Sidebar

27
Sat, Jul
5 New Articles

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளுமாறு இவ்வசனம் (8:60) கூறுகிறது. படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை புரிந்து கொள்ளக் கூடாது.

மக்காவில் இருந்தபோதும், அபிஸீனியாவில் அடைக்கலம் பெற்ற போதும் முஸ்லிம்கள் இவ்வாறு படை திரட்டவில்லை. மாறாக மதீனாவில் நல்லாட்சியை அமைத்த பிறகுதான் இதைச் செய்தார்கள். அப்போது தான் இது சாத்தியமுமாகும்.

ஒரு நாடு உருவான பின் அது தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வதை யாராலும் குறை கூறமுடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லாட்சி அமைத்த பிறகு தான் இந்த வசனம் அருளப்பட்டது என்பதும் அவர்கள் மக்காவில் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்த போது அருளப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புக்ளைப் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account