Sidebar

02
Fri, May
2 New Articles

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?

பள்ளிவாசல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமா? தொப்பி போடாமல் தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா?

முஹம்மத் மிஸ்பாஹுல்லாஹ்

பதில்:

எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது.

நம்முடைய பகுதியில் மார்க்கம் அங்கீகரித்த பள்ளிவாசல்கள் இருந்தால் அங்கு சென்று தொழுகையை நிறைவேற்ற வேண்டும். கடமையான தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்றுவது இந்தச் சூழ்நிலையில் தான் நம் மீது கடமையாகும்.

நம் பகுதியில் தொழ தடைசெய்யப்பட்ட பள்ளிகள் மட்டும் இருந்தால் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம்.

பள்ளியில் தொழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே எண்ணத்திற்கு நற்கூலி வழங்கப்படும் என்ற அடிப்படையில் பள்ளியில் தொழுத நன்மை இவர்களுக்குக் கிடைக்கும்.

எனவே அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் இல்லை என்பதைக் காரணமாகக் கூறிக்கொண்டு தடைசெய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று விடக்கூடாது.

மார்க்கம் தடைசெய்த காரியத்தைச் செய்து நன்மையைச் சம்பாதிக்க முடியாது. அப்படிச் செய்தால் அந்தச் செயலுக்கு நன்மை கிடைக்காததோடு மார்க்க வரம்பை மீறிய குற்றம் ஏற்படும்.

ஒருவர் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தவருடைய செல்வத்தைத் திருடி தர்மம் செய்தால் இவர் நன்மை செய்தவராக மாட்டார். திருட்டுக் குற்றத்தைச் செய்த பாவியாகி விடுவார்.

எனவே மார்க்க உத்தரவுகளை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டும். மார்க்கம் தடை செய்த விஷயங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட வேண்டும்.

7288 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான் அவர்களை அழித்தது. ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 7288

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account