மூஸா நபி போடப்பட்டது கடலிலா? ஆற்றிலா?
மூசா நபியை சிறு வயதில் அவரது தாயார் ஆற்றில் போட்டார்களா? அல்லது கடலிலா?
சலாம்
பதில்
أَنْ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِي وَعَدُوٌّ لَهُ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي(39)20
இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.
திருக்குர்ஆன் 20 : 39
وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنْ الْمُرْسَلِينَ(7)28
இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம் என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.
திருக்குர்ஆன் 28 : 7
மேலுள்ள இரு வசனங்களிலும் கடல் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் அல்யம்மு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல் என்பது இவ்வார்த்தையின் பொருள் என பல அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வார்த்தை கடல் என்ற அர்த்தத்தில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் இவ்வார்த்தைக்கு நதி என்ற பொருளும் இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்கள் தங்கள் கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மூசா (அலை) அவர்களின் தாயார் மூசா (அலை) அவர்களை நைல் நதியில் போட்டார்கள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்தே இவ்வார்த்தைக்கு நதி என்ற பொருளும் இருப்பதாக இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் மூசா நபியின் தாயார் நைல் நதியில் தான் போட்டார் என்பதற்கு குர்ஆனிலோ, நபிமொழியிலோ எந்தச் சான்றும் இல்லை. எனவே இவார்த்தைக்குரிய சரியான பொருளின் படி கடலில் போட்டார்கள் என்ற கருத்தே ஏற்புடையது.
18.04.2011. 3:43 AM
மூஸா நபி போடப்பட்டது கடலிலா? ஆற்றிலா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode