Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் : 7 தயம்மும் (334-348)

புகாரி தமிழாக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 7 தயம்மும்

وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا، فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ} [المائدة: 6]

அல்லாஹ் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால்363 தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.68 மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

பாடம் : 1

334 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ، فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالُوا: أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَقَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ: مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي، «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا»

، فَقَالَ أُسَيْدُ بْنُ الحُضَيْرِ: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، قَالَتْ: فَبَعَثْنَا البَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ، فَأَصَبْنَا العِقْدَ تَحْتَهُ

334 நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒரு பயணத்தில் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். (மதீனாவிற்கருகிலுள்ள) பைதா' அல்லது தாத்துல்ஜைஷ்' எனுமிடத்தில் இருந்த போது எனது கழுத்தணி அவிழ்ந்து விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் மக்களும் முகாமிட்டனர். தண்ணீர் அருகில் அவர்கள் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா செய்ததை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வின் தூதரையும், மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்போது என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரையும், மக்களையும் தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இறைவன் நாடியதை எல்லாம் கூறி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடி மீது இருந்தது தான் என்னை அசையவிடாமல் செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும்' உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் (இது குறித்துக் குறிப்பிடுகையில்), அபூபக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பிய போது அதற்குக் கீழேயிருந்து (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடைத்தது

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

335 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ العَوَقِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: ح وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ النَّضْرِ، قَالَ: أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا سَيَّارٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ هُوَ ابْنُ صُهَيْبٍ الفَقِيرُ، قَالَ: أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً "

335 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

2. பூமி சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் தொழுதுவிடட்டும்.

3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

4. (மறுமையில்) பரிந்துரை செய்யும் வாய்ப்பு, கொடுக்கப்பட்டுள்ளேன்.

5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

بَابُ إِذَا لَمْ يَجِدْ مَاءً وَلاَ تُرَابًا

பாடம் : 2 தண்ணீரோ மண்ணோ கிடைக்கவில்லையானால் (என்ன செய்ய வேண்டும்?)

336 - حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا فَوَجَدَهَا، «فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَصَلَّوْا، فَشَكَوْا ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ»

فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ لِعَائِشَةَ: جَزَاكِ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ تَكْرَهِينَهُ، إِلَّا جَعَلَ اللَّهُ ذَلِكِ لَكِ وَلِلْمُسْلِمِينَ فِيهِ خَيْرًا

336 :ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையை இரவல் வாங்கினார்கள். அது தொலைந்து போய்விட்டது. அதைத் தேடிப்பார்க்க ஒருவரை அனுப்பினார்கள். அந்த மாலை கிடைத்தது. தேடிச்சென்றவர்களுக்கு தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை என்பதால் அவர்கள் தொழுதுவிட்டார்கள். (திரும்பி வந்ததும்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போது தான் அல்லாஹ் தயம்மும்' உடைய (4:43ஆவது) வசனத்தை அருளினான்.

ஆகவே (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களுக்கு நேரும்போதெல்லாம் அதை உங்களுக்குச் சாதகமாகவே அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். மேலும் அதில் முஸ்லிம்களுக்கு (சமுதாய) நலனை நல்கியே இருக்கின்றான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உர்வா பின் ஸுபைர்

بَابُ التَّيَمُّمِ فِي الحَضَرِ، إِذَا لَمْ يَجِدِ المَاءَ، وَخَافَ فَوْتَ الصَّلاَةِ

பாடம் : 3 சொந்த ஊரில் இருக்கும் போது தண்ணீர் கிடைக்காமல் தொழுகையின் நேரம் சென்றுவிடுமோ என்று அஞ்சினால் தயம்மும் செய்துகொள்ளலாம்.

وَبِهِ قَالَ عَطَاءٌ:

 وَقَالَ الحَسَنُ: «فِي المَرِيضِ عِنْدَهُ المَاءُ، وَلاَ يَجِدُ مَنْ يُنَاوِلُهُ يَتَيَمَّمُ»

 وَأَقْبَلَ ابْنُ عُمَرَ: «مِنْ أَرْضِهِ بِالْجُرُفِ فَحَضَرَتِ العَصْرُ بِمَرْبَدِ النَّعَمِ  فَصَلَّى، ثُمَّ دَخَلَ المَدِينَةَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ فَلَمْ يُعِدْ»

இவ்வாறே அதாவு அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோயாளியிடம் தண்ணீர் இருந்தும் அதை அவருக்கு ஊற்றித்தர ஆள் கிடைக்காவிட்டால் அவர் தயம்மும்' செய்து கொள்ளலாம் என்று ஹஸன் (அல்பசரி) கூறுகிறார்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜுருஃப்' எனும் தம் நிலத்திலிருந்து (மதீனாவை நோக்கி) வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மர்பதுந் நஅம்' எனுமிடத்தை அடைந்த போது அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து) தொழுதார்கள். பிறகு மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருந்தது (மறையவில்லை). ஆயினும் அவர்கள் அந்த அஸ்ர் தொழுகையை திரும்பத் தொழவில்லை.

337 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ: سَمِعْتُ عُمَيْرًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ، مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي جُهَيْمِ بْنِ الحَارِثِ بْنِ الصِّمَّةِ الأَنْصَارِيِّ، فَقَالَ أَبُو الجُهَيْمِ الأَنْصَارِيُّ «أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَحْوِ بِئْرِ جَمَلٍ فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الجِدَارِ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ»

337 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியாரான மைமூனா (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான அப்துல்லாஹ் அவர்களும், நானும் அபூஜுஹைம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) பிஃரு ஜமல்' எனும் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து ஸலாம் சொன்னார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக பதில் ஸலாம் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் போய் தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொண்ட பின்னர் அவருக்கு பதில் ஸலாம் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உமைர் பின் அப்துல்லாஹ்

بَابٌ: المُتَيَمِّمُ هَلْ يَنْفُخُ فِيهِمَا؟

பாடம் : 4 தயம்மும் செய்பவர் இரு கைகளிலும் ஊத வேண்டுமா?

338 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أُصِبِ المَاءَ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ لِعُمَرَ بْنِ الخَطَّابِ: أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَفَرٍ أَنَا وَأَنْتَ، فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فَصَلَّيْتُ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صلّى الله عليه وسلم، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا» فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَفَّيْهِ الأَرْضَ، وَنَفَخَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ

338 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு தண்ணீர் கிடைக்கவில்லை. (நான் என்ன செய்வது) என்று கேட்டார்.

அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், நானும், நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது (தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சொன்ன போது தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள் வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து இவ்வாறு செய்திருந்தால் அது உமக்குப் போதுமே' எனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

بَابُ التَّيَمُّمِ لِلْوَجْهِ وَالكَفَّيْنِ

பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவது தான் தயம்மும்.

339 - حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي الحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ عَمَّارٌ: «بِهَذَا وَضَرَبَ - شُعْبَةُ - بِيَدَيْهِ الأَرْضَ، ثُمَّ أَدْنَاهُمَا مِنْ فِيهِ، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ» وَقَالَ النَّضْرُ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، قَالَ: سَمِعْتُ ذَرًّا، يَقُولُ: عَنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ الحَكَمُ: وَقَدْ سَمِعْتُهُ مِنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَمَّارٌ

339 அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது.

மேலும் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் அவர்கள் தம்மிரு கைகளால் தரையில் அடித்து அவ்விரு கைகளையும் தம் வாயருகே கொண்டுசென்று பின்னர் தமது முகத்தையும் (மணிக்கட்டுவரை) இருகைகளையும் தடவி(க் காட்டி)னார்கள் என்பதும் இந்த அறிவிப்பில் அதிகப்படியாக இடம் பெறுகிறது.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

340 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ عُمَرَ وَقَالَ لَهُ عَمَّارٌ: «كُنَّا فِي سَرِيَّةٍ، فَأَجْنَبْنَا»، وَقَالَ: «تَفَلَ فِيهِمَا»

340 நான் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அம்மார் அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் நாம் ஒரு படைப்பிரிவில் இருந்தோம். அப்போது நமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டது (எனத்தொடங்கி) மேற்கண்ட ஹதீஸிலுள்ளது போன்றே அறிவித்துள்ளார்கள். மேலும் தம்மிரு கைகளிலும் ஊதினார்கள்' என்று இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

341 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: قَالَ عَمَّارٌ لِعُمَرَ: تَمَعَّكْتُ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَكْفِيكَ الوَجْهَ وَالكَفَّيْنِ»

341 அம்மார் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், மண்ணில் புரண்ட நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகமும், இரு மணிக்கட்டுகளும் உமக்கு (தயம்மும் செய்யப்) போதும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

342 - حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: شَهِدْتُ عُمَرَ، فَقَالَ لَهُ عَمَّارٌ، وَسَاقَ الحَدِيثَ

342 மேற்கண்ட ஹதீஸ் அப்படியே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இடம் பெறுகிறது.

343 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَمَّارٌ: «فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الأَرْضَ، فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ»

343 அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை தரையில் அடித்துத் தமது முகத்தையும் இரு மணிக்கட்களையும் தடவி(க் காட்டி)னார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா

بَابٌ: الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ المُسْلِمِ، يَكْفِيهِ مِنَ المَاءِ

பாடம் : 6 தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்லிமுக்கு உளூவுக்குப் பகரமாக போதும்.

وَقَالَ الحَسَنُ: «يُجْزِئُهُ التَّيَمُّمُ مَا لَمْ يُحْدِثْ»

 وَأَمَّ ابْنُ عَبَّاسٍ وَهُوَ مُتَيَمِّمٌ "

 وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: «لاَ بَأْسَ بِالصَّلاَةِ  عَلَى السَّبَخَةِ وَالتَّيَمُّمِ بِهَا»

ஒரு தடவை ஒருவர் தயம்மும் செய்துவிட்டால் சிறுதுடக்கு ஏற்படாதவரை அந்த தயம்மும் அவருக்குப் போதமானதாக அமையும் என ஹஸன் அல்பஸரி அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து கொண்டு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.

யஹ்யா பின் சயீத் அவர்கள், உவர் நிலத்தில் தொழுவதோ, அந்நிலத்தில் தயம்மும் செய்வதோ குற்றமல்ல என்று கூறியுள்ளார்கள்.

344 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، قَالَ: كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا أَسْرَيْنَا حَتَّى كُنَّا فِي آخِرِ اللَّيْلِ، وَقَعْنَا وَقْعَةً، وَلاَ وَقْعَةَ أَحْلَى عِنْدَ المُسَافِرِ مِنْهَا، فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ، وَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ - يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ فَنَسِيَ عَوْفٌ ثُمَّ عُمَرُ بْنُ الخَطَّابِ الرَّابِعُ - وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ، لِأَنَّا لاَ نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ رَجُلًا جَلِيدًا، فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ، فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ بِصَوْتِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا اسْتَيْقَظَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ، قَالَ: «لاَ ضَيْرَ - أَوْ لاَ يَضِيرُ - ارْتَحِلُوا»، فَارْتَحَلَ، فَسَارَ غَيْرَ بَعِيدٍ، ثُمَّ نَزَلَ فَدَعَا بِالوَضُوءِ، فَتَوَضَّأَ، وَنُودِيَ بِالصَّلاَةِ، فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلاَتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ القَوْمِ، قَالَ: «مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ القَوْمِ؟» قَالَ: أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ، قَالَ: «عَلَيْكَ بِالصَّعِيدِ، فَإِنَّهُ يَكْفِيكَ»، ثُمَّ سَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ العَطَشِ، فَنَزَلَ فَدَعَا فُلاَنًا - كَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ نَسِيَهُ عَوْفٌ - وَدَعَا عَلِيًّا فَقَالَ: «اذْهَبَا، فَابْتَغِيَا المَاءَ» فَانْطَلَقَا، فَتَلَقَّيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ - أَوْ سَطِيحَتَيْنِ - مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا، فَقَالاَ لَهَا: أَيْنَ المَاءُ؟ قَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ وَنَفَرُنَا خُلُوفٌ، قَالاَ لَهَا: انْطَلِقِي، إِذًا قَالَتْ: إِلَى أَيْنَ؟ قَالاَ: إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ، قَالاَ: هُوَ الَّذِي تَعْنِينَ، فَانْطَلِقِي، فَجَاءَا بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَاهُ الحَدِيثَ، قَالَ: فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا، وَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ، فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ المَزَادَتَيْنِ - أَوْ سَطِيحَتَيْنِ - وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا وَأَطْلَقَ العَزَالِيَ، وَنُودِيَ فِي النَّاسِ اسْقُوا وَاسْتَقُوا، فَسَقَى مَنْ شَاءَ وَاسْتَقَى مَنْ شَاءَ وَكَانَ آخِرُ ذَاكَ أَنْ أَعْطَى الَّذِي أَصَابَتْهُ الجَنَابَةُ إِنَاءً مِنْ مَاءٍ، قَالَ: «اذْهَبْ فَأَفْرِغْهُ عَلَيْكَ»، وَهِيَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يُفْعَلُ بِمَائِهَا، وَايْمُ اللَّهِ لَقَدْ أُقْلِعَ عَنْهَا، وَإِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْنَا أَنَّهَا أَشَدُّ مِلْأَةً مِنْهَا حِينَ ابْتَدَأَ فِيهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا لَهَا» فَجَمَعُوا لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا، فَجَعَلُوهَا فِي ثَوْبٍ وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا، قَالَ لَهَا: «تَعْلَمِينَ، مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا»، فَأَتَتْ أَهْلَهَا وَقَدِ احْتَبَسَتْ عَنْهُمْ، قَالُوا: مَا حَبَسَكِ يَا فُلاَنَةُ، قَالَتْ: العَجَبُ لَقِيَنِي رَجُلاَنِ، فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ فَفَعَلَ كَذَا وَكَذَا، فَوَاللَّهِ إِنَّهُ لَأَسْحَرُ  النَّاسِ مِنْ بَيْنِ هَذِهِ وَهَذِهِ، وَقَالَتْ: بِإِصْبَعَيْهَا الوُسْطَى وَالسَّبَّابَةِ، فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ - تَعْنِي السَّمَاءَ وَالأَرْضَ - أَوْ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا، فَكَانَ المُسْلِمُونَ بَعْدَ ذَلِكَ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ المُشْرِكِينَ، وَلاَ يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ مِنْهُ، فَقَالَتْ: يَوْمًا لِقَوْمِهَا مَا أُرَى أَنَّ هَؤُلاَءِ القَوْمَ يَدْعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي الإِسْلاَمِ؟ فَأَطَاعُوهَا، فَدَخَلُوا فِي الإِسْلاَمِ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " صَبَأَ: خَرَجَ مِنْ دِينٍ إِلَى غَيْرِهِ " وَقَالَ أَبُو العَالِيَةِ: «الصَّابِئِينَ فِرْقَةٌ مِنْ أَهْلِ الكِتَابِ يَقْرَءُونَ الزَّبُورَ»

344 நாங்கள் ஒரு பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் கடைசி நேரமான போது ஒரு தூக்கம் தூங்கினோம். பயணிக்கு அதை விட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. எங்களை சூரிய வெப்பம் தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னாராவார். அதற்கடுத்து இன்னார். அதற்கடுத்து இன்னார்.

அபூரஜாவு அம்மூவரின் பெயரையும் குறிப்பிட்டார்கள். ஆனால் அவரிடமிருந்து அறிவிப்பவரான அவ்ஃப் அவர்கள் அவர்களுடைய பெயர்களை மறந்துவிட்டார்கள்.-

நான்காவதாக உறக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களாவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கினால் அவர்கள் தாமாகவே விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து யாரும் எழுப்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச்செய்தி ஏதேனும் வருகிறதா?) என்று எங்களுக்குத் தெரியாது.

உறக்கத்திலிருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு ஏற்பட்டுவிட்ட நிலைமைப் பார்த்த போது (எல்லோரையும் எழுப்ப) அல்லாஹு அக்பர் என்று உரத்த குரலில் தக்பீர்' சொன்னார்கள். - உமர் (ரலி) அவர்கள் நெஞ்சுரம் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.- எனவே தொடர்ந்து உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுடைய சப்தத்தைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உறக்கத்திலிருந்து விழித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விழித்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டதை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பரவாயில்லை' அல்லது எந்தப் பாதிப்புமில்லை' இங்கிருந்து புறப்படுங்கள்! என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி உளூ செய்வதற்காக தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூ செய்தார்கள். தொழுகைக்காக அழைப்பு விடுவிக்கப்பட்ட பின் மக்களுக்கு தொழுவித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பிய போது அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இன்னாரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லை? என்று கேட்டார்கள். அவர், எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விட்டது; தண்ணீர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்குப் போதும் என்று சொன்னார்கள்.

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்த போது அவர்களிடம் மக்கள் தாகம் பற்றி முறையிட்டனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி இன்னாரை அழைத்தார்கள் - அவருடைய பெயரை அறிவிப்பாளர் அபூரஜாவு குறிப்பிட்டார்கள் ஆனால் அடுத்த அறிவிப்பாளர் அவ்ஃப் அதை மறந்துவிட்டார் –

(அவருடன்) அலீ (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து, நீங்கள் இருவரும் சென்று தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப் பாருங்கள்! என்றனர். அவ்வாறே அவர்கள் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்த போது தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே தமது ஒட்டகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், தண்ணீர் எங்கே (உள்ளது)? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், ஒரு நாள் பயண தொலைவில் உள்ளது  றாள்என் எங்கள் ஆட்கள் பின் னால்தங்கி விட்டனர் என்று கூறினாள்.

அப்படியானால் நீ நட! என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் எங்கே?' என்று கேட்டாள். அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினர். ஸாபிவு என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா? என்று அப்பெண் கேட்டாள். நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில் தான் என்று கூறிவிட்டு அப்பெண்ணை அவர்களிருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததை நபியவர்களிடம் கூறினர்.

(ஸாபிவு என்பதன் விளக்கம் அறிய ஸாபியீன்கள் என்ற இனைப்பைப் பார்க்கவும்)

மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத்திலிருந்து இறங்குமாறு கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச்சொல்லி அவ்விரு தோல்பைகளின் வாய்வழியாக தண்ணீரை பாத்திரத்தினுள் நிரப்பினார்கள். பிறகு அந்த தோல்பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, கீழ் வாய்களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே தண்ணீர் பருகுங்கள்; பிறர் பருகுவதற்காகவும் எடுத்துக் கொள்ளுங்கள்! என அறிவிக்கப்பட்டது. அவ்வாறே அவர்களும் தண்ணீர் பருகினர். சிலர் பருகினர். சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக் கொண்டனர். இதில் பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கு கடைசியாக ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி உங்கள் மீது ஊற்றிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்தப் பெண் தனது தண்ணீருக்கு என்(னென்)ன செய்யப்படுகிறது என்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மக்கள் தண்ணீர் எடுத்து முடிந்த போது அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்த போது இருந்ததை விட கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) இந்தப் பெண்ணுக்காக திரட்டுங்கள்! என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங்கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட உணவுப் பண்டங்களைத் திரட்டி அதை ஒரு துணியிலிட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்திலமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர். பிறகு அப்பெண்ணிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தெரிந்துகொள்! உனது தண்ணீரிலிருந்து நாங்கள் சிறிதளவு கூட குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்கு தண்ணீர் பருகச் செய்தான் என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண் தன் வீட்டாரிடம் நேரம் பிந்திப்போன போது அவர்கள், இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழிந்து வருகிறாய்? என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண், ஓர் அதிசயம் (நிகழ்ந்துவிட்டது.) இரு ஆடவர்கள் என்னைச் சந்தித்து ஸாபியீ என்று கூறப்படுகிற மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார் என்று கூறிவிட்டு, அப் பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட் காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையேயுள்ளவர்களில் மாயக்கார மனிதராக அவர் இருந்தார்' அல்லது உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்' என்று கூறினாள்.

அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணைவைப்பவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே போர் நடந்த போது அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே ஒரு நாள் அப்பெண் தம் கூட்டத்தாரிடம், இந்த மக்கள் வேண்டுமென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகிறார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாமில் (இணைய) உங்களுக்கு விருப்பம் உண்டா? என்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாமில் இணைந்தனர்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ஸாபிவு' எனும் சொல்லின் வினைச் சொல்லான) ஸபஅ' என்பதற்கு ஒரு மதத்திலிருந்து வெளியேறி இன்னொரு மதத்திற்குச் சென்றார் (மதம் மாறினார்)' என்று பொருள்.

அபுல் ஆ-யா (ரஃபீஉ பின் மிஹ்ரான்-ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸாபியீன்' மற்றும் இன்னொரு பிரதியிலுள்ளபடி ஸாபிஊன்' என்போர் ஸபூர் வாசித்து வந்த வேதக்காரர்களில் ஒரு பிரிவினர் ஆவர்.

ஸாபியீன்கள் பற்றி அறிய இந்த இணைப்பைப் பார்க்கவும்

بَابٌ: إِذَا خَافَ الجُنُبُ عَلَى نَفْسِهِ المَرَضَ أَوِ المَوْتَ، أَوْ خَافَ العَطَشَ، تَيَمَّمَ

பாடம் : 7 தண்ணீரைப் பயன்படுத்தினால், தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென குளியல் கடமையானவர் அஞ்சினால் அல்லது தன்னிடமுள்ள தண்ணீரைச் செலவழித்துவிட்டால் தாகத்தினால் சிரமப்பட நேரிடும் என்று அவர் பயந்தால் தயம்மும் செய்துகொள்ளலாம்.

وَيُذْكَرُ أَنَّ عَمْرَو بْنَ العَاصِ: " أَجْنَبَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ، فَتَيَمَّمَ وَتَلاَ: {وَلاَ تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ "

குளிரான ஓர் இரவில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விட்டது. ஆகவே அவர்கள் தயம்மும் செய்து கொண்டார்கள். நீங்கள் உங்களையே கொலை செய்துகொள்ளாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான் எனும் (4:29ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் (மதீனா திரும்பியதும்) இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

345 - حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ غُنْدَرٌ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَ أَبُو مُوسَى لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: «إِذَا لَمْ يَجِدِ المَاءَ لاَ يُصَلِّي؟» قَالَ عَبْدُ اللَّهِ: لَوْ رَخَّصْتُ لَهُمْ فِي هَذَا كَانَ إِذَا وَجَدَ أَحَدُهُمُ البَرْدَ قَالَ: هَكَذَا - يَعْنِي تَيَمَّمَ - وَصَلَّى، قَالَ: قُلْتُ: «فَأَيْنَ قَوْلُ عَمَّارٍ لِعُمَرَ؟» قَالَ: إِنِّي لَمْ أَرَ عُمَرَ قَنِعَ بِقَوْلِ عَمَّارٍ

345 அபூமூஸா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், ஒருவருக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் தொழ வேண்டாமல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், இது விஷயத்தில் நான் சலுகையளித்தால் குளிரடித்தால் கூட (அதைக் காரணம் காட்டி) மக்கள் இப்படி - தயம்மும் - செய்து கொண்டு தொழ ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறினார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், அப்படியானால் அம்மார் )ரலி) அவர்கள், உமர் )ரலி) அவர்களிடம் சொன்ன (தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தல் போதுமானது' என்பது பற்றிய) கூற்று எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், அம்மாரின் சொல்லைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் மனநிறைவு கொண்டதாக நான் கருதவில்லை என்றார்.

அறிவிப்பவர் : அபூவாயில்

346 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ، وَأَبِي مُوسَى، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ مَاءً، كَيْفَ يَصْنَعُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ المَاءَ، فَقَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَكْفِيكَ» قَالَ: أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ، فَقَالَ أَبُو مُوسَى: فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ، فَقَالَ: إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لَأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ المَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا؟ قَالَ: «نَعَمْ»

346 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அபூமூஸா (ரலி) ஆகியோர் அருகில் நான் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், அபூ அப்திர்ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூஸா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் (தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக அமைந்திருக்கும்' என்று சொன்னதாக அம்மார் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியை தம்மிடம் கூறிய போது உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று (திருப்பிக்)கேட்டார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், அம்மாரின் சொல்லை விடுங்கள். (தண்ணீர் கிடைக்காவிடில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் இந்த (5:6) இறைவசத்தை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். ஆயினும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இவ்விஷயத்தில் மக்களுக்கு சலுகையளித்தால் யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால் கூட உளூ செய்வதை விட்டுவிட்டு தயம்மும் செய்யப் போய்விடுவார்கள் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் கூறுகின்றார்கள்:

அப்படியானால் இந்தக் காரணத்தினால் தான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அதை வெறுத்தார்கள் என்கிறீர்களா? என்று ஷகீக் பின் சலமா அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷகீக் பின் சலமா

بَابٌ: التَّيَمُّمُ ضَرْبَةٌ

பாடம் : 8 தயம்மும் என்பது (இரு கைகளால்) ஒருமுறை (மண்ணில்) அடிப்பது தான் .

347 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى الأَشْعَرِيِّ، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: لَوْ أَنَّ رَجُلًا أَجْنَبَ فَلَمْ يَجِدِ المَاءَ شَهْرًا، أَمَا كَانَ يَتَيَمَّمُ وَيُصَلِّي، فَكَيْفَ تَصْنَعُونَ بِهَذِهِ الْآيَةِ فِي سُورَةِ المَائِدَةِ: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} [النساء: 43] فَقَالَ عَبْدُ اللَّهِ: لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذَا لَأَوْشَكُوا إِذَا بَرَدَ عَلَيْهِمُ المَاءُ أَنْ يَتَيَمَّمُوا الصَّعِيدَ. قُلْتُ: وَإِنَّمَا كَرِهْتُمْ هَذَا لِذَا؟ قَالَ: نَعَمْ، فَقَالَ أَبُو مُوسَى: أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدِ المَاءَ، فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَصْنَعَ هَكَذَا، فَضَرَبَ بِكَفِّهِ ضَرْبَةً عَلَى الأَرْضِ، ثُمَّ نَفَضَهَا، ثُمَّ مَسَحَ بِهِمَا ظَهْرَ كَفِّهِ بِشِمَالِهِ أَوْ ظَهْرَ شِمَالِهِ بِكَفِّهِ، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ» فَقَالَ عَبْدُ اللَّهِ: أَفَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ  عَمَّارٍ؟ وَزَادَ يَعْلَى، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ: كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى، فَقَالَ أَبُو مُوسَى: أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَنِي أَنَا وَأَنْتَ، فَأَجْنَبْتُ فَتَمَعَّكْتُ بِالصَّعِيدِ، فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْنَاهُ، فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا. وَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ وَاحِدَةً»

347 நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், பெருந்துடக்கு ஏற்பட்ட ஒரு மனிதருக்கு ஒரு மாத காலம் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யாமலும், தொழாமலும் இருக்கலாமா? அப்படியானால் அல் மாயிதா அத்தியாத்தில் வரும் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளாவிடில் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்துகொள்ளுங்கள் எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், இது விஷயத்தில் அனுமதி கொடுக்கப்பட்டால் தண்ணீர் அவர்களுக்கு குளிராகத் தெரிந்தால் கூட தயம்மும் செய்யப்போய்விடுவார்கள் என்றனர். (அறிவிப்பாளர் அஃமஷ் ரஹ் கூறுகிறார்கள்: ஷகீக் அவர்களிடம், இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுக்கின்றீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு ஷகீக் அவர்கள் ஆம்' என்று பதிலளித்தார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அவர்கள், கேட்டார்கள்: உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா? (அச்செய்தி வருமாறு:)

அம்மார் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னை ஒரு தேவைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மண்ணில் புரளுவது போன்று புரண்டேன்.

(ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்ன போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை பூமியில் ஒரு அடி அடித்து, பின்னர் அவற்றை உதறிவிட்டு தமது வலக் கரத்தால் இடது புறங்கையை' அல்லது தமது இடக்கரத்தால் வலது புறங்கையைத்' தடவினார்கள். பிறகு இரு கைகளால் தமது முகத்தையும் தடவிவிட்டு இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமானதாயிருந்திருக்கும் என்று கூறினார்கள்.

(இந்நிகழ்ச்சியை கேட்டுவிட்டு) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், அம்மார் சொன்னதில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பது உங்களுக்த் தெரியாதா? என்று (அபூமூஸா ரலி அவர்களிடம்) கேட்டார்கள்

ஷகீக் பின் சலமா அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் அதிகப்படியான தகவலும் இடம் பெறுகிறது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் பின்வரும் செய்தியைத் தெரிவித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும், உங்களையும் அனுப்பினார்கள். எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விட்டது. அப்போது நான் மண்ணில் புரண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் வந்து விஷயத்தைத் தெரிவித்த போது அவர்கள் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் ஒரேயொரு தடவை தடவிவிட்டு, இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமானதாயிருந்திருக்கும் என்று கூறியதாக உமர் (ரலி) அவர்களிடம்  அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியை நீர் கேள்விப்படவில்லையா? என்றனர்.

அறிவிப்பவர் : ஷகீக் பின் சலமா

பாடம் : 9

348 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ الخُزَاعِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مُعْتَزِلًا لَمْ يُصَلِّ فِي القَوْمِ، فَقَالَ: «يَا فُلاَنُ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ فِي القَوْمِ؟» فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ، قَالَ: «عَلَيْكَ بِالصَّعِيدِ فَإِنَّهُ يَكْفِيكَ»

348 ஒரு மனிதர் தொழுகையில் மக்களுடன் சேராமல் அவர்களை விட்டுத் தனியே விலகி இருப்பதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இன்னாரே! மக்களுடன் சேர்ந்து நீர் ஏன் தொழவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விட்டது; தண்ணீர் இல்லை என்று கொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மண்ணைப் பயன்படுத்தும். அது உமக்குப் போதுமாகும் என்றனர்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account