ஜும்ஆவின் பின் சுன்னத் எத்தனை ரக்அத்கள்

ஜும்ஆ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஜும்ஆவின் பின் சுன்னத் எத்தனை ரக்அத்கள்

ஜும்மாவுக்குப் பின்னால் நான்கு ரக்அத்களும் தொழலாம். இரண்டு ரக்அத்களும் தொழலாம்.

அதற்கான ஆதாரங்கள்

صحيح البخاري 

937 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»

937 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும், பின்பு இரண்டு ரக்அத்களும், மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு தமது இல்லத்தில் இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஜுமுஆத் தொழுகைக்குப் பின் தம் இல்லத்திற்குத் திரும்பிச் செல்லாத வரை தொழ மாட்டார்கள். (இல்லத்திற்குச் சென்றதும்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

صحيح مسلم 

67 - (881) وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا»

உங்களில் ஒருவர் ஜும்மா தொழுததும் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account