103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்
இவ்வசனம் (3:179) நயவஞ்சகர்கள் விரைவில் அடையாளம் காட்டப்படுவார்கள் எனக் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி நயவஞ்சகர்கள் ஏமாற்றி வந்தனர். எனவே உண்மை முஸ்லிம்கள் யார்? போலிகள் யார்? என்பதைக் கண்டறிய முடியாமல் இரு வகையினரும் கலந்திருந்தனர்.
நெருக்கடியான நேரத்தில் போர்க் களம் செல்லுமாறு கட்டளையிட்டு உண்மை முஸ்லிம்களை அடையாளம் காட்டியதால், தக்க காரணமின்றி யார் போருக்கு வராமல் பின்தங்கினார்களோ அவர்கள் உண்மை முஸ்லிம்கள் அல்லர் என்பது வெட்ட வெளிச்சமானது. அதைத்தான் இவ்வசனம் (3:179) கூறுகிறது.
104வது குறிப்பையும் காண்க.
103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode