தராவீஹ் தொழுகையில் இடையில் தஸ்பீஹ் உண்டா?
ஒவ்வொரு நான்கு ரக்அத்கள் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர்.
முதல் நான்கு ரக்அத்கள் முடிவில் அபூபக்ர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும்,
இரண்டாவது நான்கு ரக்அத்கள் முடிந்த பின் உமர் (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்,
மூன்றாவது நான்கு ரக்அத்கள் முடிவில் உஸ்மான் (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்,
நான்காவது நான்கு ரக்அத்களுக்குப் பின் அலீ (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்
அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர்.
இவர்களைப் பற்றியெல்லாம் ஓதுவதிலிருந்தே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ள நடைமுறை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கு இடையே இவர்களின் பெயர்களைக் கூறும் போது அவர்களுக்காகத் தொழுதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
தொழுகை முடிந்த பின் எவரையும் புகழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறை அல்ல என்பதால் இதை விட்டொழிக்க வேண்டும்.
தராவீஹ் தொழுகையில் இடையில் தஸ்பீஹ் உண்டா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode