அத்தியாயம் : 87 அல்அஃலா
மொத்த வசனங்கள் : 19
அல்அஃலா - மிக உயர்ந்தவன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
2. அவனே படைத்தான்.368 ஒழுங்குற அமைத்தான்.
3. அவனே நிர்ணயித்தான். வழிகாட்டினான்.
4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
5. எனவே அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26
8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!
10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.
11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.
12. அவனே பெரும் நெருப்பில் எரிவான்.
13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.
15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.
16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26
அத்தியாயம் 87
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode