391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது
இவ்வசனத்தில் (19:5) ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது பற்றிக் கூறப்படுகிறது.
ஒருவர் மரணித்த பின்னர் அவரது சொத்துக்களுக்கு உரிமையாளராக ஆகி அனுபவிப்பவரைத் தான் வாரிசு என்ற சொல் குறிக்கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாரிசு என்பதை அந்தப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் நபிமார்களின் சொத்துக்களுக்கு அவர்களின் பிள்ளைகள் வாரிசாக முடியாது என்பது நபிமொழி. (புகாரீ 2862, 2863, 3435, 3730, 3913)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொத்துக்களுக்கும், மற்ற நபிமார்களின் சொத்துக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் வாரிசாக ஆக முடியாது என்பதால் தாம் செய்து வந்த ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து செய்வதற்காகவே தமக்கு ஒரு சந்ததியை வேண்டினார்கள். இதன் காரணமாகவே 'எனக்கு ஒரு பொறுப்பாளரைத் தருவாயாக' எனக் குறிப்பிட்டார்கள்.
மேலும் 'அந்த வாரிசு எனக்கும், யாகூபுடைய குடும்பத்தாருக்கும் வாரிசாவார்' என்று ஸக்கரிய்யா நபி கூறியிருப்பதிலிருந்து சொத்துக்கு வாரிசு என்ற பொருளில் இது கூறப்படவில்லை என்பதை அறியலாம். ஏனெனில் யாகூப் நபியின் சொத்துக்களுக்கு ஸக்கரிய்யா நபியின் மகன் வாரிசாக முடியாது.
391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode