும் இப்னுல் மதீனீ தெளிவுபடுத்தவில்லை.

மேலும் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளரை விமர்சனம் செய்வதில் கடினப் போக்குள்ளவர். நம்பகமானவர்களைப் பலவீனமானவர்கள் என்று தவறுதலாகக் கூறக்கூடியவர். இதை   இப்னு அபீ ஹாதிம் அவர்கள் அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

الجرح والتعديل لابن أبي حاتم - يكتب حديثه (سئل أبو زرعة عن فضيل بن سليمان فقال لين الحديث روى عنه علي بن المديني وكان من المتشددين

அலீ பின் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்வதில் கடினப் போக்குள்ளவராக இருந்தார் என அபூ ஸுர்ஆ தெரிவித்தார்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்

ஆஸிம் பின் குலைபைப் பற்றி மற்ற அறிஞர்கள் அனைவரும் நல்லவிதமாகக் கூறியிருக்கும் போது   இப்னுல் மதீனீ மட்டும் காரணம் கூறாமல் விமர்சனம் செய்துள்ளதால்  இப்னுல் மதீனீ அறிவிப்பாளர் ஆஸிம்வி ஷயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்பதால் இவரிடமிருந்து நான்கு ஹதீஸ்களை முஸ்லிம் அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். எனவே முஸ்லிம் அவர்களின் பார்வையிலும் ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் ஆவார்.

ஆஸிம் பின் குலைப் பற்றி விமர்சிக்கும் நூல்களில் அவரைப் பற்றிக் கூறும் போது, இவர் முர்ஜியாக் கொள்கையுடையவராக இருந்தார் என்று கூறப்படுகின்றது.

இதைக் காரணம் காட்டி இவர் பலவீனமானவர் என்று சிலர் கூறுகின்றனர்.

ஒரு முஃமின் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அவர் நரகம் செல்ல மாட்டார் என்பது முர்ஜியா கொள்கையாகும்.

இந்தக் கொள்கை தவறானது என்பதில் சந்தேகமில்லை. பாவம் செய்தவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் செய்யலாம்; தண்டிக்கவும் செய்யலாம் என்பதே சரியான கொள்கையாகும்.

ஹதீஸ் கலையை ஆய்வு செய்து பார்த்தால், ஒருவர் இது போன்ற தவறான கொள்கையுடையவராக இருப்பதால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் பலவீனமடைவதில்லை. தெளிவான இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்ட கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. முர்ஜியா கொள்கை என்பது தெளிவான இறைமறுப்பு என்று சொல்ல முடியாது.

தவறான கொள்கையுடையவர்கள் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் பொய் சொல்ல அஞ்சுவதைக் காண்கிறோம். எனவே தான் நாணயம், நேர்மை, நினைவாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை எடை போட வேண்டுமே தவிர அவர் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அவரது நாணயத்தை எடை போடக் கூடாது. எனவே ஹதீஸ் கலையில் இந்தக் கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படுவதில்லை.

புகாரியில் முர்ஜியாக்கள்

முர்ஜியாக்கள் என்று கண்டறியப்பட்ட ஏராளமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இதுவே காரணம்.

அய்யூப் பின் ஆயித் - இவர் முர்ஜியா கொள்கையுடையவர்.

இவர் அறிவித்த ஹதீஸ் புகாரி4346ல் பதிவாகியுள்ளது.

பிஷ்ர் பின் முஹம்மத் அஸ்ஸக்தியானி - இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்.

புகாரியில் 6, 839, 1206, 1242, 1418, 2141, 2548, 2571, 2830, 3796, 3330, 3454, 3485, 4463, 5646,5714, 5987, 6064, 6609, 6618 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்கள் இவர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

தர் பின் அப்துல்லாஹ் - இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 338, 339, 340, 342, 343, 3218, 4731, 7455 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உமர் பின் தர் - இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில்3218, 4731, 6246, 6452, 7455 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அம்ரு பின் முர்ரா - இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 717, 775, 1104, 1176, 1313, 1394, 1596, 3411, 3434, 3488, 3526, 3758, 3769, 3788, 3808, 4146, 4637, 4728, 4770, 4801, 4971, 4972, 4973, 5418, 5934, 5938, 6171, 6359, 7277 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைஸ் பின் முஸ்லிம் அல்ஜதலீ - இவரும் முர்ஜியா கொள்கையுடையவர்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 45, 1559, 1565, 1724, 1795, 2005, 3942, 4346, 4407, 7221, 7268 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முஹம்மத் பின் ஹாசிம் - இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 218, 4520, 4801 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மிஸ்அர் பின் கதாம் - இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில்201, 443, 769, 820, 1130, 1746, 2230, 2394, 2528, 2603, 3419, 3859, 4058, 4797, 5398, 5615, 5826, 6455, 6471, 6664, 7114, 7126, 7268, 7546 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முர்ஜியா கொள்கையுடையவர் என்ற காரணத்திற்காக எந்த அறிவிப்பாளரும் பலவீனராக ஆக மாட்டார் என்பதை விளக்குவதற்காக இந்த விபரங்களைத் தருகிறோம்.

ஆஸிம் பின் குலைப், முர்ஜியா கொள்கையுடையவர் என்ற காரணத்திற்காக பலவீனமானவர் என்ற வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் முர்ஜியா கொள்கையுடைய அனைவரையும் அவ்வாறு கூற வேண்டும். புகாரியில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட ஹதீஸ்களையும் வேறு நூற்களில் இவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று அறிவிக்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு விமர்சிப்பதில்லை. மாறாக மேற்கண்ட ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றே கூறுகின்றனர். எனவே ஆஸிம் பற்றிய இவர்களது விமர்சனம் ஏற்புடையது அல்ல என்பதில் சந்தேகமில்லை.

ஆஸிம் பற்றி மற்றொரு விமர்சனம்

தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு ஹதீஸில் மட்டும் பின்வருமாறு உள்ளது.

حدثنا هناد حدثنا وكيع عن سفيان عن عاصم بن كليب عن عبد الرحمن بن الأسود عن علقمة قال قال عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة قال وفي الباب عن البراء بن عازب قال أبو عيسى حديث ابن مسعود حديث حسن وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان الثوري وأهل الكوفة

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டட்டுமா? என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். அப்போது ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நூல்: திர்மிதி 238

ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை ஆஸிம் பின் குலைப் தான் அறிவிக்கிறார்.

அதன் காரணமாக இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறும் நீங்கள் விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸை மட்டும் ஏற்பது ஏன்? என்று மத்ஹப் உலமாக்கள் நம்மிடம் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.

தொழுகையில் ஒரு தடவை தான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப் போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால் ஆஸிம் பின் குலைப் அறிவிக்கிறார் என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவின் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு ஏராளமான வழிகளில் அறிவிக்கப்படுவதற்கு முரணாக ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற, ஒரே ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் அமைந்துள்ளது.

அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.

அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்பதற்கு ஆஸிம் பின் குலைபை நாம் காரணமாகக் காட்டவில்லை.

எனவே இந்த வாதமும் தவறான அடிப்படையின் மேல் எழுப்பப்பட்ட வாதமாகும்.

ஸாயிதா பற்றிய விமர்சனம்

ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆயினும் இவரைத் தொடர்புபடுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.

ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர்முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் அவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் - அரிதானது - எனக் கூறப்படும்.

ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.

விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.

அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.

வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.

குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.

ஆஸிம் கூறியதாக

ஸூஃப்யான்

காலித் பின் அப்துல்லாஹ்

இப்னு இத்ரீஸ்

ஸாயிதா

ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.

இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.

காலித் பின் அப்துல்லாஹ், ஸூஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது இஷாரா (சைகை) செய்தார்கள் என்றே கூறுகிறார்கள்.

இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது விரலை உயர்த்தினார்கள் என்று கூறுகிறார்.

ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.

ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.

ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.

ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர் முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும்.

ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.

முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.

15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.

இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.

ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும்.

இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.

15.3.09 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.

ஒருவர் மட்டும் 15.3.09 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன் 65 சாப்பிட்டார் என்று கூறுகிறார்.

இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.

கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன் 65 சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.

மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!

மூஸா இறந்து விட்டார் என்பதும், கடலில் மூழ்கி இறந்தார் என்பதும் முரண் அல்ல!

இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்பது தெளிவாகும்.

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது விரலை உயர்த்தினார்கள் என்று மட்டும் கூறுகிறார்.

ஸாயிதா கூறும் போது விரலை உயர்த்தி அசைத்தார்கள் என்று கூறுகிறார்.

அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

இது போல் ஸூஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது இஷாரா செய்தார்கள் என்று அறிவிக்கின்றனர்.

ஸாயிதா கூறும் போது அசைத்தார்கள் என்கிறார்.

இவ்விரண்டும் முரண் அல்ல!

இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.

அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது.

அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.

ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.

சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.

எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவில்லை.

ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.

மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.

மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.

இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.

  باب إشارة الخاطب بالسبابة على المنبر عند الدعاء في الخطبة وتحريكه إياها عند الإشارة بها أنا أبو طاهر نا أبو بكر نا بشر بن معاذ العقدي نا بشر بن المفضل نا عبد الرحمن بن إسحاق عن عبد الرحمن بن معاوية عن بن أبي ذباب عن سهل بن سعد قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم شاهرا يديه قط يدعو على منبره ولا على غيره ولكن رأيته يقول هكذا وأشار بأصبعه السبابة يحركها قال أبو بكر عبد الرحمن بن معاوية هذا أبو الحويرث مدني - صحيح ابن خزيمة ج: 2 ص: 351

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரிலோ, மற்ற இடங்களிலோ கைகளை உயர்த்தி துஆ செய்ததை நான் கண்டதில்லை. மாறாக தமது ஆட்காட்டி விரலால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று ஸஹ்ல் பின் சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் இப்னு குஸைமா

இந்த ஹதீஸ் அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது பற்றிக் கூறும் ஹதீஸ் அல்ல. இஷாரா என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

ஆட்காட்டி விரலை இஷாரா செய்து அசைப்பார்கள் என்று இதில் கூறப்படுகிறது. இஷாரா என்பதும் அசைத்தல் என்பதும் நேர் முரண் என்றால் இவ்வாறு கூற முடியாது.

எனவே ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்பதும், இஷாரா செய்தார்கள் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

செத்து சாகவில்லை என்று கூற முடியாது. சாப்பிட்டு சாப்பிடவில்லை என்று கூற முடியாது. ஆனால் அசைத்து இஷாரா செய்தார்கள் என்று கூற முடியும்.

எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.

ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை?

مقدمة فتح البارى -

وأما المخالفة وينشأ عنها الشذوذ والنكارة فإذا روى الضابط والصدوق شيئا فرواه من هو أحفظ منه أو أكثر عددا بخلاف ما روى بحيث يتعذر الجمع على قواعد المحدثين فهذا شاذ وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا

முரணாக அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.

ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர்

எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று   நவவீ அவர்கள் நற்சான்று அளித்துள்ளார்கள்.

خلاصة الأحكام  1391 - وَعَن وَائِل: أَنه وصف صَلَاة رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد قَالَ: ثمَّ رفع أُصْبُعه، فرأيته يحركها يَدْعُو بهَا رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد صَحِيح.

நூல் : குலாசத்துல் அஹ்காம்

இப்னுல் முலக்கீன் அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று நற்சான்று அளித்துள்ளார்.

البدر المنير

عَن وَائِل بن حجر رَضِيَ اللَّهُ عَنْه أَنه وصف صَلَاة رَسُول الله - صَلَّى الله عَلَيْهِ وَسلم - وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد، قَالَ: ثمَّ رفع أُصْبُعه فرأيته يحركها يَدْعُو بهَا . هَذَا الحَدِيث صَحِيح رَوَاهُ الْبَيْهَقِيّ فِي سنَنه بِهَذَا اللَّفْظ بِإِسْنَاد صَحِيح،

நூல் : அல்பத்ருல் முனீர்

பைஹகீ அவர்களின் வாதம் சரியா?

விரலசைத்தல் பற்றிய ஹதீஸுக்கு பைஹகீ அவர்கள் அளித்துள்ள விளக்கத்தையும் எதிர்க் கருத்துள்ளவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

ஹதீஸில் கூறப்படும் அசைத்தல் என்பதன் கருத்து இஷாரா செய்வது தான். தொடர்ந்து அசைத்துக் கொண்டிருப்பது அல்ல என   பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸிற்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.

அசைத்துக் கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் முன்னரே நிரூபித்துள்ளோம். பைஹகி அவர்களின் விளக்கம் தவறானது என்பதை அதிலிருந்தே அறியலாம்.

அசைத்தார்கள் என்றால் விரலை உயர்த்தினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் விரலை உயர்த்தும்போது விரல் அசையும் நிலை ஏற்படும். குறிப்பாக ஹனஃபீ மத்ஹபின் கருத்துப்படி விரலை உயர்த்தி கீழே விட்டு விட வேண்டும். இப்போது விரலாட்டுதல் தெளிவாக நடக்கின்றது. இந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்றும் வாதிடுகின்றனர்.

இவர்கள் கூறுவது போன்று ஹதீஸில் அசைத்தார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை. மாறாக அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.

யுஹர்ரிகுஹா என்ற அரபுச் சொல்லுக்கு அரபு மொழிப்படி அசைத்தார்கள் என்று பொருள் செய்வது தவறாகும். யுஹர்ரிகு என்ற இந்தச் சொல் வருங்கால விணைச் சொல் என்பதால் அசைத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

இதன் நேரடிப் பொருள் அசைப்பார்கள் என்பது தான். இனி அசைப்பதைப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது. நடந்த விஷயத்தைப் பற்றி கூறுவதால்   அசைத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

எனவே அசைத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

இந்தச் செய்தி நடந்து முடிந்த சம்பவத்தைப் பற்றி பேசுவதால் அசைப்பார்கள் என்ற வருங்கால அர்த்தத்தை இங்கே கொடுக்க முடியாது. அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இன்னொரு அர்தத்தை மட்டுமே இங்கே கொடுக்க முடியும்.

எனவே இதற்கு விரலை நீட்டினார்கள் என்றும், நீட்டிவிட்டு மடக்கினார்கள் என்றும் பொருள் செய்வது தவறாகும்.

விரலை நீட்டும் போது ஏற்படும் நடுக்கத்தைத் தான் அசைத்தார்கள் என்று அந்த ஹதீஸ் கூறுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர்.

நடுக்கம் என்பது நமது விருப்பம் இல்லாமல் உடலில் ஏற்படக்கூடியது. ஆனால் இந்தச் செய்தியில் கூறப்படும் விரலசைத்தல் என்பது தொழுபவர் தேர்வு செய்து செய்யும் காரியமாகக் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விரல் நடுங்கியது என்று கூறப்படாமல் நபியவர்கள் அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுவதால் இது நபியவர்கள் விரும்பிச் செய்த தொழுகையின் காரியங்களில் ஒன்று என்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

விரலை அசைக்க வேண்டுமா? அல்லது கைகளையா?

குளிர் காலத்தில் போர்வைக்குள் கைகள் அசைந்து கொண்டு இருந்ததாக கூறும் ஹதீஸுக்கும் குதர்க்கமான விளக்கம் கொடுக்கின்றனர்.

18115حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது விரலை உயர்த்தினார்கள். பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதன் பிறகு குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். குளிரின் காரணத்தால் அவர்கள் போர்த்தியிருந்த ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : அஹ்மது

நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தன என்று இந்த அறிவிப்பில் உள்ளது. எனவே விரலசைப்பதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாக்க் காட்டுபவர்கள் விரலை அசைக்காமல் இந்த செய்தியில் உள்ளவாறு கைகளை அசைக்க வேண்டும் என்று குதர்க்கம் செய்கின்றார்கள்.

இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் கூறப்பட்டு அதை நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாகக் காட்டினால் இவர்களின் கேள்வி நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தன என்ற தகவல் மட்டும் இடம் பெறவில்லை. இதற்கு முன்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற தகவலும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஒரு காலத்தில் நான் மதீனா வந்த போதும் இது போல் நபித்தோழர்கள் நடந்தனர் என்று வாயில் பின் ஹுஜ்ர் கூறுகிறார்.

அறிவிப்பவர் எந்தக் கருத்தில் இதைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியும் போது அவர் சொல்லாத கருத்தை அவரது வாசகத்துக்குக் கொடுப்பது அநீதியாகும்.

இவ்வாறு பேசக்கூடிய வழக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ளது. உதாரணமாக ஏதாவது ஒரு விரலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்தால் விரலில் என்ன காயம்? என்றும் கேட்போம். கையில் என்ன காயம்? என்றும் கேட்போம்.

குளிரின் காரணத்தால் கைகள் அசைந்ததா?

நபித்தோழர்கள் யாரும் விரும்பி விரலசைக்கவில்லை. குளிரின் காரணத்தால் தான் அவர்களுடைய கைகள் அசைந்தன. எனவே எல்லா நேரங்களிலும் விரலசைப்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக முடியாது என்றும் வாதிடுகின்றனர்.

குளிரின் காரணத்தால் தான் நபித்தோழர்களின் கைகள் அசைந்தன என்ற வாதம் தவறான வாதம். நபிமொழியை திரித்துக் கூறும் செயலாகும்.

தொழுது கொண்டிருந்த நபித்தோழர்கள் குளிரின் காரணத்தால் ஆடையைப் போர்த்தி இருந்தார்கள் என்று தான் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. கைகள் அசைந்ததற்கு குளிர் தான் காரணம் என்று சொல்லப்படவில்லை.

குளிர் வந்தால் கைகள் மட்டும் அசையாது. ஒட்டுமொத்த உடம்பும் அசையும். ஆனால் இந்த ஹதீஸில் கைகள் மட்டும் அசைந்தன எனக் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே குளிர் காரணமாக நடுங்கியதை இது குறிப்பிடவில்லை என்பதை அறியலாம்.

மேலும் தாரமியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் நபித்தோழர்கள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي

இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : தாரமீ

இந்த அறிவிப்பில் அசைந்தன என்று கூறப்படாமல் அசைத்துக் கொண்டு இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.

இருப்பில் விரலை அசைக்கும் விதம்

விரலை எவ்வாறு அசைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு கியாமத் நாள் வரை பதில் சொல்ல முடியாது என்று சவால் விடுகின்றனர்.

  1. விரலசைத்தல் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும்.
  2. விரலை நீட்டி வைத்துக் கொண்டு அசைக்க வேண்டுமா? அல்லது குறுக்கி வைத்துக் கொண்டு அசைக்க வேண்டுமா?
  3. விரலை மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
  4. முன்னாலும் பின்னாலுமாக ஆட்ட வேண்டுமா?
  5. தொடர்ந்தா அல்லது விட்டுவிட்டா?
  6. வேகமாகவா அல்லது மெதுவாகவா?
  7. வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?

இது போன்ற கேள்விகள் இவர்கள் வைத்த வாதத்திலும் எழும்.

விரலை அசைக்காமல் நீட்டி வைக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

  1. விரலை நீட்ட வேண்டும் என்றால் எந்தத் திசையை நோக்கி நீட்ட வேண்டும்?
  2. வலது பக்கமாக நீட்ட வேண்டுமா?
  3. இடது பக்கமாக நீட்ட வேண்டுமா?
  4. விரலை வானத்தை நோக்கி மேலே இருக்கும் வண்ணம் நீட்ட வேண்டுமா?
  5. தரையை நோக்கி இருக்குமாறு கீழே நீட்ட வேண்டுமா?
  6. அல்லது இரண்டுக்கும் மத்தியில் சீராக நீட்ட வேண்டுமா?

இது போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் நபிமொழியை உதாசீனப்படுத்தி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள். ஒரு நல்ல ஆய்வாளரிடத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் வர முடியாது.

எந்த்த் திசையை நோக்கி விரலசைக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அந்த இஷாராவின் விளக்கம் தான் அசைத்தல் எனவும் கூறுகிறோம்.

இந்த ஹதீஸில் விரல் கிப்லாவின் திசையை நோக்கி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

1148أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لَا تُحَرِّكْ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنْ الشَّيْطَانِ وَلَكِنْ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ رواه النسائي

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலக்கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள (சுட்டு) விரலால் கிப்லா பக்கம் சைகை செய்தார்கள். தமது பார்வையை அதை நோக்கி அல்லது அதன் பக்கம் செலுத்தினார்கள் என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தேன் என்றும் கூறினார்கள்.

நூல் : நஸாயீ

விரல் கிப்லாவை முன்னோக்கி இருக்க வேண்டும் என்றால் வலது பக்கமாகவோ, இடது பக்கமாகவோ அசைக்கக் கூடாது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

விரலசைத்தல் மேலும் கீழுமாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

விரலை முன்னாலும் பின்னாலும் ஆட்ட வேண்டுமா? என்ற கேள்வி முட்டாள்தனமாது. வலது கையை வலது தொடையின் மீது வைத்திருக்கும் போது விரல் மட்டும் முன்னாலும் பின்னாலும் செல்ல முடியுமா? என்பதை இந்த உணர வேண்டும்.

விரலை நீட்டி வைத்துக் கொண்டா? குறுக்கி வைத்துக் கொண்டா?

விரலசைப்பதற்கு நாம் ஆதாரமாகக் காட்டும் வாயில் பின் ஹுஜ்ர் அவர்களுடைய ஹதீஸில் விரலை நீட்டி அசைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

நஸாயீ (870)

தொடர்ந்தா? விட்டுவிட்டா?

அத்தஹிய்யாத்து இருப்பில் அந்த அமர்வு முடியும் வரை தொடர்ந்து விரலை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும். விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம்.

பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

நஸாயீ (870)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனவே தொடர்ந்து விரலசைக்க வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரம்.

14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் தமது வலக்கையை தொடையின் மீது வைத்து தம் விரலால் இஷாரா செய்து கொண்டிருப்பார்கள்.

நூல் : அஹ்மது 14828

எனவே இருப்பு முழுவதிலும் தொடர்ந்து விரலசைப்பதற்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைந்துள்ளது.

மேலும் இந்தச் செய்தி தொழுகையில் உள்ள மற்ற பலநிலைகளைப் பற்றிப் பேசுகின்றது. ஒவ்வொரு நிலையைப் பற்றியும் எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அது போல் தான் விரலசைத்தலையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலையில் நிற்கும் போது வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.

விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் நிலையில் வலது கையை இடது கையின் மீது வைத்து விட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவில் இருக்கும் போது கைகளை முட்டுக்கால்களின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்கால்களின் மீது வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.

விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் ருகூவில் முட்டியின் மீது கையை வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே தொங்கவிட்டு விட வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் தம் உள்ளங்கைகளை காதுகளுக்கு நேராகவைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் இவர்கள் சஜ்தாவில் காதுகளுக்கு நேராக கைகளை வைத்துவிட்டு சஜ்தாவில் இருக்கும் போதே கைளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் தமது வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் தொடையின் மீது கையை வைத்து விட்டு அந்ந நிலையில் இருக்கும் போதே கைகளை கீழேவிட்டு விட வேண்டும்.

ஆனால் இவ்வாறு யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நிலையில் ஒரு செயலைச் செய்தால் அந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுகின்ற வரை அந்தச் செயலைத் தொடர வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலசைத்தார்கள் என்ற செய்தியையும் இவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைத்தார்கள் என்றால் அந்த அமர்வு முழுவதிலும் விரலை அசைத்தார்கள் என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.

மேலும் வருங்கால வினைச் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் அசைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று தான்பொருள் கொள்ள வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அதுவும் இந்தக் கேள்விக்குப் பதிலாக அமைந்துள்ளது.

வேகமாகவா? அல்லது மெதுவாகவா?

ஒரு செயலை நபியவர்கள் கற்றுக் கொடுத்து அதில் ஒரு அம்சத்தை அவர்கள் மூடலாகவிட்டுவிட்டால் அந்த விசயத்தில் நடுநிலையைப் பேணிக்கொள்ள வேண்டும்.

அதி வேகமாகவும் அசைக்கக் கூடாது. அசைப்பது தெரியாத அளவுக்கு மிக மெதுவாகவும் அசைக்கக் கூடாது. இதில் நடுநிலையை பேணிக் கொள்ள வேண்டும்.

இருப்பில் விரலை நீட்டி வைக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. இப்போது இவர்களிடம் ஒருவர் விரலை விரைப்பாக நீட்ட வேண்டுமா? அல்லது சாதாரணமாக நீட்டினால் போதுமா? என்று கேட்டால் சாதாரணமாக நீட்டினால் போதுமானது என்று கூறுவார்கள்.

இருப்பில் எப்போது இஷாரா செய்ய வேண்டும்?

விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் இஷாரா என்று கூறுபவர்கள் இருப்பின் ஆரம்பத்திலிருந்து இந்தச் செயலைச் செய்வதில்லை. அத்தஹிய்யாத்தில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டிய இடம்வரும் போது தான் ஆட்காட்டி விரலை உயர்த்துவார்கள். இதற்கு முன்பு விரலை உயர்த்த மாட்டார்கள்.

இவ்வாறு இருப்பின் இடையிலிருந்து விரலை உயர்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. ஏன் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியைக் கூட இதற்கு ஆதாரமாகக் காட்ட முடியாது.

ஆனால் இன்றைக்கு சிலர் விசித்திரமான விளக்கங்களைக் கூறி இச்செயலுக்கு ஆதாரம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள். பின்வரும் செய்தியை அடிப்படையாக வைத்து தவறான விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.

1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆச் செய்யும் போது தமது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.

நூல் : நஸாயீ

துஆ செய்யும் போது இஷாரா செய்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் தான் துஆ என்று கூறுகின்றனர். கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் துஆ என்ற வார்த்தையால் கூறப்பட்டுள்ளது என்று சில ஹதீஸ்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே இருப்பில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது இஷாரா செய்ய வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை துஆ எனக் கூறலாம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இதன் மூலம் இவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.

ஏனென்றால் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் உட்பட இருப்பில் ஓதப்படும் அனைத்துக்கும் துஆ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

இருப்பில் அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று துவங்கி இறைவனைப் புகழ்கிறோம். இது துஆ இல்லையா?

மேலும் நபியே உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும் என்று இருப்பில் கூறுகிறோம். இது தெளிவான பிரார்த்தனையாக இருந்தும் இந்த இடங்களில் இவர்கள் இஷாரா செய்வதில்லை. ஏன் இவையெல்லாம் துஆ இல்லையா?

பின்வரும் ஹதீஸ்கள் இருப்புக்கு வந்தவுடன் இஷாரா செய்ய வேண்டும் என்றும் துஆ என்பது அத்தஹிய்யாத் அமர்வு முழுவதையும் குறிக்கும் என்பதையும் தெளிவாகக் கூறுகின்றது.

விரலசைப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயலா?

இஷாரா என்றால் நாம் சொல்ல விரும்பும் கருத்தை செயலால் சொல்வதாகும். தொழுகையில் ஆட்காட்டி விரலை இஷாரா செய்வதன் மூலம் இறைவன் ஒருவன் தான் என்ற கருத்தை நமது செயலால் வெளிப்படுத்துகிறோம்.

எனவே இருப்பில் விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் ஏகத்துவத்தை வெளிப்படும் செயல் என்றும். விரலை அசைத்துக் கொண்டிருப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்றும் வாதிடுகின்றனர்.

முதலில் இருப்பில் விரலசைப்பதற்கான காரணம் இது தான் என்பதை அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ கூறவில்லை. காரணம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பதால் இதற்குக் கட்டுப்படுவது அவசியம்.

ஒரு பேச்சுக்கு ஏகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இஷாரா செய்கிறோம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அது நமது நிலைபாட்டுக்கு எதிரான வாதம் இல்லை.

ஏனென்றால் ஒரு விரலை அசைப்பதால் இரண்டு இறைவன் என்ற கருத்தோ, இறைவனே இல்லை என்ற கருத்தோ வராது. மாறாக இதுவும் ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் செயலாகும். விரலை அசைக்கும் போது தான் இறைவன் ஒருவன் என்ற கருத்தை பல முறை வெளிப்படுத்துகிறோம்.

ஒரு விரலை அசைப்பதற்குப் பதிலாக இரண்டு விரலை அசைத்தால் அது ஏகத்துவத்துக்கு எதிரானது என்று கூறலாம். ஒரு விரலை அசைப்பதை இவ்வாறு கூற முடியாது.

இது ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான செயலாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் காலத்தில் நபித்தோழர்களும் இதை செய்திருக்க மாட்டார்கள்.

எனவே ஹதீஸிற்கு எதிரான இவர்களுடைய யூகத்தைக் கொண்டு நபிவழியை மறுத்துவிடக் கூடாது.

விரலசைக்கக் கூடாது என்போர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். அவை சரியா என்பதைப் பார்ப்போம்.

ஆதாரம் ஒன்று

 911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடதுகால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.

நூல் : முஸ்லிம்

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பில் சுட்டு விரலை உயர்த்துவார்கள் என்று இருப்பதால் விரலை நீட்டி வைத்திருக்க வேண்டும். அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இந்தச் செய்தியில் இந்தக் கருத்து சொல்லப்படவில்லை. விரலை நீட்ட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அசைக்கக் கூடாது என்று சொல்லப்படவில்லை.

நாம் விரலை அசைக்கும் போது விரலை நீட்டிய நிலையில் தான் அசைத்துக் கொண்டிருக்கின்றோம்.

விரலை நீட்டுவதும், அசைப்பதும் ஒன்றுக்கொன்று முரணான காரியங்கள் இல்லை. இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது.

இவர்கள் காட்டிய செய்தியில் விரலை நீட்டிய தகவல் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் நீட்டுதலும், அசைத்தலும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் இரண்டு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலை (ரஃபஅ) உயர்த்தினார்கள் என்ற கருத்தில் இப்னு மாஜாவிலும் (902) அபூதாவூதிலும் (840) ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஹதீஸ்களையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

திர்மிதியில் 3511 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் பசதஸ் ஸப்பாபத என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சுட்டு விரலை நீட்டினார்கள் என்பது இதன் பொருள்.

உயர்த்தினார்கள் என்பதிலும், நீட்டினார்கள் என்பதிலும் வார்த்தை வேறுபாடு மட்டுமே உள்ளது. இரண்டின் பொருளும் ஒன்று தான்.

எனவே ஹதீஸ்கள் மொத்தம் நான்காக இருந்தாலும் அனைத்திலும் ஒரே விசயம் தான் கூறப்பட்டுள்ளது. எனவே மேல்சொன்ன அனைத்து விளக்கங்களும் இந்த செய்திகளுக்கும் பொருந்தக்கூடியது.

ஆதாரம் மூன்று

1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي

வாஇல் பின் ஹுஜுர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத் தில் (இருப்பில்) அமர்ந்த போது, தமது இடக்காலைப் படுக்க வைத்து, வலக்காலை நட்டு வைத்தார்கள். தமது வலக் கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, (ஆட்காட்டி) விரலைப் பிரார்த்தனைக்காக நீட்டினார்கள். தமது இடக்கையை இடப்பக்கத் தொடையின் மீது வைத்தார்கள்.

நூல் : நஸாயீ (1147)

இந்தச் செய்தியில் நீட்டினார்கள் என நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் நஸப என்ற அரபுச் சொல் ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

நஸப என்ற அரபுச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இங்கே உயர்த்தினார்கள் நீட்டினார்கள் என்ற அர்த்தத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சொல்லுக்கு ரஃபஅ (உயர்த்தினார்கள்) என்ற பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

நாம் எந்தப் பொருளை உயர்த்தினாலும் அதற்கு நஸப என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாக்க் காட்டும் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் விரலை உயர்த்தி அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ரஃபஅ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில் உயர்த்தினார்கள் என்பதைக் குறிக்க நஸப என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ கிரந்தத்தில் 1147 வது செய்தியாகஇடம்பெற்றுள்ளது.

1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي

நஸப என்ற சொல்லும் ரஃபஅ என்ற சொல்லும் உச்சரிப்பதில் வேறுபட்டாலும் இரண்டின் பொருளும் ஒன்று தான். விரலை உயர்த்தினார்கள் என்ற கருத்தையே இரண்டு வார்த்தைகளும் தருகின்றன.

எனவே ரஃபஅ என்ற சொல் இடம்பெற்ற ஹதீஸிற்கு நாம் அளித்த பதில் அனைத்தும் நஸப என்ற சொல் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸிற்கும் பொருந்தக்கூடியது.

முன்பு நாம் அளித்த விளக்கங்களை மீண்டும் ஒரு முறை படித்தால் இந்தச் செய்தியில் விரலை அசைக்கக் கூடாது என்ற கருத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறப்படவில்லை என்பதை அறியலாம்.

நஸப என்ற சொல்லுக்கு மரம் செடி கொடிகளை நடுதல் என்ற பொருளும் உள்ளது. நடப்பட்ட மரம் செடி கொடிகள் அசையக் கூடியவையாகும். இவை அசைவதால் இவை நடப்படவில்லை என்று யாரும் சொல்ல மாட்டோம்.

இந்த அடிப்படையில் விரலை நஸப் செய்தார்கள் என்பதையும் விளங்கினால் இதில் விரலைப்பதற்கு எதிரான கருத்து ஒன்றும் இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள்.

அரபு மொழியில் நஸப என்ற சொல்லுக்கு கீழே தாழ்த்தி மேலே உயர்த்துதல் என்ற பொருளும் உள்ளது.

جمهرة اللغة -نصب وَالنّصب من قَوْلهم: نصب الْقَوْم السّير نصبا إِذا رَفَعُوهُ. وكل شَيْء رفعته فقد نصبته.

கூட்டத்தினர் நடந்து செல்லும் போது அடியெடுத்து வைப்பதற்கு நஸப என்று சொல்லப்படும். நீ எந்த பொருளை உயர்த்தினாலும் அதை நஸப் செய்து விடுகின்றாய்.

நூல் : ஜம்ஹரதுல் லுஃகா

لسان العرب - . والنَّصِبُ: المريضُ الوَجِعُ؛ وَقَدْ نَصَبه الْمَرَضُ وأَنْصَبه. والنَّصْبُ: وَضْعُ الشيءِ ورَفْعُه

ஒரு பொருளைத் தாழ்த்தி அதை உயர்த்துவதற்கு நஸப் என்று சொல்லப்படும்.

நூல் : லிசானுல் அரப்

நடந்து செல்லும் போது காலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்துவோம். இவ்வாறு உயர்த்துவதும், தாழ்த்துவதும் இருந்தால்அதற்கு நஸப என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என மேற்கண்ட அரபு அகராதி நூற்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அர்த்தத்தை இவர்கள் ஆதாரமாகக் காட்டிய செய்தியில் பொருத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்தினார்கள் என்ற பொருள் தான் வரும்.

எனவே விரலை அசைப்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கும் இந்த ஹதீஸை இதற்கு எதிரான ஆதாரம் என்று இவர்கள் தவறாக விளங்கிக் கொண்டார்கள்.

ஆதாரம் நான்கு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தமது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.

நூல் : நஸாயீ

ஒரு செயல் நடந்தது என்று ஒருவரும், நடக்கவில்லை என்று இன்னொருவரும் கூறினால் ஹதீஸ் கலை விதியின் அடிப்படையில் செயல் நடந்தது என்று கூறுபவரின் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செயல் நடக்கவில்லை என்று அறிவிப்பவர் அந்தச் செயலைப் பார்க்காமல் விட்டிருப்பார். இவரல்லாத மற்றவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஒருவர் கொலை செய்ததை இரண்டு பேர் பார்த்து சாட்சி சொல்கிறார்கள். குறுக்கு விசாரணைக்குப் பின்னர் இவர்கள் நல்ல சாட்சிகள் என்று உறுதியாகி விடுகிறது. இப்போது ஊரே திரண்டு வந்து இவர் கொலை செய்யவில்லை என்று சொன்னாலும் அதை உலகின் எந்த நீதிமன்றமும் ஏற்காது. அவர் கொலை செய்வதை இவர்கள் பார்க்கவில்லை என்பதால் பார்த்தவர்களின் கூற்று பொய்யாகி விடாது.

இந்த விதியின் அடிப்படையில் பார்த்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைக்கவில்லை என்ற செய்தியை ஏற்க முடியாது. மாறாக விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை ஏற்பது தான் சரியானது.

மேலும் இந்த ஹதீஸில் அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க மாட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. துஆ செய்யும் போது விரலை அசைக்க மாட்டார்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் விரல் அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் அத்தஹிய்யாத் இருப்பில் அதைச் செய்த்தாக தெளிவாகக் கூறுகிறது.

இந்த ஹதீஸை முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து நால்வர் அறிவித்துள்ளனர்.

லைஸ் பின் சஅத்,

அபூ காலிதில் அஹ்மர்,

இப்னு உஐனா,

யஹ்யா பின் சயீத்

இந்த நால்வரும் தங்களுடைய அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஷாராச் செய்வார்கள் என்ற தகவலை மட்டுமே அறிவிக்கின்றனர்.

முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் ஸியாத் மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஹதீஸை ஆமிர் பின் அப்தில்லாஹ்விடமிருந்து முஹம்மது பின் அஜ்லான் மட்டும் அறிவிக்கவில்லை. உஸ்மான் பின் ஹகீம் மக்ரமா பின் புகைர் முஹம்மது பின் அஜ்லான் ஆகிய மூவர் இந்த ஹதீஸை ஆமிரிடமிருந்து அறிவிக்கின்றனர்.

இந்த மூவரில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அல்லாத மற்ற இருவரும் இந்த வாசகத்தைக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் இஷாரா (சமிக்கை) செய்வார்கள் என்று மட்டுமே அறிவித்துள்ளனர்.

எனவே ஷாத் என்று கூறுவதாக இருந்தால் இவர்கள் ஆதாரமாகக் காட்டும் மேற்கண்ட ஹதீஸைத் தான் ஷாத் என்று கூறவேண்டும்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account